Arangar Pugal Maalai | Ongarakudil songs | Sendhoor Velanai
Arangar Pugal Maalai | Ongarakudil songs | Sendhoor Velanai
Arangar Pugal Maalai
Ongarakudil songs
Sendhoor Velanai
#Arangar Pugal Maalai
#Ongarakudil songs
#Sendhoor Velanai
மகான் அருணகிரிநாதர் அருளிய
அரங்கர் புகழ்மாலை
செந்தூர் வேலை சிந்தைவைத்த....
1. செந்தூர் வேலனை சிந்தைவைத்த
சிவராச யோகியே அரங்கா வாழி
வந்தவர்க்கு கருணை பெருக்காய்
வரமருளும் ஞான தேசிகா வாழி
2. வாழி என்று உன் சபைக்கு
வாழ்த்துக்கூறி அருணகிரியும்
மொழிகுவேன் புகழ்மாலையை
மக்கள் ஞானி மகா ஞானி
3. ஞானலோகம் மெச்சும் ஞானி
ஞானிகள் கூட்டம் அன்பால் கண்ட
வானவர்கள் வாழ்த்தும் தவசி
வள்ளலே அறம் தரும் அய்யனே
4. அய்யனே அறுமுகனும் உன்னுள்
அமர்ந்து அற்புதம் நடத்திட
மெய்யறிவு தேடும் மக்களே
மோன நிலை கண்ட அரங்கனை
5. அரங்கனை வணங்கி பணிந்து
ஆக்கம் தரும் தீட்சை அடைந்து
அரங்கன் தொண்டில் இணைந்து
ஆதரவாய் இருக்க வளமப்பா
6. அப்பனே சேவையிலுதவிட
அருள் பொருள் வளமெலாம்
காப்பாக கண்டு சிறப்பீர்
கடைநாளும் பீடை சோடை அனுகா
7. அனுகா ஆக்கை திடமுடன்
ஆனந்தம் யாவும் பெறுவர் ஞானவானை
பணிந்து வருக ஞானி ஆவர்
மக்கள் யாவரும் என்றேன்.
Comments
Post a Comment