2012 பிப்ரவரி மாத ஞானத்திருவடி


அகத்தியர் துணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஞானத்திருவடி ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மைப் பத்திரிக்கை | கர 3 மாசி (பிப்ரவரி - 2012)
விலை : ரூ.10/நிறுவனர், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள்
உள்ளடக்கம்)
11, சித்தர்கள் போற்றித் தொகுப்பு ....
2. மகான் அகத்தீசர் ஆசி நூல் ..
........................
3. சும்மா இரு என்னும் இரகசியம்
- குருநாதர் அருளுரை
................
|4. ஆத்திச்சூடி - குருநாதர் அருளுரை தொடர் .............
|5. "ஓம் அகத்தீசாய நம” .........
ஓங்காரக்குடில் நித்திய செயல்பாடுகள்
8 ஓங்காரக்குடில் ஆசான் 8 சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளிடம்
ஆசிபெறும் நேரம் தினசரி காலை 9.30 முதல் 11 மணி வரை மட்டுமே
4 ஞானத்திருவடி கலசமுனி உன்னத ஞான நூலாம் கண்டவர் கொண்டவர் வினை வென்று ஞாலமதில் பெரும்பேறு எட்டிடும் ஞானத்திருவடி நன்னூல் இதுவென்று என்றுமே ஆசி வழி விளக்கம் எடுத்துரைப்பேன் தொடர்ந்து உலகோர்க்கு நன்றுபெற பிரம்மம் வருவதுபோல் நம்பிக்கைகொள் நூலை தொடுமுன் முன்பாக மும்மூர்த்தியுமாக மூலவராக எந்தன் அவதார் துன்பமகற்றும் தவ ராசரை துவக்கிவிடு எண்ணி மனதுள் செபம்
- மகான் அகத்தியர் ஆசிநூல். அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,
ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.
ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். எனவே இந்நூல் ஞான வாழ்வு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம் தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமணியரும் நமது வீட்டில் இருந்து அருள்செய்வதாக எண்ண வேண்டும்.
மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 35 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில் கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான் சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள், ஞானிகளின் பாடல்களில் தான் உணர்ந்த பல இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு எளிய முறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல்.
இந்த ஞானத் திருவடி நூலின் விற்பனை வருவாய் அன்னதானப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அன்புடன் - இரா.மாதவன். திருவிளக்கு பூஜை உங்கள் பகுதியில் செய்ய தொடர்புக்கு
R.சுரேஷ் - 94434 21935
4 ஞானத்திருவடி
துவக்கப்பாடல்
ஓம் | ஓம்
திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும் திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும் திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும் . திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம் : திருவடிப்பேறு : 1598 ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று
உலகறியச் செய்யும் வள்ளல், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
தொகுத்து வழங்கிய சித்தர்கள் போற்றித் தொகுப்பு அகத்தியர்
திருவடிகள் போற்றி அகப்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி ஓம் அத்திரி மகரிஷி
திருவடிகள் போற்றி அநுமான்
திருவடிகள் போற்றி அம்பிகானந்தர்
திருவடிகள் போற்றி அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி ஓம் அருள் நந்திசிவாச்சாரியார் திருவடிகள் போற்றி அல்லமாபிரபு
திருவடிகள் போற்றி அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி 10 ஓம் இடைக்காடர்
திருவடிகள் போற்றி இராமலிங்கசுவாமிகள் திருவடிகள் போற்றி இராமதேவர்
திருவடிகள் போற்றி இராமானந்தர்
திருவடிகள் போற்றி உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி ஒளவையார்
திருவடிகள் போற்றி ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி ஒம் கடுவெளிச்சித்தர்
திருவடிகள் போற்றி ஓம் கண்ணானந்தர்
திருவடிகள் போற்றி 20
ஓம்
ஓம்)
ஓம் ஓம்
ஓம்
ஓம்
ஓம்
ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம்
ஓம்
ஓம்
ஓம்
ஓம் கண் ணிச்சித்தர் ஓம் கண நாதர்
கணபதிதாசர் கதம்பமகரிஷி கபிலர்
கமலமுனிவர் ஓம் கருவூர்தேவர் ஓம் கல்லுளிச்சித்தர்
கலைக்கோட்டு முனிவர்
கவுபாலச்சித்தர் ஓம் கனராமர்
காகபுஜண்டர் ஓம் காசிபர்.
காலாங்கிநாதர் ஒம் குகைநமச்சிவாயர் ஓம் குதம்பைச்சித்தர்
குமரகுருபரர் ஓம் குருதட்சணாமூர்த்தி
குருராஜர் குறும்பைச்சித்தர்
கூர்மானந்தர் ஓம் கொங்கணேஸ்வரர்
கோரக்கர் ஓம் கௌசிகர் ஓம் கௌதமர் ஓம் சங்கமுனிச் சித்தர் ஓம் சங்கர மகரிஷி
சங்கிலிச்சித்தர்
சச்சிதானந்தர் ஓம் சட்டநாதர்
சண்டிகேசர் சத்யானந்தர்
சிவயோகமாமுனிவர் ஓம் சிவவாக்கியர் ஓம் சிவானந்தர்
4 ஞானத்திருவடி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி 30 திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி 40 திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி 50 திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி
ஓம் ஓம் ஓம்
ஓம்
ஓம்
ஓம்
3ம் கட்டு
ஓம்
சுகப்பிரம்மர் ஓம் சுந்தரானந்தர் ஓம் சுந்தர மூர்த்தி ஓம் சூதமுனிவர்
சூரியானந்தர் ஓம் சூல் முனிவர் ஓம் சேதுமுனிவர் ஓம் சொரூபானந்தர்
ஜம்பு மகரிஷி ஓம் ஜமதக்னி
ஜனகர் ஜனந்தனர் ஜனாதனர் ஜனக்குமாரர் ஜெகநாதர் ஜெயமுனிவர் ஞானச்சித்தர் டமாரானந்தர்
தன்வந்திரி ஒம் தாயுமான சுவாமிகள்
தானந்தர்
திரிகோணச்சித்தர் ஓம் திருஞான சம்பந்தர்
திருநாவுக்கரசர்
திருமாளிகைத் தேவர் ஓம் திருமூலதேவர் ஓம் | திருவள்ளுவர்
தூர்வாசமுனிவர் தேரையர்
நந்தனார் ஓம் நந்தீஸ்வரர் ஓம் நாதாந்தச் சித்தர் -
நாரதர் ஓம் நொண்டிச் சித்தர் ஓம் பட்டினத்தார் -
4ஞானத்திருவடி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி 60 திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி 70 திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி 80 திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி 90
ஓம் .
ஓம் . ஓம்
ஓம்
ஓம்
ஓம்
ஓம்
ஓம் |
ஓம்
ஓம் ஓம் ஓம்
ஓம் பத்ரகிரியார் ஓம் பதஞ்சலியார் ஓம் பரத்துவாசர் ஓம் பரமானந்தர் ஓம் பராசரிஷி
பாம்பாட்டிச்சித்தர் ஓம் . பிங்களமுனிவர் ஓம் பிடி நாகீசர் ஓம் பிருகு மகரிஷி ஓம் பிரும்மமுனிவர் ஓம் பீர் முகமது ஓம் . புண்ணாக்கீசர் ஓம் புலத்தீசர்
புலிப்பாணிச்சித்தர் பூனைக்கண்ணார் போகமகாரிஷி மச்சமுனிவர்
மஸ்தான் ஓம் மயூரேசர்
மாணிக்கவாசகர் ஓம் . மார்க்கண்டேயர்
மாலாங்கன் மிருகண்டரிஷி முத்தானந்தர் மெய்கண்டதேவர் மௌனச்சித்தர் யாகோபு யூகிமுனிவர் யோகச்சித்தர் யோகானந்தர் ரோமரிஷி வசிஷ்டமகரிஷி வரதரிஷி வரரிஷி வராகிமிகி வால்மீகி
ஓம்
4 ஞானத்திருவடி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி 100 திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி 110 திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி 121 திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி
ஓம்
ஓம்
ஓம்
ஒம்
ஓம்
4. ஞானத்திருவடி விசுவாமித்திரர்
திருவடிகள் போற்றி வியாக்ரமர்
திருவடிகள் போற்றி வியாசமுனிவர்
திருவடிகள் போற்றி விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி வேதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி 131 எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள்
நிருவடிகள் போற்றி போற்றி. நிறைவுப்பாடல் வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம் வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள் வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.
திருமந்திரம் 3047 | மேற்கண்ட 131 சித்தர்கள், மகான்களின் திருவடிகளை தினசரி காலையும் மாலையும் போற்றி பூஜை செய்வதே சிறப்பறிவாகும். சிறப்பறிவு பெற்றவர்களுக்கு குடும்ப ஒற்றுமை, புத்திர பாக்கியம், உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள் பெருகி, மது அருந்துதல், புலால் உண்ணுதல், சூதாடுதல் போன்ற தீவினைகள் நீங்கிவிடும். மேலும், மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால், பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்.
ஓங்காரக்குடில் ஆசான் ஆசி!
ஓங்காரக்குடிலில் நடைபெறும் அன்னதானம் மற்றும் அறப்பணிகளுக்காக, தமிழகமெங்கும் ஸ்ரீ அகத்தியர் சன் மார்க்க சங்கம் சார்பாக திருவாளர்கள் கே.எஸ்.கைலாசம், பத்மநாபன், சுபாஸ், ராமமூர்த்தி, ரெங்கநாதன், திருமுகம் மற்றும் திருவண்ணாமலை, பாண்டிச்சேரி, கோவை, பொள்ளாச்சி, செங்கல்பட்டு, வேதாரண்யம், விருதுநகர், மண்ணச்சநல்லூர், திருச்சி அன்பர்கள் நமது ஞானத்திருவடி மாத இதழை தினசரி பொதுமக்களுக்கு வினியோகம் செய்கிறார்கள்.
ஞானத்திருவடி நூலை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அன்பர்களுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஞானிகள் அருள் கிட்டி எல்லா நன்மைகளும் அடைவார்கள். மேலும் உடல் ஆரோக்கியமும், நீடிய ஆயுளும், எல்லா நலமும் வளமும் பெறுவார்கள். மேலும் ஞானமும் சித்திக்கும் என்று ஓங்காரக்குடில் ஆசான் ஆசி வழங்கியுள்ளார்கள்.



H8)
4 ஞானத்திருவடி ஞானத்திருவடி நூலிற்கு
மகான் அகத்தியர் அருளிய ஆசிநூல் சுவடி வாசித்தளித்தவர் T.ராஜேந்திரன், MA., B.Ed, செல் : 99655 71837 மகான் அகத்தியர் நாடிஜோதிட நிலையம், TVS டோல்கேட், திருச்சி.
15.12.2011 சுத்த சன்மார்க்கம் வித்திட்டு சுப்பிரமண்யராய் அவதாரம் கொண்டு இத்தரையில் மாந்தர்கள் பலருக்கும் இன்முகம் காட்டி அமுதூட்டும் அமுதூட்டும் வள்ளலே அரங்கா அன்போடு அறம்தனை வளர்க்கும் உமை அருள்பெற்ற தேசிகா உம்மை போற்றியே கலசமுனி கலசமுனி உன்னத ஞான நூலாம் கண்டவர் கொண்டவர் வினை வென்று ஞாலமதில் பெரும்பேறு எட்டிடும் ஞானத்திருவடி நன்னூல் இதுவென்று என்றுமே ஆசி வழி விளக்கம் எடுத்துரைப்பேன் தொடர்ந்து உலகோர்க்கு நன்றுபெற பிரம்மம் வருவதுபோல் நம்பிக்கைகொள் நூலை தொடுமுன் முன்பாக மும்மூர்த்தியுமாக மூலவராக எந்தன் அவதார துன்பமகற்றும் தவ ராசரை துவக்கிவிடு எண்ணி மனதுள் செபம் செபத்தால் பதிணென்மர் அருள் சேர்ந்து கிட்டும் நூலை புரட்ட சுபகீர்த்தி அருளும் தேசிகரை அடைந்த பலன் கிட்டும் வாசிக்க வாசிக்க வாசிக்க நாளடைவில் வாசியும் ஒடுங்கும் அரங்கர் ஆசிபட பூஜிக்க பூஜிக்க இவை நூலை புண்ணியம் சேரும் உலகோர்க்கு
4 ஞானத்திருவடி உலகோர்க்கு நல் தவமுறையை உணர்த்த வந்த கருவியப்பா பழக நல்லொழுக்கம் ஒழுக பண்டிதன் ஈந்த படைப்புமப்பா அப்பனே அவதாரம் பல இருந்தும் அரங்கரை தேர்ந்தெடுத்தார் ஞானியர்கள் காப்பாக உலகமக்கள் வழிநடக்க கருணை கொண்டே ஆசானாய் இவைநூலை நூல்தனை வழங்கிவிட்டார் மக்களுக்கு நிலமதனில் தொடர்ந்து ஆசான் விரும்ப ஞாலமதில் திங்கள் தோறும் ஞானியர்கள் அவரவரும் விளக்கங்கள் விளக்கங்கள் ஆசி அறிவுரைகள் விளம்பிடுவேன் தொடர்ந்து மொழிந்திடுவார் கலக்கமிலா சிலை மேல் திங்கள் கரவாண்டில் சுணக்கமிலா சேவை சேவை மிகுபட செய்பவர்கள் சுகம் பெறுவார் சுத்த தேகமடைவார் அவைகூடும் திங்கள் இதுவப்பா அரங்கர் சபைநிரம்பி வாழ்பவர்கள் வாழ்பவர்கள் வல்லமை கூடியே வளமோடு ஞானபலம் பெறுவார் தாழ்வுகள் அண்டா உயர்வுபட தவராஜர் அருளால் புகழ் பெறுவார் புகழ்பெறவே புண்ணியநூல் படித்து பிறவிப் பயனடைவார் அவரவர்கள் யுகம் ஆளவந்த சித்தனப்பா உயர்வாழ்வு காண்பார் உன் பக்தனென்பார் என்பவர்க்கெல்லாம் ஞானியர்கள் எட்டுத்திக்கும் பறைசாற்றும் அன்பர்க்கெல்லாம் இன்பம் அளிப்பார் எக்காலத்தும் ஈதூழில் சிறந்த நூல் உன் நூலப்பா
-10
16,
4 ஞானத்திருவடி அப்பனே அறுமுகனே என அழைப்பவர்க்கு அறமோடு அன்பு இசைந்து நிற்பவனே ஒப்பில்லா ஞானியே நீயப்பா உம்மை பற்றி விளம்புவதில் பெருமை கொள்வோம்
ஞானியர்கள் ஆசிநூல் முற்றே. -சுபம்
- 'திம்
ஞாளிகள் திருஉருவப்படங்கள், ஆசான் அருளிய நூல்கள், தினசரி, மாத ! நாட்காட்டிகள், ஆசான் அருளுரைகள் அடங்கிய ஒலி, ஒளி குறுந்தகடுகள் (CD) மற்றும் ஞானத்திருவடி நூல் கிடைக்கப் பெறாதவர்களும் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி
K.ரவிச்சந்திரன், ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், துறையூர்.
0 04327-255784, செல்: 94883 91565 ஓங்காரக்குடிலாசானிடம் தீட்சை பெற விரும்புகிறவர்கள் தொடர்புக்கு
ந.நடராஜன், கொள்கை பரப்பாளர், செல்: 98947 55784
* சென்னை திருவொற்றியூரில் கோயில் கொண்டுள்ள முற்றுப்பெற்ற: மேகானும், அழைத்தால் அக்கணமே அஞ்சேல் என்று சொல்லக்கூடிய ஆற்றல் : பெற்ற மகான் பட்டினத்தார் சந்நிதியில் ஒவ்வொரு வாரம் ! *வியாழக்கிழமைதோறும், மாலை ஆறு மணியளவில் ஞானியர் வழிபாடும், : :குருநாதர் அவர்களின் அருளுரைகள் ஒலிஒளி காட்சியாகவும் நடத்தப்படுகின்றது. ;
அச்சமயத்தில் ஞானத்திருவடி நூல்கள் விநியோகம் செய்யப்படுகிறது. பூஜை : 'முடிவில் ஞானிகளை பூஜித்த பிரசாதம் வழங்கப்படுகிறது. மேற்படி பூஜையில் : கலந்துகொள்ள விரும்புபவர்களும், குருநாதர் அவர்களின் அருளுரைகள் : * அடங்கிய குறுந்தகடுகள் பெறவும், குருநாதர் அவர்களின் நூல்கள் மற்றும் : "ஞானத்திருவடி பெறவும் சென்னையில் தொடர்பு கொள்ள:
திரு. K.S.கைலாசம் - 98400 63510 திரு. D.ரெங்கநாதன் - 96770 17170 திரு. A.பத்மநாபன் - 044 25733917
-11
4 ஞானத்திருவடி திருச்சி மாவட்டம், துறையூர் ஓங்காரக்குடிலாசான்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு, தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள் 23.04.1997 அன்று ஆன்மீக அன்பர்கள் முன்னிலையில்
வழங்கிய அருளுரை "சும்மா இரு என்னும் இரகசியம்!” அன்புள்ள பெரியோர்களே தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
நாம் தொடர்ந்து தினமும் பேசுகிறோம். ஒரே மையக்கருத்துதான். இருந்தாலும் அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
இங்கே இது பரிபாஷை. அது போல் தொடர்ந்து முயற்சிக்கணும். தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்க வேண் டும். நாம் பூஜை செய்யும் முறையை ஆரம்ப காலத்தில் சொன்னோம்.
ஒரு திருவிளக்கு ஏற்ற வேண்டும் அதன் முன் அமர்ந்து ஒரு சிறிய தட்டு, அதில் மூன்று முறை ஓம் அகத்தீசாய நம என்று சொல்லி, என் உடல், பொருள், ஆவி அனைத்தும் உனக்கே அர்ப்பணம் செய்வதாக சொல்லி கையில் தண் ணீரை எடுத்து வலது கையில் தட்டில் ஊற்றி மானசீகமாக தட்டில் ஆசான் திருவடி இருப்பதாகவும், அவர் பாதத்தில் ஊற்றுவதாகவும் எண் ணி அர்ப்பணம் செய்து பூஜை செய்ய வேண்டும், பூஜை செய்து முடித்தவுடன் அந்த நீரை குடித்துவிட வேண்டும்.
ஆரம்பத்தில் நானும் ஒரு திருவிளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து இப்படியெல்லாம் செய்தேன். பிறகு ஆசானே சொன்னார். இப்படி பூஜை செய்யும் வாய்ப்பு இருந்தால் செய்யலாம். இல்லையென்றால் எப்படியாவது எந்த நேரமாவது ஆசான் நாமத்தை சொல்லலாம். ஆக அதையும் விட்டு விட்டோம்.
திருவிளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து, மூன்று முறை நாமத்தை சொல்லி, ஒரு சிறிய தட்டில் தண்ணீர் மூன்று முறை விட்டு, என் உடல், பொருள், ஆவி அனைத்தும் உனக்கே அர்ப்பணம் என்று சொல்லி, பூஜை செய்தோம். இந்த முறைகளை ஆரம்பத்தில் நான் கடைப்பிடித்தாலும், பிறகு என்னால் கடைப்பிடிக்க முடியவில்லை. சிறிய வீட்டில் வசிப்பவர்களுக்கு அங்கே குத்துவிளக்கில் தீபத்தை ஏற்றி, சூட தீபம் ஏற்றி, ஊதுபத்தி வைத்து, இதுமாதிரி தட்டு வைத்து செய்வதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாது போனது. அது வேண்டாமைய்யா!
அப்ப ஒரு சிலருக்குத்தான் வாய்ப்பிருக்கும். மலேசியாவில் உள்ள ஆண்களும் பெண்களும் இருவரும் பாடுபடுகிறார்கள்; வேலை செய்கிறார்கள்.
412
4. ஞானத்திருவடி அவர்களுக்கு இந்த வாய்ப்பில்லை என்ற ஓர் ஏக்கம் இருந்தது. வேண்டாம்! எந்த நேரமாக இருந்தாலும் சரி, அந்த நேரத்திலேயே அப்படியே நாமத்தைச் சொல்லலாம்.
பஸ் ஸில் போகும்போது சொல்லலாம். பத்து இருபது பேர் வேனில் போகும்போது, உட்கார்ந்து நாமத்தை ஒரு ஐந்து நிமிடம் சொல்லிவிட்டு ஆரம்பிக்கலாம். ஓம் அகத்தீசாய நம! ஓம் அகத்தீசாய நம என்று சொல்லி, ஒரு கிலோ மீட்டர் போகும்வரை நாமத்தை சொல்லலாம். அதுவும் பூஜை என்று ஆசான் ஏற்றுக் கொள்கிறார்.
நாமத்தை சொன்னால் போதுமென்றோம். ஆக, நாமத்தை சொல்கிறோம், ஆசி பெறுகிறோம்.
நம் செயல்பாடுகள் ரொம்ப தூய்மையாக இருக்கிறது. ஆசான் நாமத்தையும் சொல்கிறோம். நமது செயலும் நாட்டு மக்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது.
நாமஜெபத்தை, இரவு நேரத்தில் கூட சொல்லலாம், குளித்துவிட்டுதான் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. உடம்பின் வெப்பத்தை தணிப்பதற்காகத்தான் குளிக்கிறோம். அப்ப குளித்துவிட்டு பூஜை செய்தால்தான் ஆசான் ஏற்றுக் கொள்வாரா என்றால் இல்லை. நாம் நாமஜெபம் சொல்லும்போது உடம்பில்கூட அழுக்கிருக்கும். இதை மகான் சிவவாக்கியர் சொல்வார்
அழுக்கறத்தி னங்குளித் தழுக்கறாத மாந்தரே அழுக்கிருந்த தவ்விட மழுக்கிலாத தெவ்விடம் அழுக்கிருந்த தவ்விடத் தழுக்கறுக்க வல்லிரேல் அழுக்கிலாத சோதியோ டணுகிவாழ லாகுமே.
- மகான் சிவவாக்கியர் பாடல் - கவி எண் 215 அழுக்கிருந்த அவ்விடத் அழுக்கறுக்க வல்லிரேல் - இதயத்தில் அழுக்கு இருக்கக் கூடாது. ஆக, இதயத்தில் இருக்கும் அழுக்கு நீங்கனும். அதைத்தான் அறுக்கணும் என்பார். நம் உடலில் இருக்கும் அழுக்கு தீரணும்.
நாம் சேர்ந்த சேர்க்கையே அழுக்காகத்தான் இருக்கிறது. ஆக, எப்போதும், எங்கேயும் நாமத்தைச் சொல்லலாம்.
தலைவனை நீலச்சிகண்டியில் ஏறும் பிரான் என்பார். இப்படி சொல்வதற்கு, குளிக்க வேண்டும் என்ற அவசியமில்லை,
நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங் கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே. காலத்தை வென்றிருப்பார் மரிப்பார்வெறுங் கர்மிகளே.
- கந்தரலங்காரம் - கவி எண் 26.
13
4 ஞானத்திருவடி நீலச்சிகண்டி என்பது ஆசான் சுப்பிரமணியரின் மயில் வாகனம். மயில் என்பது மூச்சுக்காற்றுக்கு மற்றொரு பெயர். மயில் ஐவண்ணத்தைத் தரும். இந்த மூச்சுக்காற்று வசப்பட்டவர்களுக்கு பஞ்சவர்ணங்கள் தெரியும். அந்த பஞ்சவர்ணத்திற்கு மயில் என்று பெயர்.
நீலச்சிகண்டியில் ஏறும் பிரான் எந்த நேரத்திலும், கோலக்குறத்தியுடன் வருவான் - இது முக்கியமான வார்த்தை , மயிலை வாகனமாகக் கொண்ட ஆதித்தலைவன் ஞானப்பண்டிதன். நாம் நினைக்கும்போது, இந்த நேரம், அந்த நேரம் என்றில்லை, காலைப்பொழுது, மாலைப்பொழுது என்றில்லை, எந்த நேரத்திலும் கோலக்குறத்தியுடன் வருவான். கோலம் என்பது அழகு. அழகு குறத்தியோடு வருவான் என்பார் ஆசான் அருணகிரிநாதர். எந்த நேரத்திலும் கோலக்குறத்தியுடன் வருவான்.
ஆசான் அருணகிரிநாதர், குருநாதன் சொன்ன சீலத்தை மெல்லத் தெளிந்து என்பார். குருநாதன் சொன்ன சீலம் - சீலம் என்றால் சிறப்பு என்று அர்த்தம். என்னய்யா சொன்னீர்? என்று கேட்டான். ஒரே தன்மையானவர்களான ஆசான் சுப்ரமணியரையோ, அகத்தீசரையோ தினந்தினமும் ஆசானை பூஜை செய்தால், அவர் என்ன செய்வார்? இந்த நேரம் அந்த நேரம் என் று நினைக்காமல், நாம் ஜெபம் செய்கிறா னென்று கோலக்குறத்தியுடன் வருவார்.
--..................குரு நாதன்சொன்ன சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
காலத்தை வென்றிருப்பார் மரிப்பார்வெறுங் கர்மிகளே. குருநாதன் சொன்ன சீலத்தை மெல்லத் தெளிந்து - சீலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள பத்தாம் வாசலாகிய புருவமத்தியாகும்.
ஆக, நம்ம நோக்கம்... தினம் பூஜை செய்கிறோம், முடிந்ததை செய்கிறோம், நாமஜெபம் செய்கிறோம். அதே சமயத்தில் நாம் ஆசான் நாமத்தை சொல்கிறோம். அன்னதானத்திற்கு பொருளுதவியும் செய்கிறோம், மற்றவர்களிடமும் வாங்குகிறோம், கொடுக்கிறோம், அறப்பணி செய்துகொண்டே இருக்கிறோம். அதை ஆசான் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.
குருநாதன் சொன்ன சீலம்-யார் தெரியுமா? முதுபெரும் தலைவன் ஞானபண்டிதன். அவர் சொல்கிறார், தொண்டர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, வாசியை நிறுத்தி வை! என்றார். அந்த வாசியை நிறுத்தி வைத்தல் என்பது குருநாதன் சொன்ன சீலத்தை மெல்ல தெளிந்து அறிவார் சிவயோகிகளே, காலத்தை வென்றிருப்பார், மரிப்பார் வெறும் கர்மிகளே என்றார்.
H14)
14 ஞானத்திருவடி அப்ப என்ன சொல்கின்றார்? நாம் பூஜை செய்கிறோம். பத்தாம் வாசல் நம்முள் இருக்கு. நாம் எங்கேயும் அலைய வேண்டியதில்லை. பத்தாம் வாசல் என்று சொல்லப்பட்ட சுழிமுனைக்கதவு, அந்த இடத்தில் காற்று ஒடுங்க வேண்டும். அந்த இடத்தில் காற்று ஒடுங்கும் வரையில் ஆசானை நாம் விடக்கூடாது.
எந்த நேரமாக இருந்தாலும் சரி, ஆசான், எந்த நேரத்திலும் கோலக்குறத்தியுடன் வருவான் என்றார். அப்ப ஆசானை நாம் அழைக்க அழைக்க அழைக்க, நோக்கம் நல்ல நோக்கமாக இருக்க வேண்டும். என்னய்யா நோக்கம்? என்று கேட்டான். குருநாதன் தான் சொல்ல வேண்டும்.
தலைவன், இனி உனக்கு மரணமில்லை என்றார். இது மிகப்பெரிய வார்த்தை . “இந்த வாசியை புருவமத்தியில் செலுத்தி, நிறுத்தி வை!" அதை “சும்மா இரு" என்றார். அந்த சும்மா இரு என்று சொல்லப்பட்ட ரகசியம் குருநாதன் சொன்ன சீலமும் அதுதான்.
அந்த சும்மா இருக்கக் கூடிய ரகசியத்தை அறிந்தவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு மரணமில்லை. அந்த “சும்மா இரு” என்ற ரகசியத்தை சொன்னதுதான் சீலம்.
அதனுடைய இயல்பு உடல் மாசை நீக்கும். புருவ மத்தியில் காற்றை செலுத்தி வைத்தால், பலகோடி ஜென்மங்களாக உடல் மாசு அல்லது அழுக்கு இருக்கிறது. ஆண் பாலும், பெண்பாலும் சேர்கின்ற சேர்க்கையின் காரணமாக வந்த சுக்கில சுரோணிதம் இரண்டுமே அழுக்குதான். இது துர்நாற்றமுள்ள ஒரு கழிவுப்பொருள்.
அப்படி சேர்ந்ததனால் வந்த, இந்த உடம்பில் எப்போதும் கீழ்த்தரமான எண்ணம்தான் இருக்கும். அந்த கீழ்த்தரமான எண்ணம் மிக உயர்ந்த நிலையை அடையக்கூடிய மனிதனையும்கூட குப்பையில் தள்ளிவிடும்.
எல்லா சிறப்பும் இருக்கும், நல்ல அறிவாற்றல் இருக்கும், கடைசியில் அவன் அறிவு, ஆற்றல், திறமைகள் அத்தனையையும், குப்பையில் போட்டுவிடும். எது? தாய் தந்தையால் வந்த இந்த காம தேகம்.
இவனை அது சும்மா விடாது, நரகத்திற்கு இட்டுச் செல்லும். ஒரு பக்கம் நாமஜெபம் செய்கிறோம், ஒரு பக்கம் அன்னதானம் செய்கிறோம், ஒரு பக்கம் என்னைக் காப்பாற்று! என்னைக் காப்பாற்று! என்னைக் கை விடாதே! என்னைக் காப்பாற்று! என்று கேட்கிறோம். ஆசான் மகிழும்படியாக கேட்கிறோம். சரி நமக்கு பக்குவம் வந்த பிற்பாடு என்ன செய்வான்? ஆசான் வந்து இந்த ரகசியத்தை



-15
3 ஞானத்திருவடி செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவா னிறவான் சும்மா இரு சொல் அற என்றலுமே அம்மா பொரு ளொன்று மறிந்திலனே.
- கந்தரனுபூதி - கவி எண் 12. ஆசான் அருணகிரிநாதர், செம்மான் மகளைத் திருடும் திருடன், பெம்மான் முருகன் பிறவான் இறவான், என்று ஆசான் ஞான பண்டிதனை. அறிமுகப்படுத்துகிறார்.
ஆசான் அருணகிரிநாதர், சும்மா இரு சொல் அற என்றலுமே அம்மா பொருளொன்று அறிந்திலனே, என்றார். அவருக்கு நிகரே இல்லை. முதுபெரும் தலைவன் அருணகிரிநாதர் இந்த இரு பாடலையும் சொல்கிறார்.
ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இது ஆசான் அருணகிரிநாதர் சொன்ன து. அருணகிரிநாதர் சொன்ன அந்த ஒரு பாடலைக் கேட்டால், அதனுடைய விளைவு எப்படி இருக்குமென்றால், அதற்கு நிகரே இல்லை. முதுபெரும் தலைவன் அருணகிரிநாதர் இந்த பாடலை சொல்கின்றார். அந்த பாடலும் சொன்னது ஆசான், இந்த பாடலும் சொன்னதும் ஆசான். இதைக் கேட்டு வைக்கிறோம்,
நம்மைப் பற்றியிருக்கக்கூடிய மிகப்பெரிய கொடுமையை, ஆசான் சுப்ரமணியர், "மாறாத கசமல்லோ மனித வாழ்க்கை " என்றார். மாறாத கசம் - அசுத்த கசம். இதை மகான் மஸ்தான் சாகிபு சொல்வார்,
நற்பூச்சந் தனவத்தர் பூசி - மிக
நன்றாக வைத்தாலும் நாற்றமே வீசி எப்போதும் கொடுமைசெய் தோசி - என்றே இவ்வுடல் வாழ்வுக ளியாவையும் வீசி
- மகான் மஸ்தான் சாகிபு - ஆனந்தக்களிப்பு - கவி எண் 5. அப்பேர்ப்பட்ட துர்நாற்றமுள்ள உடம்பு மிகக் கொடுமையே செய்யக் கூடியது. எப்போதும் இந்த உடம்பு, நம்மை ஆட்டிப்படைக்கும். அப்படிப்பட்ட உடம்புக்குள்ளே அற்புதம் ஒன்று இருக்கிறது. அந்த அற்புதத்தை அடைவதுதான் 'சும்மா இரு'. வாசியை நிறுத்தி வைத்து சும்மா இரு, இதை நாமே செய்யலாமா? இல்லையில்லை இதை ஆசான் ஞானபண்டிதன்தான் செய்ய வேண்டும்.
அந்த ரகசியத்தை அடைய நாம் பாடுபடுகின்றோம். இதுநாள் வரை இந்த யோகக்கருத்தை சொல்லவில்லை. இதை கேட்கின்ற மக்கள் அத்தனை பேரும் ஞானியாவார்கள் என்பதற்காக சொல்கிறோம்.
காலத்தை வெல்லுகின்ற வல்லமை இதுதான். இதை ஆசான்தான் சொல்ல வேண்டும். இப்படி செய் என்று சொல்லி அவர் ஆசி வழங்கினால்,
H16)
14 ஞானத்திருவடி அவன் தான் காலத்தை வென்று இருப்பான். இல்லையென்றால் யாராலும் முடியாது.
சும்மா இரு என்றால், எவ்வளவு அறிவாற்றல் இருக்க வேண்டும்? ஒருவனுக்கு திறமை இருக்கும், சிறந்த பேச்சாற்றல் இருக்கும். தியாக சிந்தை இருக்கும். தன்னையே அர்ப்பணிப்பான். ஆனால் அவனால் காலத்தை வெல்ல முடியாது.
என்னய்யா? இவ்வளவு அறிவாற்றல் இருந்தும், இவ்வளவு பேச்சுத்திறன் இருந்தும் என்ன ஆச்சு? என்றான்.
ஆசையெனும் பெருங்காற்றூ டிலவம்பஞ் செனவுமன்
தலையுங் காலம் மோசம் வரும்; இதனாலே கற்றதுங்கேட் டதுந்தூர்ந்து
முத்திக் கான நேசமுநல் வாசமும்போய்ப், புலனாயிற் கொடுமைபற்றி
நிற்ப ரந்தோ ! தேசுபழுத் தருள்பழுத்த பராபரமே! நிராசையின்றேற்
றெய்வ முண்டோ ?
- மகான் தாயுமானவர் பாடல் - ஆசையெனும் - கவி எண் 1 ஆக பெரும் காற்றோடு இலவம் பஞ்சு போல் நமது மனம் அலையும். என்னய்யா ஆச்சரியம்? இவ்வளவு பூஜை செய்கிறோம்? என்னென்னமோ செய்கிறோம்? எந்தெந்த கோவிலுக்கோ போகிறோம். எங்கெங்கேயோ மூழ்குகிறோம். என்னென்னமோ செய்து பார்க்கிறோம், முடியவில்லை.
அதற்கு என்ன காரணம்? நம்மை வஞ்சிப்பது மிகப்பெரிய இந்த காமதேகம். இதை ஏன் சொல்கிறேன் என்றால், உங்களை அச்சுறுத்துவதாக நினைக்க வேண்டாம், சிறந்த அறிவாற்றல் இருக்கும். ஆனால் அவனுடைய தேகம் என்ன செய்யும்? மிகப்பெரிய அறிவுள்ளவனையும் தூக்கி குப்பையில் போட்டு விடுமே? இது சாதாரண விசயமல்ல!
நிராசை-ஆசை அற்ற தன்மை. இது என்ன சின்ன விசயமா? இதற்கு யார் ஆசி வேண்டும்? ஆசையற்ற தேகத்தை எப்படி பெறுவது? மனைவியை விட்டு விடுவதா? அல்லது மனைவி கணவனை விட்டுவிடுவதா? இல்லை உலகத்தை விட்டு ஓடுவதா? என்றான். முடியவே முடியாது! எங்கே போனாலும் அது நம்மை பிச்சு தின்று கொண்டிருக்கும். இந்த காமதேகத்திற்குள்ளேயே ஒரு அற்புதம் இருக்கைய்யா. அதைத்தான் ஆசான் ஞானப்பண்டிதன் கண்டார். அதை 'சும்மா இரு' என்றார்.
அந்த சும்மா இருக்கக் கூடிய ரகசியத்தை நாம் அறியும் வரையில் நாம் ஓயக்கூடாது, பூஜை செய்து கொண்டே இருக்கணும். மலேசிய மக்கள்
-17)
4 ஞானத்திருவடி ஆண்களும் பெண்களுமாக அன்னதானம் செய்ய வருகிறீர்கள், அன்னதானம் செய்ய இங்கே மக்கள் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான பேர் தொண்டு செய்யவும் பொருளுதவி செய்யவும் இருக்கிறார்கள். அதற்காகவா நீங்கள் வந்திருக்கிறீர்கள்? அதற்கும் வந்திருக்கிறீர்கள்.
ஆனால் ஒரு லட்சியத்தை அடைய வந்திருக்கிறீர்கள். அந்த லட்சியம் என்னவென்று கேட்டான்? முதுபெரும் தலைவன் அகத்தீசனையும், முதுபெரும் தலைவன் ஞானப்பண்டிதனையும் வணங்கி, இந்த வாய்ப்பை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும், அருணகிரிநாதர் சொன்னாரல்லவா?
குரு நாதன் சொன்ன, சீலத்தை மெள்ளத் தெ ளிந்தறி வார் சிவ யோகிகளே, காலத்தை வென்றிருப்பார் மரிப்பார்வெறுங் கர்மிகளே - ஆக காலத்தை வெல்லக் கூடிய மார்க்கத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த இடத்திற்கு வருவதற்குத்தான் இதெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இப்போது இது எவ்வளவு பெரிய ரகசியம், என்னால் இது முடியுமா? என்று கேட்டான். 'அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்' என்றான்.
அம்மி அவ்வளவு பெரிது, அடி மேல் அடி வைத்து என்பார். எந்த அடி? என்றான். இடகலையும் பிங்கலையும் சேர்த்து, அவன் சொல்வான். மூச்சுக்காற்று இரண்டு பக்கமும் ஒடும். வலது பக்கம் வருகின்ற சுவாசத்தையும், இடது பக்கம் வருகின்ற சுவாசத்தையும் இரண்டையும் ஒன்று சேர்க்க வேண்டும்.
“சேர்ப்பதுதான் இடை சமனாய் சேர்த்துக் கொண்டால்
சிவ சிவா சொல்லரிது செயலைத்தானே” என்பார் திருமூலர் எனவே அடி மேல் அடி என்றால் இடகலையும் பிங்கலையும் சேர்க்கிறோம்.
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங் காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக் கூற்றை யுதைக்குங் குறியது வாமே
-திருமந்திரம் - பிராணாயாமம் -கவி எண் - 571. வந்துவிட்டது! இப்போது யோகக் கருத்தே வருகிறது! தொடர்ந்து அதைத்தான் பேசிக்கொண்டு வருகிறோம். கேட்டு வைக்கலாமைய்யா! என்ன நட்டம்? இப்படித்தானே முன்னேற வேண்டும்? வருங்காலம் ஞான சித்தர் காலம் அல்லவா? 'பல மாந்தர் ஞானியாவார் என்று ஆசான் சொன்னார். 'பல மனுக்கள் ஞானியாவார்' என்று இருக்கிறது. கேட்டு வைப்போம். நாட்டு மக்கள் ஆற்றல் பெற வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். அப்ப என்ன செய்கிறான், இந்த இடகலையும் பிங்கலையும் சேர்த்து, இந்த காற்றை முறைப்படுத்தி கட்டத் தெரிந்தவன், நிச்சயமாக சாக மாட்டான்.
18)
4 ஞானத்திருவடி காற்றைப் பிடிக்கும் கணக்கறிவா ளர்க்கு, கூற்றை உ தைக்கும் குறியதுவாமே - எமனை வெல்லுகின்ற வல்லமை என்று சொன்னான். ஆசான் ஆசியினால்தான் தன்னை அறியக்கூடிய வல்லமை கிட்டும். இதையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்ளணும், “இந்த சும்மா இருக்கிற ரகசியத்தை".
அப்ப சும்மா இருக்கக் கூடிய வாசியை நிறுத்தி வைத்தால், அதனுடைய விளைவுகள் என்ன ஆகும்? நம்மைத் தொடர்ந்து பீடித்து வருகின்ற கொடிய காம் நோய் அடிபட்டுப் போகும்.
காம நோய் அடிபடாமல் மனம் செம்மைப்படாது. கடைசி நேரத்திலும் அவனை வஞ்சித்துவிடும். பெரும் புகழுக்குரிய வாழ்வையெல்லாம் பாழ்படுத்திவிடும். இதைத்தான் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்றான்.
காம தேகம் உள்ளவன், நிச்சயமாக தவறு செய்வான். ஒன்றும் செய்ய முடியாது. நிச்சயம் அது அவன் புகழை அது கெடுத்துவிடும். மிக்க காமதேகம் உள்ளவர்கள் எத்தனை ஆற்றல் உள்ளவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் ஒரு துறையில் கண்டிப்பாக முன்னேற முடியாது. அப்படி முன்னேற முயற்சிக்கும்போது அந்த காமதேகம் அவர்கள் காலைப்பிடித்து இழுக்கும். அப்படி காலைப்பிடித்து இழுக்கும்போது நிச்சயமாக அவர்கள் எடுத்துக் கொண்ட லட்சியத்தை அடைய முடியாது. ஆக, அதை வெல்லுவதற்குதான் ஆசான் சொன்னதை, நீங்கள் அறியணும்
கிட்டுமோ ஞானயோகம் கிடைக்குமோ குருவின் பாதம் கட்டுமோ மூல வாசி காணுமோ கயிலை வீடு எட்டுமோ நாக லிங்கம் ஏற்றுமோ தீப சோதி தட்டுமோ பளிங்குமேடை தனையறி யார்க்கு நெஞ்சே.
-மகான் கணபதிதாசர் அருளிய நெஞ்சறி விளக்கம் - கவி எண், 21 ஆக, தன்னை அறியக்கூடிய வாய்ப்பு வாசி வசப்பட்டால்தான் கிடைக்கும். இல்லையென்றால் முடியாது. “கட்டுமோ மூலவாசி காணுமோ கயிலை வீடு, “எட்டுமோ தீப லிங்கம்" என்றார்.
ஆக இந்த பாடலெல்லாம் மிகப் பெரிய பாடல்கள். சாதாரண பாடல்கள் அல்ல. இதெல்லாம் கேட்டு வைத்தால் பயன்படும். ஆக மனித வர்க்கத்தை ஆட்டிப் படைப்பது மீண்டும் மீண்டும் பிறக்கச் செய்வதற்கு, காரணமாய் இருப்பதே ஆசைதான் என்று ஞானிகள் சொல்வார்கள். நாம் ஆசைப்படாமல் இருக்கலாம். ஆனால் ஆசை நம்மை விட்டுவிடுமா? போட்டு கலக்கி எடுத்துவிடும்.
அற்றவர் என்பார் அவா அற்றார்; மற்றையார் அற்றாக அற்றது இலர்.
- திருக்குறள் - அவா அறுத்தல் - குறள் எண் 365
19
4 ஞானத்திருவடி அற்றவர் என்பார் அவா அற்றார், என்றார் திருவள்ளுவர். ஆசை அற்றுப் போக வேண்டும், காமதேகத்தை வைத்துக் கொண்டு ஒன்றுமே செய்ய முடியாது. உடம்பிலிருந்து காமதேகம் நீங்க வேண்டும். அதற்கு நாம் பாடுபட வேண்டும். அதை “அற்றவர் என்பார் அவா அற்றார்” என்றார்.
ஒளவையார் சொல்லும்போது கூட, “அற்றது பற்றெனின் உற்றது வீடு” என்றார். காமதேகம் நீங்க வேண்டும். நமது நோக்கமும், லட்சியமும் அதில் இருக்க வேண்டும், நாம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொல்வதன் நோக்கம் என்ன? இருபது வயது, இருபத்தைந்து வயது, முப்பது வயதுள்ள பெண்கள் வந்திருப்பார்கள். இன்னும் இவர்கள் பத்து வருடம் தினமும் ஒரே லட்சியமாக ஆசானிடம் கேட்க வேண்டும். என்ன கேட்க வேண்டும்?
ஐயா! இதிலிருந்து நான் விடுபட வேண்டுமய்யா! என்னால் முடியவில்லை! இதிலிருந்து விடுபட நான் விரும்புகிறேன். நீங்கள் தான் அருள் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டே இரு. அட என்றாவது கொடுக்கட்டுமே ஐயா! இன் றில்லாவிடில் என்றாவது கொடுக்கட்டுமே! நாம் கேட்டு வைப்போமே! இதை வள்ளுவபெருமான்,
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்; மற்றுஅது தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
- திருக்குறள் - ஊக்கம் உடைமை - குறள் எண் 596. என்று சொல்வார். கேட்டுப்பார். நினைப்பதையெல்லாம் உயர்வாக நினைத்துப்பார். அந்த எண்ணம் கைகூடாவிட்டாலும் நினைப்பதை மட்டும் விடாதே, யாரொருவர், அது ஆ ண ாக இருந்தாலும் சரி, பெண் ண ாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு நோக்கம் ஒன்றே ஒன்றுதான், “இனி நான் பிறக்கக்கூடாது, நான் இனி பிறக்க விரும்பவில்லை.
அதற்கு உங்கள் ஆசி பெற விரும்புகிறேன். உங்களால்தான் முடியும். உங்கள் ஆசியைக்கொண்டு நான் பிறக்க விரும்பவில்லை. மறுபடியும் நான் நரகத்திற்கு செல்ல விரும்பவில்லை. அதற்கு நீங்கள் தான் அருள் செய்ய வேண்டும்" என்று கேட்க வேண்டும். உங்களுக்கு தெ ளிந்த ஆசான் கிடைத்திருக்கிறேன்,
ஆசான், புருவமத்தியில் காற்றை செலுத்தி நிறுத்தி வைப்பதை, சும்மா இருப்பது என் பார். இந்த ரகசியம் எங்களுக்கு தெரியும். இதை தாயுமான சுவாமிகள் சொல்வார்,
சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணமென்று எம்மால் அறிதற்கு எளிதோ? பராபரமே! - மகான் தாயுமான சுவாமிகள் பாடல் - பராபரகண்ணி - கவி எண் 70.
-20
4 ஞானத்திருவடி இப்ப நாம், தாயுமான சுவாமிகள் பாடல், மகான் திருமூலர் அருளிய திருமந்திரம், மகான் அருணகிரிநாதர் அருளிய பாடல்களை சொல்லியிருக்கிறோம். ஏன் சொன்னோமென்றால், எத்தனையோ ஜென்மங்களில் அல்லற்பட்டு மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்திருக்கிறோம். இப்படி எடுத்த பிறவிகளில், ஒரு பக்கம் கைகால்கள் வராமலும், வாய் ஊமையாகவும், செவிடாகவும், தொழுநோயாகவும், இதுபோல் கை கால் முடியாமல், இப்படி பல நோய்களில் அல்லற்பட்டு இறந்து பிறந்தது போதும்.
நாம் இப்போது நல்லபடியாக இருக்கிறோம், கருத்துக்களை கேட்கிறோம். இதற்கு முன் எடுத்த ஜென்மங்களில் கேட்கின்ற திறம் இருந்ததோ? மூளைக்கோளாறாக இருந்திருப்போமோ? வாய் பேசாது இருந்திருப்போமோ? செவி கேளாது இருந்திருப்போமோ, குருடாக இருந்திருப்போமோ? அல்லற்பட்டிருப்போமோ? அங்கஹீனமாக பிறந்திருப்போமோ?,
எத்தனை ஜென்மங்களில், தொழுநோய் வந்திருக்கும், கருவிலேயே இறந்திருக்கலாம், கரு கூடி இருபத்து நான்கு மணிநேரத்தில் இறந்திருக்கலாம், மூன்று மாதத்தில் இறந்திருக்கலாம், கருப்பையிலே யே ஆறு மாதத்தில் இறந்திருக்கலாம்!, நாம் பிறப்பதற்குள் தாய் இறந்திருக்கலாம் அல்லது பிறந்தவுடன் தாய் இறந்திருக்கலாம், பத்தாண்டுகள் வாழ்ந்தும் இறந்திருக்கலாம், வயோதிகத்திலும் இறந்திருக்கலாம்.
ஆக, இதே வேலையாக நாம் பிறந்து இறந்து பிறந்து இறந்திருக்கிறோம். எனவே, ஒன்றே ஒன்று நான் பிறக்க விரும்பவில்லை! நான் பிறக்க விரும்பவில்லை! அதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டுமென்று ஆசானை கேட்க வேண்டும். இதுபோல கேட்டு, எத்தனையோ பாவிகள் உன் ஆசி பெற்றிருக்கிறார்கள்.
ஆசான் தாயுமானசுவாமிகள், சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணம் என்று, எம்மால் அறிதற்கு எளிதோ பராபரமே! என்றார். அந்த சும்மா இருக்கக் கூடிய ரகசியத்தை ஞானிகளாகிய நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அதை நானும் அறிந்து கொள்ள விரும்புகிறேன், ஏனென்றால் இதுவரை நான் பட்டது போதும். எத்தனையோ ஜென்மங்களில் இறந்து பிறந்து அல்லற்பட்டது போதும். இந்த ஜென்மத்தில் உன்னை நான் புரிந்துகொண்டேன்; புரிந்து கொண்டு உன் திருவடியைப் பற்ற நான் விரும்புகிறேன்.
எத்தனையோ இடையூறுகள் என்னைத் தாக்கி என்னை பலகீனப்படுத்துகின்றது. ஒரு பக்கம் முன் செய்த வினைகள் புலியாக இருந்து என்னை மிரட்டுகின்றது. பல்வேறு ஜென்மங்களில் செய்த பாவம் காமம் என்கிற கரடியாக இருந்து என்னை பிடித்து ஆட்டுகின்றது. நட்டுவாக்கிளி, தேள், பாம்பாக இருந்து என்னை பதை பதைக்கச் செய்கிறது. நான் இதை விரும்பவில்லை. நான் இனி பிறக்க விரும்பவில்லை!.
-21)
4 ஞானத்திருவடிநான் அறிந்த அடைந்த உண்மையை உங்களிடம் சொல்கிறேன். ஆசான் ஆசியால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பல ஜென்மங்களாக தாய்தந்தை காமத்தால் பிறந்து, காமத்தில் வாழ்ந்து காமத்தில் வீழ்ந்திருக்கிறேன்; அறியாமையில் பிறந்து, அறியாமையில் வாழ்ந்து அறியாமையில் வீழ்ந்திருக்கிறேன். நரகத்தில் பிறந்து, நரகத்தில் வாழ்ந்து, நரகத்தில் வீழ்ந்திருக்கிறேன்,
இந்த ஜென்மம் கிடைத்திருக்கிறது. ஆசான் அருணகிரிநாதரையும், திருமூலதேவரையும், மகான் பட்டினத்தாரையும் பூஜை செய்திருக்கிறேன். பல ஜென்மங்களில் பல ஞானிகளை பூஜை செய்ததால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என் அனுபவத்தை சொல்கிறேன். அந்த அனுபவத்தினுடைய சாரத்தை அறிந்தால், நீங்கள் இங்கு வந்த நோக்கத்தை புரிந்து கொள்வீர்கள்.
அப்படி புரிந்து கொண்டால், தன்னைப் பற்றி அறியக்கூடிய தகைமை உங்களுக்கு கிடைக்கும். எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் சரி, எத்தனை துன்பங்கள் இருந்த போதிலும் சரி, ஒரு ஐந்து நிமிடமாவது நாம ஜெபம் செய்ய வேண்டும். அவ்வாறு நாமஜெபம் செய்வதற்கு திருவிளக்கு தேவையில்லை, தட்டு தேவையில்லை, தண்ணீர் தேவையில்லை. ஆசான் நாமத்தை மட்டும் சொல்ல வேண்டும். தொடர்ந்து திருமந்திரமோ, திருஅருட்பாவோ படிக்க வேண்டும். நான்கு கவியாவது எடுத்து படித்துவிட்டு பூஜை செய்ய வேண்டும்.
இப்படி தொடர்ந்து செய்வதையே, “அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்” என்பார். இடகலையும் பின்கலையும் சேர்த்து வைத்தால் அம்மியாகிய எது நகரும்? அடி மேல் அடி வைத்தால், அம்மி என்று சொல்லப்பட்ட நமது உடம்பு, நம்முடைய கனமான வினைகள், காமதேகம் தூள் பட்டு போகும்.
நான் அறிந்த உண்மையை உங்களுக்கு சொல்ல வேண் டும். ஆன்மீகவாதிகள் இதைக் கேட்டு, அறியக்கூடிய அந்த ஆன்மலாபத்தை அறிந்து கொள்ள வேண்டும், பெறக்கூடிய பெரும் பேறாகிய பேராற்றலையும், மரணமிலாப் பெருவாழ்வையும் அடைய வேண்டும். அதற்கு நான் வகுத்துப் பேச வேண்டும்.
அதற்காகவே ஞானிகள் பாடல் உங்கள் காதில் விழ வேண்டும். இந்த பாடல்களை பாடியவர்கள் சாதாரணமானவர்கள் என்று நினைக்க வேண்டாம். அவர்களெல்லாம் முதுபெரும் ஞானிகள். ஆசான் அருணகிரிநாதர், மகான் தாயுமான சுவாமிகள், ஆசான் திருமூலதேவர், ஆசான் கணபதிதாசர் போன்ற ஞானிகள் பாடிய பாடல்களை உங்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இவர்கள் பாடல்களை நீங்கள் கேட்பதே நல்லதுதான். அதற்காகத்தான் அந்த பாடல்களை உங்களுக்கு சொன்னேன்.
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.
- திருக்குறள் - இனியவை கூறல் - குறள் எண் 96.


-22
14 ஞானத்திருவடி ஆசான் திருவள்ளுவர், அல்லவை தேய அறம் பெருகும் என்றார். அதென்னய்யா, அல்லவை? பாவம் தேய்ந்து புண்ணியம் பெருகும் என்றார். இது மர்மமான வார்த்தை , யோகிகளுக்குத்தான் புரியும். பாவமாகிய புற உடம்பு தேய்ந்து அறமாகிய அக உடம்பு ஆக்கம் பெறும் என்றார்.
நான் இப்பொழுது உங்களுக்கு சொல்கிறேன். நான் இனி பிறக்க விரும்பவில்லை. நான் இனி பிறக்க விரும்பவில்லை. நான் இனி பிறக்க விரும்பவில்லை, நான் இனி பிறக்க விரும்பவில்லை. அதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டும்.
எத்தனையோ பாவிகள் உன் ஆசி பெற்றிருக்கிறார்கள். இந்த வாய்ப்பினை பெற்றிருக்கிறார்கள். நான் உன் ஆசியைப் பெற வேண்டும். நான் இனி பிறக்க விரும்பவில்லை, என்று இதையே திரும்பதிரும்ப கேட்க வேண்டும்.
ஆசான் நாமத்தைச் சொல்ல வேண்டும். வாய்விட்டும் சொல்லலாம் அல்லது மனதிற்குள்ளும் சொல்லலாம். கை கூப்பியும் சொல்லலாம், வீழ்ந்து வணங்கியும் சொல்லலாம். எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். நோக்கம் ஒன்றே! இனி நான் பிறக்க விரும்பவில்லை.
நாம் சொல்கின்ற உண்மைகளை கேட்கிறார்கள். என்னதான் ஒதினாலும், அவர்கள் அதை கேட்டாலும் மனதில் பதியவில்லை. ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஒரு சிலருக்கு அறிவு வேலைசெய்யவில்லை.
நாம் சொல்வதை கேட்டால் அது பசு மரத்து ஆணி போல் பதியவேண்டும்; பதியவில்லை . அதற்கு என்ன காரணம்? சிறிது நேரம் கூட அந்த அறிவுரை மனதில் நிற்கவில்லை. சிலருக்கு பசுமரத்து ஆணி போல் பதிகிறது. சிலருக்கு மனதில் பதியவில்லை. என்ன செய்வது? ஞானிகளுடைய ஆட்சியில்லாமல் முடியாது.
நான் நூல்களை படிக்கிறேன், கேட்கிறேன், உணருகிறேன். ஆனால் என் இதயத்தில் தங்கவில்லை, என்ன கொடுமையோ தெரியவில்லை, சிலர் ஞானிகள் படித்ததையும் படிக்கிறார்கள்; கேட்கிறார்கள்; மனதில் பதிகின்றது. ஜென்மத்தைக் கடைத்தேற்றி வெற்றி பெறுகிறார்கள். நானோ, கேட்கிறேன், படிக்கிறேன், உணருகிறேன், என்னால் உன் திருவடியைப் பற்ற முடியவில்லை . அதற்காக வருந்துகிறேன்.
இது போன்ற பலகீனங்கள் உள்ளன. ஒன்றைக் கற்று, அதைக் கேட்டால் அதை பின்பற்ற முடியாத பலகீனங்கள்தான் பாவத்தின் சின்னம். அந்த பாவத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? அல்லவை தேய - பாவம் நீங்க வேண்டும். புண்ணியம் பெருக வேண்டும்.
எப்போது புண்ணியம் பெருகும்? புண்ணியவான்களாகிய ஞானிகளை
-23)
4 ஞானத்திருவடி வணங்கினால்தான் புண்ணியம் பெருகும். நாமெல்லாம் பாவிகள் தான். என்ன காரணம்? ஒன்றை, ஒன்று சேர்க்க கற்றுக் கொள்ளாதவர்கள்.
நாமெல்லாம் இடகலையும், பின்கலையும் சேர்க்க கற்றுக் கொள்ளாத பாவிகள்தான். ஆசான் என்ன செய்வார்? அவர் இடகலையும், பிங்கலையும் சேர்த்து வைப்பார். இடகலையையும் பிங்கலையையும் சேர்த்து வைத்தாலன்றி நம் பாவம் தீராது, சிந்தனையில் தெளிவு இருக்காது, செயல்பாடுகளில் தெளிவு இருக்காது, பேராசை, வஞ்சனை, பொய், புரட்டு போன்ற எல்லா வகையான ஜாலங்களையும் மனம் செய்து கொண்டிருக்கும். அது நமக்கு துணையாகவே இருக்காது, இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நாம் விடுபட வேண்டும். அப்படி விடுபடா விட்டால் நீ என்ன செய்து என்ன பயன்? ஆக, முடிவில் ஏமாற்றப்படுவாய்.
புண்ணியம் பெருகப் பெருக்கத்தான் அறிவு வேலை செய்யும். பாவம் தேய்ந்து புண்ணியம் பெருக வேண்டும்.
பாவம் என்கிற உடம்பு தேய்கிறது. உடம்பு கெட்டுப் போகாது. உள்ளம் தெளிவடையும். உள்ளம் தெளிவடைந்து ஒரு மனிதன் கடவுளை அடைய வேண்டுமென்று சொன்னால், அவனுடைய அறிவு சிறப்பறிவாக இருக்க வேண்டும். எதைப்பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து, அச்சம் இல்லாமல் வாழ வேண்டும். நாளை என்ன ஏற்படுமோ? எது வருமோ? என்று நினைக்க அவசியமே இருக்காது, அச்சமே இருக்காது. இப்படிப்பட்ட வாழ்க்கைதான் அல்லலில்லாத வாழ்க்கை ,
எப்போது பார்த்தாலும் பல்வேறு பிரச்சனைகளில் அல்லற்பட்டுக் கொண்டிருந்தால் என்ன செய்வது? அங்கே பாவம் இருக்கிறது. பாவம் இருக்கும் இடத்தில்தான் தடுமாற்றங்கள், போட்டி, பொறாமை, பேராசை, அவன் நம்மை இடையூறு செய்வானோ? இவன் நமக்கு இடையூறு செய்வானோ? போன்றவை இருக்கும்.
தலைவன் ஆசியிருந்தால், இதுபோன்ற பிரச்சனைகளால் நமக்கு ஒன்றும் ஆகாது.
தலைவன் இல்லையா? வேற்படை உள்ளவன். எந்த நேரத்திலும் கோலக்குறத்தியுடன் வருவார். எந்த தடுமாற்றங்களும் நமக்கு இருக்க முடியாது, இருக்கக் கூடாது, அச்சமே இருக்கக் கூடாது. என்ன காரணம்? தலைவனின் ஆசி.
திருவருளை சிந்திக்க சிந்திக்க அச்சம் இருக்காது. திருவருளை சிந்திக்க சிந்திக்க நோய் இருக்காது. திருவருளை சிந்திக்க சிந்திக்க பகைமை இருக்காது. திருவருளை சிந்திக்க சிந்திக்க தெளிவு இருக்கும்.
24.
4 ஞானத்திருவடி மற்றவர்கள் எல்லாம் 'ஆ' என்று அலைவார்கள். பல லட்சத்திற்கு அதிபதியாக இருப்பான். இரவு நேரத்தில் மாத்திரை சாப்பிட்டால்தான் தூக்கம் வரும். நம் அன்பர்கள் நிம்மதியாக தூங்குவார்கள். என்ன காரணம்? தன்னை தலைவனின் திருவடிகளுக்கு ஒப்பிக்கிறான்.
பலவற்றையும் சிந்தித்துப் பார்ப்பான். அது அவனுக்குத் தெரியாது. கடைசி வரையிலும் அவன் செத்தவன்தான். என்னய்யா? நடமாடிக்கிட்டு இருக்கிறான். பெரிய கம்பெனி வைத்திருக்கிறான். அவனது பேங்க் கணக்கில் பல லட்சங்கள் புரண்டு கொண்டிருக்கிறது. ஏனய்யா அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறான்? அவன் செத்தவன்டா. அவன் இவ்வளவு வசதி வாய்ப்புள்ளவனாக இருந்தும், அல்லற்படுகின்றான். நாம் அல்லற்படுகின்றோமா? நமக்கு அல்லலில்லை! நிம்மதியாக இருக்கிறோம். என்ன காரணம்? திருவருள் துணையிருக்கிறது! |
நம்மை ஆசானிடம் ஒப்பிக்கிறோம். ஐயா, இது என் அறிவுக்கு எட்டவில்லை. நீ பார்த்து செய் என்கிறோம். உடனே ஆசான் இறங்குகிறார். உலக மக்கள் யார் அழைத்தாலும், எந்த தேசத்தில் இருந்தாலும், எந்த மொழியில் பேசினாலும் நான் இரட்சித்து அருள் செய்கிறேன ப்பா என்று ஆசான் சொல்வார். நீ எங்களிடம் சொல்ல வேண் டும், இதுதான் எங்களுக்கு வேலை என்பார் ஆசான்.
இதையெல்லாம் நாங்கள் உங்களுக்கு சொல்லணும். தலைவன் பெருமையை பேசளணும். இதைக் கேட்டு மக்கள் அச்சமில்லாத வாழ்க்கையில் இருக்கணும். அச்சம், வறுமை இருக்காது. வறுமை இருந்தால்தானே அச் சம்? நோய் இருக்காது; இருந்தால்தானே அச்சம்? பகை இருக்காது. இருந்தால்தானே அச்சம்? பகை இல்லை, நோய் இல்லை, வறுமை இல்லை. மனது அமைதியா இருக்கைய்யா! இரவில் எங்களுக்கு தூக்க மாத்திரை போட வேண்டிய அவசியமில்லை.
தலைவனிடத்தில் நம்பிக்கை வந்து விட்டது. இந்த நம்பிக்கை ஒரு நாளில் வந்து விடுமோ? வரவே வராது! ஒரு நாளில் நீங்கள் எதிர்பார்க்கவே முடியாது.
குடிலுக்கு வந்து, ஞானிகளைப் பற்றி தினம்தினம் பேசவும், அவர்களுடைய நூல்களைப் படிக்கவும் வேண்டும். இப்படி இருந்தால்தான் அருள் கிடைக்கும். அருள் கிடைப்பவனுக்கு இருள் இருக்காது.
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி மாசுஅறு காட்சி யவர்க்கு.
- திருக்குறள் - மெய் உணர்தல் - குறள் எண் 352 சமுதாயத்தில் இருக்கும் பாவம் தேய்ந்து புண்ணியம் பெருக வேண்டும். இருள் எப்படி இருக்கும்? வெளிச்சம் இல்லாத இடத்தை இருள் என்பார். இருட்டை விரட்ட விளக்கை ஏற்றினால் போதுமா? இது இருள் இல்லையப்பா.
-25)
14 ஞானத்திருவடி ஒன்றைப்பற்றி அறியக்கூடிய அறிவு நமக்கு இல்லையென்றால், அது இருள்தான். இன்றைக்கு மிகப்பெரும் கருணைக் கொண்டு பேசுகிறோம். நான் இனி பிறக்க விரும்பவில்லை. இப்படி கேட்க யாரும் சொல்லித்தர மாட்டார்கள். இது சின்ன விசயமில்லை.
நான் இனி பிறக்க விரும்பவில்லை. நீர் எனக்கு அருள் செய்ய வேண்டும், இப்படி யாரை பார்த்து கேட்க வேண்டும். ஆசான் முதுபெரும் தலைவனைப் பார்த்து கேட்கவேண்டும், .
இனி நான் பிறக்க விரும்பவில்லையப்பா! நீர்தான் எனக்கு அருள் செய்ய வேண்டும். இப்படித்தான் ஆசானிடம் கேட்க வேண்டும். இப்படி கேட்காமல் இருள் நீங்காது. இப்படி கேட்பதற்கு நாம் சொல்லித் தரணும். நல்ல வெளிச்சத்தில்தான் இருக்கிறோம். ஆனால் ஆசான், இருட்டில் இருக்கிறான் என்பார். நல்ல வெளிச்சம், ஆனால் இருள் என்றார்.
இருள் நீங்கி இன்பம் பயக்கும் யாருக்கு? அறியாமை நீங்கி இன்பம் பயக்கும். எது அறியாமையை உண்டு பண்ணுவது? எது நம்மைத் தொடர்ந்து வஞ்சிக்கிறது? நம்மை வஞ்சிப்பது உடம்பாகிய இருள். காமதேகம் நீங்காமல் அறிவு வேலை செய்யாது, வெளிச்சம் வராது.
மருள் என்பது அறியாமை, தடுமாற்றம், குற்றமுள்ள உடம்பு. குற்றமற்ற தேகத்தைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் இங்கே வந்திருக்கிறீர்கள். வேறு எந்த நோக்கமும் இல்லை, நீங்கள் தொடர்ந்து இங்கே தொண்டு செய்கிறீர்கள். வருகின்ற மக்களுக்கு சாப்பாடு போடுகிறீர்கள். காலையிலும், மாலையிலும் இடத்தை சுத்தம் செய்கிறீர்கள். பிறகு அறிவுரைகளை கேட்கிறீர்கள்.
இதெல்லாம் எதற்கைய்யா? இங்கு வந்த நோக்கம் என்ன? ஐயா! நான் இருள் நீங்கி இன்பம் பெற வேண்டும்.
இருள் என்றால் அறியாமை. அறியாமையை உண்டு பண்ணுகின்ற காமத்தை நாம் உடைத்தெறிய வேண்டும்.
அப்ப மனைவி மக்களோடு இருக்கலாமா? ஒன்றும் தடையில்லை.
கணவனுக்கு மனைவி துணை, மனைவிக்கு கணவன் துணை. ஆக இருவரும் தெளிவான இடத்திற்கு வரும் வரையில் ஒருவரின் துணை ஒருவருக்கு இருக்க வேண்டும். ஆண்களாக இருந்தாலும் சரி, அது பெண்களாக இருந்தாலும் சரி, அவர்கள் ஒரு இடத்தை அடையும் வரையில் அவசியம் துணை இருக்க வேண்டும். அதற்கே பதினைந்து இருபது வருடங்கள் ஆகும்.
இந்த லட்சியத்தை அடைய இருபது வருடம் ஆகுமைய்யா! இந்த லட்சியத்தை அடைய கணவனுக்கு மனைவி தடையோ? மனைவிக்கு கணவன்
26,
4. ஞானத்திருவடி தடையோ? பிள்ளைக்குத் தாய் தடையோ? தாய்க்குப் பிள்ளை தடையோ? அல்லது உத்தியோகம்தான் தடையாக இருக்குமா? இருக்காது.
நாம் வேலைக்கு போகலாம், மனைவி மக்களோடு இருக்கலாம்; அன்போடு குடும்பம் நடத்தலாம். நமது லட்சியம், ஒன்றே ஒன்று இருளை நீக்க வேண்டும். நம் உடம்பாகிய மாய்கையை, காமத்தை நீக்க வேண்டும்.
அப்ப இல்லறம் சிறக்காதா? என்றான். இல்லறம் நல்லபடிதான் இருக்கும். ஒன்றும் நட்டமில்லை. இல்லறத்தை புரிந்து கொண்டவன், ஆசான் ஆசியை பெற்று வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருக்கிறான். ஆனால் ஆசான் ஆசி பெறாதவன், வாழ்க்கையை புரியாமல் நடத்திக் கொண்டிருப்பான்.
இந்த தேகந்தான் அறியாமையை உண்டு பண்ணும். இதுவே காமதேகம். இதுவே இருள். ஆசான் ஆசி பெற்றவன் என்ன செய்வான்? கணவன் துணை கொண்டு மனைவி வாழ வேண்டும். மனைவி துணை கொண்டு கணவன் வாழ வேண்டும். அப்படியே அதன் போக்கிலேயே போக வேண்டும். தெளிந்த அறிவு வரும். இதற்கு சுமார் 15, 20 ஆண்டுகள் ஆகும். பிறகு ஆசான் வந்து அருள் செய்வார்.
நல்ல பக்தி மேலோங்கியிருக்கிறது. பக்தி மேலோங்க மேலோங்க தன்னைப் பற்றி அறியக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். தன் னைப்பற்றி அறியக்கூடிய வாய்ப்பு கிடைத்தால், தன்னைப் பற்றிய பலகீனங்களை தெரிந்து கொள்வான். அப்படி தெரிந்து கொண்டால் வெல்லுகின்ற இடத்திற்கு வருவான்.
அப்ப மருள் நீங்கினால் போதுமா? இந்த இடத்தில் இன்னொரு மர்மம் இருக்கிறது. எதற்கு இருள் நீங்கி இன்பம் பயக்கும் என்று சொன்னீர்கள்? அறியாமை நீங்க வேண்டும் என்பதற்காக சொன்னேன்.
அறியாமையை உண்டு பண்ணுவது காம தேகம். காமதேகம் நீங்கினால் மட்டும் போதுமா? சுத்தமான தேகம் வெளிப்பட வேண்டும். காமதேகம் தூக்கி எறியப்பட வேண்டும். பிறகு, மருள் நீங்கி மாசறு காட்சியவர் என்றார்.
இதற்கு எத்தனை ஆண்டுகள் ஆனால்தான் என்ன? இப்பொழுதே துவங்கினால் என்ன? இருபது வயதில் ஆரம்பிக்கிறாய். நாற்பது வயதில் முடியட்டுமே? மனைவி மக்களுடன் நாற்பது வயது வரை வாழ்ந்தால் போதாதா? ஐம்பது வயதிற்கு பிறகு என்ன செய்வாய்?
பிறந்தால், பிறந்ததின் நோக்கத்தை அடையக்கூடிய எண் ணம் இருக்க வேண்டும், மறுபடியும் மறுபடியும் இதிலேயே விழுந்து சாக வேண்டுமென்று நினைக்கின்றாயா? நாம் இதுநாள் வரையிலும் குடும்பத்தைப் பற்றி இப்படி பேசவில்லை, குடும்பம் ஒன்றும் தடையாக இருக்க முடியாதல்லவா? அதற்குதான் சொன்னேன்,
4 ஞானத்திருவடி இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை.
- திருக்குறள் - இல்வாழ்க்கை - குறள் எண் 47. வாழ்க்கையின் இயல்பு அறிந்தவர்கள் என்ன செய்வார்கள்? அதன் போக்கிலேயே சென்று வெற்றி பெறுவார்கள். மீண்டும் மீண்டும் இறந்து பிறக்க வேண்டுமா? நாம் வந்த நோக்கமென்ன? நல்ல ஆசான் கிடைத்திருக்கிறார், அவரால் அறியக்கூடியவற்றை அறிந்து கொள்ளலாம்; தெளிவான அறிவு பெறலாம். )
இப்படி இருப்பதற்கு பந்த பாசத்தை நீக்க வேண்டிய அவசியமில்லை. உலக நடையில் இருந்து கொண்டே இதை செய்து கொள்ளலாம். அது ஒரு அரிய வாய்ப்பு.
மாத்தானவத்தையும் மாயாபுரியின் மயக்கத்தையும் நீத்தார் தமக்கொரு நிட்டையுண்டோ? நித்தம் அன்பு கொண்டு வேர்த்தாற் குளித்துப் பசித்தாற் புசித்து விழிதுயின்று பார்த்தால் உலகத்தவர் போலிருப்பர் பற்றற்றவரே.
- மகான் பட்டினத்தார் பாடல் - பொது - கவி எண் 19 இல்லறத்திலிருப்பான், அதே நேரத்தில் ஞானியாகிக் கொண்டும் இருப்பான். என்ன காரணம்? தலைவனை புரிந்து கொண்டான். தலைவன்தான் ஆசி வழங்குவார் என்பதையும் புரிந்து கொண்டான்.
மனைவி மக்களோடு இருக்கிறான். உலக நடையில் இருந்து கொண்டே இருக்கிறான். ஆனால் அவன், இல்லற ஞானியாக இருக்கிறான். நீ இல்லற ஞானியாக இருந்து இனி பிறவாமைக்குரிய மார்க்கத்தை கடைப்பிடிக்கின்றாயா? அல்லது மீண்டும் மீண்டும் இதிலேயே வீழ்ந்து நரகத்தில் மூழ்குகின்றாயா? நீ வந்த நோக்கமென்ன? இதைத்தான் நாம் கேட்கின்றோம்.
நான் இந்த சிந்தனையை உங்களிடம் தட்டி எழுப்புகின்றேன். நீங்கள் வந்த நோக்கம் என்ன? எதற்காக நீ பிறந்தாய்? பிறந்த நோக்கம் என்ன? இதிலேயே உழன்று கிடப்பதா? அல்லது விட்டு விடுபட்டு தூக்கி எறிவதா? இதிலேயே உழன்று கிடப்பதற்குத்தான் நீ வந்தாயா? அல்லது இதை விட்டுவிட்டுப் போக வந்தாயா? தேவையில்லை! விடவும் வேண்டாம். நன்றாகவும் வாழலாம்!
வாழ்க்கையின் இயல்பறிந்தவர்கள், அதன் போக்கிலேயே சென்று, ஒவ்வொரு நாளும் தவறாது பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்தால்தான் சிறப்பறிவு வரும். இல்லையென்றால் உங்களால் ஒன்றும் முடியாது. )
இங்கே வருகிறீர்கள், அன்னதானம் செய்கிறீர்கள், பொருளுதவி செய்கிறீர்கள், பொதுமக்களிடம் அன்னதானத்திற்கு பொருள் பெற்று அனுப்புகிறீர்கள். இதெல்லாம் உண்மைதான்.
-28)
4 ஞானத்திருவடி இப்படி நான் பேசுவதற்கும், அதை நீங்கள் கேட்பதற்கும் புண்ணியம் செய்திருக்கின்றீர்கள். இல்லையென்றால் இந்த அளவுக்கு உங்கள் மீது கருணை கொண்டு பேசமாட்டோம்.
மலேசியாவில் ஆறேழு ஆண்டுகளாக ஆண்களும் பெண்களுமாக தன்னால் முடிந்த தொண்டு செய்கிறீர்கள். மேலும் பொது மக்களிடம் சென்று, இந்தியாவில் ஏழை எளிய மக்கள் இருக்கின்றார்கள், அவர்கள் பசியாற பொருளுதவி செய்யுங்களென்று பொதுமக்களிடம் கேட்கிறீர்கள். அப்போது உங்களை பலர் இகழ்ந்து பேசுவதை சகித்துக் கொண்டு, பொருளைத் திரட்டி தொண்டு செய்கிறீர்கள்.
ஆசான் இராமலிங்க சுவாமிகள், உம்மால் முடிந்ததைக் கொடு, இல்லையென்றால் யாரிடமாவது வாங்கியாவது கொடு என்பார். ஆக, அவர் சொல்லியபடி, தன்னால் இயன்ற பொருளுதவி செய்தும், வாரந்தோறும் பொதுமக்களிடம் சென்று அன்னதானத்திற்கு பொருள் திரட்டி அனுப்புகிறீர்கள்.
நல்ல ஆசான் இருக்கிறார். அவரிடம் பொருள் கொடுத்தால், அதை முறைப்படுத்தி, அன்பர்களின் துணை கொண்டு ஏழை எளிய மக்களுக்குப் பசியாற்றுவிப்பார்கள். சுத்த ஆன்மீகம் பரவுவதற்காக கட்டிடங்கள் கட்டியிருக்கின்றோம். சும்மா ஆரவாரத்திற்காக இல்லை. கட்டிடம் அமைத்த நோக்கம் நல்ல நோக்கம்.
இங்கே கட்டிடங்கள் இருப்பதால்தான், நான் அமர்ந்து பேசவும், நீங்கள் கேட்கவும் வாய்ப்பாக இருக்கின்றது. இந்த கட்டிடங்கள், ஆன்மீகவாதிகள் தங்கி ஓய்வெடுக்கவும், பசியாறவும் பயன்படுகிறது.
இப்ப இருள் நீங்கி இன்பம் பயக்கும் என்றார். இது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. இந்த இரகசியத்தை எளிதில் கற்றுக்கொள்ள முடியாது.
இருள் நீங்கி இன்பம் பயக்கும் - ஜீவான்மாவும் பர மான்மாவும் ஒன்றுபட்டது, இடகலையும் பின்கலையும் ஒன்றுபட்டது, நல்வினையும் தீவினையும் ஒன்று பட்டது, மருளும், இருளும் ஒன்றுபட்டது, பாவ புண்ணியம் ஒன்றுபட்டது. |
ஆசானும் சீடனும் ஒன்றுபட்டார்கள். ஆசானும் சீடனும் ஒன்றுபட்டால் என்னாகும்? ஆணவம், கன்மம், மாயை என்கிற மும்மலமும் விலகிப் போகும். இந்த வாய்ப்பை நாம் பெறணும்.
நான் இத்தனை ஆண்டுகள் ஏன் இதை சொல்லவில்லை? இப்போது புண்ணியம் மிகுதியாக உங்களிடம் இருக்கிறது. எனவே இதை சொல்லி வைக்கிறோம். நீங்களும் கேட்டு வைப்பதே நல்லது.
நான் பிறக்க விரும்பவில்லை, நான் பிறக்க விரும்பவில்லை. இது யார்
129)
4 ஞானத்திருவடி ஆசியால் முடியும்? ஆசான் அகத்தீசன் ஆசியாலும், ஆசான் ஞானபண்டிதன் ஆசியாலும்தான் முடியும். ஆக இப்படிப்பட்ட பற்றற்ற தன்மை , நமக்கு வருவது அவ்வளவு இலகு என்று நினைத்துவிடாதீர்கள். இதைக் கேட்டவுடனே மனைவி மக்களிடமிருந்து விடுபட வேண்டும் என்று நினைத்து விடாதீர்கள்.
இது கறையான் உலகை வலம் வந்தது போன்றது. அது உலகை வலம் வந்தது போல் ஞான மார்க்கம் என்றான். நாம், நாக்கு தழும்பேறும் வரை பூஜையில் ஆசானை கேட்கவேண்டும், என்ன கேட்க வேண்டும்? அடியேனுக்கு ஞானம் சித்திக்கணும். அதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டும், எனக்கு ஞானம் சித்திக்க வேண்டுமப்பா, அதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டும். இப்படி எப்பொழுதும் எந்த நேரத்திலும் இதையே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
எந்த நேரத்திலும், அகத்தீஸ்வரா! அகத்தீஸ்வரா! என்றும், திருமூலதேவா! திருமூலதேவா என்றும் எப்பொழுதும் சொல்கிறோம். இவர்களெல்லாம் முதுபெரும் ஞானிகள், ஒரே தன்மையுள்ளவர்கள். ஆக, கறையான் உலகை வலம் வந்தது போல இந்த ஞான மார்க்கம் உள்ளது.
மூன்று மாதத்திலோ அல்லது ஆறு மாதத்திலோ ஞானத்தை அடைய முடியுமென்று நினைக்காதீர்கள். அப்படி நினைத்தால் ஏமாந்து போவீர்கள். இது எறும்பு ஊர கல் குழிந்தாற் போல் என்பார். பாறையில் எறும்பு ஊர்ந்து ஊர்ந்து சென்று அப்பாறையில் குழி விழுவதற்கு எவ்வளவு காலம் ஆகுமோ, அவ்வளவு நாளாகும் ஒருவன் இந்த துறையில் முன்னேறுவதற்கு.
ஞானத்தை அடைய மற்ற இடங்களில் என்ன சொல்வான்? இந்த உண்மையை சொல்ல மாட்டான். உடனே மயக்குவான். மூச்சை இப்படி இழு என்பான்.யோகாப்பியாசம் இப்படி செய்யணும், அப்படி செய்யணும் என்று சொல்வான்.
நாம் யோகாப்பியாசம் உனக்கு வேண்டாமென்று சொல்வோம். யோகாப்பியாசம் என்பது ஆசான் தான் நடத்தித் தர வேண்டும். ஆனால் இதைப்பற்றியெல்லாம் தெரியாமல், அவன் யோகாப்பியாசத்தை பற்றி பேசுவான்.
ஆசான், யோகாப்பியாசம் பற்றி அறிந்துகொள்வதற்கே, பத்து, பதினைந்து வருடம் ஆகும் என்பார். ஆனால் இவனோ, ஆறு மாதத்தில் ஞானியாகலாம் என்பான். இதுபோன்ற மயக்க வார்த்தை சொல்லி, தன்னை நம்பி வந்தவர்களை ஏமாற்றிவிடுவான். இதை மகான் தாயுமான சுவாமிகள் சொல்வார்.
கற்கண்டா லோடுகின்ற காக்கைபோற் பொய்மாயச் சொற்கண்டா லோடுமன்பர் தோய்வறிவ தெந்நாளோ?
- மகான் தாயுமான சுவாமிகள் பாடல் - அன்பர் நெறி - கவி எண் 5. ஆக, இவர்களெல்லாம் உண்மை தெரியாதவர்கள் என்பார்.
30;
-: ஞானத்திருவடிஆசான் கிருபையால்தான் வாசி வசப்படுமென்று நாங்கள் சொல்கிறோம். அதைத்தான் இருள் நீங்கி இன்பம் பயக்கும் என்று ஆசான் திருவள்ளுவர் சொன்னார்,
ஆனால், ஏமாற்றுபவன் அதெல்லாம் சொல்ல மாட்டான். இப்படி மூச்சைக் கட்டு என் பான். முன் உண்ட உணவு வயிற்றில் இருக்கும்பொழுதே மூச்சைக் கட்டுவான். அதைத்தான் மகான் சட்டமுனிவர் சொல்வார்.
அற்பமா மூட ரறியாமல் யோகம் சொற்பமா யெண்ணிச் செய்தே மரித்தார் கற்பமில் லாட்டால் காணுமோ ஞானம் அற்பர்செய் யோகம் அழிம்பிது பாரே.
-மகான் சட்டமுனிவர் அருளிய குரு சூஸ்திரம் 21 - கவி எண் 17 பார்த்தே சிலநூல் பாடினதைக் கற்று காத்தே யடைத்து கனயோகி என்று சேர்த்தே சீஷரைச் செய்துப தேசம் கூத்திது வாகுங் கூடாது முத்தியே.
- மகான் சட்டமுனிவர் அருளிய குரு சூஸ்திரம் 21 - கவி எண் 18 ஆக, அற்பமாம் மூடர் அறியாமல் யோகம் செய்வார், என்பார் ஆசான் சட்டமுனிவர், நாங்கள் இப்படி சொல்ல மாட்டோம். இது ஒன்றும் சின்ன விசயமில்லை. உடம்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் மீண்டும் மீண்டும் பிறவாமைக்குரிய மார்க்கம். உடம்பைக் காப்பாற்றாவிட்டால் செத்துப் போவான், கண்டபடி பிராணாயாமம் செய்பவனெல்லாம் செத்தே போவான். பிராணாயாமம் சொல்லிக் கொடுப்பவனும், வயிறு வீங்கி, கால் வீங்கி சாவான். அற்பமாம் மூடர் அறியாமல் யோகம்
சொற்பமாய் எண்ணி செய்தே மரித்தார் அற்பாம் மூடர் - மூடர்கள், அற்பர்கள். அற்பன்னா சின்ன புத்தியுள்ளவனென்று அர்த்தம்.
(யோகத்தை சும்மா இலகு என்று நினைத்துக் கொண்டான். இப்படி இப்படி செய்தால் ஞானம் வந்து விடும் என்று நினைத்தான். அவன் செய்தது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் போதிக்க ஆரம்பித்தான்.
சொற்பமாய் எண்ணி செய்தே மரித்தார்
கற்பமில்லாட்டால் காணுமோ ஞானம் | யோகநெறியில் வருகின்ற மக்களுக்கு சில பழங்களை உண்ண வேண்டுமென்று ஞானிகள் சொல்வார்கள். அதற்கு தலைவன் ஆசி வரும். யோகம் செய்யும் போது, இந்த உடம்பில் அனல் ஏறும். அப்படி அனல் ஏறும்போது, ஆசான்
-31)
5ஞானத்திருவடிவகுத்துக்கொடுத்த பாசிப்பயறு, பச்சரிசி, பால், பழங்கள், இன்னும் சில மூலிகைகள் போன்றவற்றை சாப்பிட்டு உடம்பைக் காப்பாற்றிக் கொள்வார்கள். )
கற்பமில்லாட்டால் காணுமோ ஞானம் - இந்த உடம்பைக் காப்பாற்றிக் கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். எந்தெந்த உணவு தந்தால் உடம்பில் அதிக உஷ் ணம் ஏறாது? என்பதை தெரிந்து கொள்ள ணும். இந்த ஜென்மத்தில் இல்லாவிட்டாலும் அடுத்த ஜென்மத்திலாவது இது பயன்படுமல்லவா?
நாம் சாப்பிடுகின்ற உணவெல்லாம் கற்பதேகத்திற்கு ஆக்கம் தரும். ஏனய்யா உடம்பைக் காப்பாற்றுகிறாய்? சோப்பு போட்டு கழுவுகிறாய். நன்றாக தூங்குகிறாய்; அடிக்கடி டீ காபி குடிக்கிறாய். எதற்கைய்யா இந்த உடம்பைக் காப்பாற்றுகிறாய்? நான் மனைவி மக்களோடு வாழ்வதற்கு என் பான். அதுதான் எல்லோரும் வாழ்ந்து சாகிறானே! நீ என்னடா வாழ்கிறது? கால் நடைகூட வாழ்கிறது. கால்நடையும்தான் சாப்பிடுது, இனப்பெருக்கம் செய்கிறது, தூங்குது; உட்காருது, கடைசியில் இறக்கிறது.
தலைவன், நீ எதற்கு வந்தாய்? என்பார். அங்கே மாடு படுத்திருப்பதை பார்த்தாயா? அதுவும் சாப்பிடுகிறது, கன்று போடுது, பால் கொடுக்கிறது. அது போன்று வாழ்வதற்கு நாம் இங்கே பிறக்க வில் லை. நாம் வந்ததின் நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
உடம்பைக் காப்பாற்றுகின்ற கற்பத்தை நாம் அறிய வேண்டும். நாம் சாப்பிடுகின்ற உணவு உடம்பை வளர்க்கிறது. அந்த உடம்பை வளர்ப்பது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சாப்பிடும்போது, அந்த உணவு நீடிய ஆயுள் தரக்கூடியதாக இருக்க வேண்டும், உடல் வெப்பத்தைக் குறைப்பதாக இருக்க வேண்டும். இதைத்தான் ஆசான் சட்டமுனிவர் சொல்வார்.
கற்பமில்லாட்டால் காணுமோ ஞானம்
அற்பர் செய் யோகம் அழிம்பிது பாரே. உலக நடையில் உள்ள மக்கள், என்ன செய்கிறார்கள்? அவரவர்கள் மனதில் பட்டதெல்லாம் பேசிக்கொண்டிருப்பார்கள். நாங்கள் அப்படி பேச மாட்டோம். காரணம்? ஞானத்துறையில், மனித வர்க்கம் அடையக்கூடிய மோட்சலாபத்தைப் பற்றி பேசுகிறோம். ஞானமார்க்கத்திற்கும் மோட்சலாபத்திற்கும் தலைவன் குருநாதன் முருகப்பெருமான் ஆசி இருக்க வேண்டும். இதைத்தான் ஆசான் அருணகிரிநாதர் “குருநாதன் சொன்ன சீலத்தை மெல்ல தெளிந்து அறிவார் சிவயோகிகளே காலத்தை வென்று இருப்பார் மரிப்பார் வெறும் கர்மிகளே" என்பார்.
உருகி தியானம் செய்வதுதான், காலத்தை வெல்லுகின்ற முறையாகும். யாரை உருகி தியானம் செய்வது? யார் மீது அன்பு செலுத்துவது? என்பதை நாங்கள் முன்பே சொல்லியிருக்கிறோம். ஞானிகளை அறிமுகம் செய்கிறோம்.

32)
14 ஞானத்திருவடி ஞானிகள் திருவடியைப் பற்றச் சொல்லியிருக்கிறோம். தினந்தினமும் ஆசானிடம் கேட்கச் சொல்லியிருக்கிறோம். தெளிவான அறிவை பெற்றுக் கொள் ளச் சொல்லியிருக்கிறோம்.
நாங்கள் இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறோம். எங்களுக்கு வாசி வசப்பட்டு பதினாறு வருடமாச்சு. பொல்லாத காம தேகம் வீழ்ந்து விட்டது. அதைத்தான் ஆசான் பட்டினத்தார் சொன்னார்.
நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்புபொம்ம லாட்டமென் றேயிரு பொல்லா வுடலை அடர்ந்தசந்தைக் கூட்டமென்றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர் ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்குப் தேசமிதே.
- மகான் பட்டினத்தார் பாடல் - பொது - கவி எண் 21. நாட்டமென்றே யிரு சற்குரு பாதத்தை நம்பு - நாட்டம் என்பது விரும்புதல். நாட்டம் என்றே யிரு - ஒரே சிந்தனையாக இரு.
இனி நான் பிறக்க விரும்பவில்லை, நீரே எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று இல்லறத்தார்கள் ஒரே சிந்தனையாக ஆசானை கேட்கவேண்டும். இனி நான் பிறக்க விரும்பவில்லை ஐயா! அதற்கு நீர்தான் அருள்செய்ய வேண்டும்! என்று இல்லறத்திலிருக்கும் ஒரு ஆண் மகனோ அல்லது பெண்மகளோ கேட்கவேண்டும்.
இந்த வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது. அந்த காலத்தில், கயிறு பிடித்து இழுத்து ஆட்டும் பொம்மலாட்டம் போன்றது. இப்படிப்பட்டதுதான் நமது வாழ்க்கை . இதைத்தான் ஆசான் பட்டினத்தார் தனது மற்றொரு பாடலிலும் சொல்வார்.
நீர்க்குமிழி வாழ்வைநம்பி நிச்சயமென் றேயெண்ணிப் பாக்களவாம் அன்னம் பசித்தோர்க் களியாமல் போர்க்குளெம் தூதன் பிடித்திழுக்கு மப்போது ஆர்ப்படுவா ரென்றே யறிந்திலையே நெஞ்சமே.
- மகான் பட்டினத்தார் பாடல் - நெஞ்சொடு புலம்பல் - கவி எண் 17 நீர்க்குமிழி வாழ்வை நம்பி நிச்சயமென்றே யெண் ணி இருப்பார்கள்.
நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்புபொம்ம லாட்டமென் றேயிரு பொல்லா வுடலை அடர்ந்தசந்தைக் கூட்டமென்றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர் ஒட்டமென் றேயிரு நெஞ்சே உனக்குப தேசமிதே.
- மகான் பட்டினத்தார் பாடல் - பொது - கவி எண் 21. ஞானியர்களின் சிந்தனையெல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மகான் பட்டினத்தார், மகான் அருணகிரிநாதர், மகான் திருமூலதேவர் அருளிய
33)
4 ஞானத்திருவடிபாடல்களை உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். ஞானிகள் பாடல்களில் உள்ளதை நிறைய சொல்லியிருக்கிறோம். காரணம் இந்த பாடல்கள் உங்கள் செவியில் விழ வேண்டும்.
உங்களுடைய ஆன்மா தட்டி எழுப்பப்பட வேண்டும், நீங்கள் பாவத்திலிருந்து விடுபட வேண்டும், தெளிந்த அறிவு பெற வேண்டும். ஞானிகளின் பாடல்களுடைய இயல்பு என்ன வென்றால், ஆன்மாவை குத்தி எழுப்பும். தட்டி எழுப்புவதல்ல! அடித்து எழுப்பக் கூடிய வார்த்தையை நான் பேசியிருக்கிறேன்.
அன்பர்கள், ஆணாக இருந்தாலும் சரி, பெண் ண ாக இருந்தாலும் சரி, மோட்சலாபமே! அடையக்கூடிய லட்சியம். காலம் நெருங்கிவிட்டது. இனி தாமதிக்க முடியாது.
ஆசான் இராமலிங்க சுவாமிகளிடம், அன்பர்கள் அனைவரும், "நீங்கள் இல்லாவிட்டால், நாங்கள் எப்படி அழைப்போம், எங்களை விட்டுப் போகிறீரே! நாங்கள் என்ன செய்வோம்?” என்றார். அதற்கு ஆசான் இராமலிங்க சுவாமிகள், “நீ எந்த நேரத்தில் நினைத்தாலும் நான் வருவேன் என்றார். இதைத்தான் ஆசான் இராமலிங்க சுவாமிகள் சொல்வார். நினைந்து நினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந் தன்பே
நிறைந்து நிறைந்து ஊற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே. - திருஅருட்பா ஆறாம் திருமுறை - வாய்ப்பறை பார்த்தல் - கவி எண் 1530. சத்தியம் செய்கின்றேன், சத்தியம் செய்யும் நோக்கம் என் ன வென்றால், நீங்களெல்லாம் முன்னேறுங்கள், நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து செயல்படுங்கள்! என்பார்,
தினந்தினம் திருவாசகத்தையும், திருஅருட்பாவையும் சிறிது நேரம் படிக்க வேண்டும், அதே சிந்தனையாக இருக்கணும். நாமஜெபம் செய்யணும். அன்பர்கள், ஒரு பத்து நிமிடம், ஆன் மீகவாதிகளோடு பேசணும். வீண் வார்த்தை பேசுபவர்களிடம் பேசக்கூடாது.
சுத்த ஆன்மீகவாதிகளான, ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் குழுவாக அமர வேண்டும், படிக்கத் தெரிந்தவர்கள் தமிழ் படிக்க வேண்டும். மலேசிய அன்பர்கள், தங்கள் பிள்ளைகளை மலேசியாவில் தமிழில் படிக்க வைக்க வேண் டும். என்ன
34.
4 ஞானத்திருவடி காரணம்? தமிழ் படித்தவன்தான் கடவுள் ஆக முடியும். தமிழில்தான் இந்த ரகசியம் இருக்கிறது. வேறு எங்கும் இந்த இரகசியம் கிடையாது.
ஒருபதந் தன்னைத் தூக்கி ஒருபதந் தன்னை மாற்றி இருபதம் ஆடுகின்ற இயல்பைநீ அறிந்தா யானால் குருபத மென்று கூறுங் குறிப்புனக் குள்ளே யாச்சு வருபத நாகைநாதர் மலரடி காண்பாய் நெஞ்சே.
- மகான் கணபதிதாசர் - நெஞ்சறி விளக்கம் - கவி எண் 22. ஒரு பதம் தன்னைத் தூக்கி, அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். இந்த இரகசியம் தமிழில்தான் உள்ளது. அதை அறிந்துகொள்வதற்கு நீங்கள் தமிழ் படிக்க வேண்டும்.
திருவாசகத்தை படிக்கத் தெரிய வேண்டும். நாம், பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுத் தராவிட்டால், அவர்கள் திருவாசகத்தையும், திருஅருட்பாவையும் படிக்க முடியாது. இது நம் பிள்ளைகளுக்கு நாம் செய்யக்கூடிய துரோகமாக கருத வேண்டும்.
நம் பிள்ளைகள் தமிழ் படிக்க வேண்டும். அவர்கள் ஒரு காலத்தில் தன் நிலை உணர்ந்து மரணமிலாப் பெருவாழ்வு பெற வேண்டும். அப்படி பெற்றால்தான், தனது இருபத்தியொரு தலைமுறையை ஞானியாக்குவார்.
ஒருவர் ஞானியானால், தனது தாய் வழி இருபத்து ஒன்று, தந்தை வழி இருபத்து ஒன்று தலைமுறையை ஞானியாக்குவார். ஆகவே தமிழ் படிக்க, நம் பிள்ளைகளுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். தமிழ் படித்தவன் யாரும் கெட்டுவிட மாட்டான். அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.
நீங்கள் மலேசியாவில், மலேய மொழியும், ஆங்கிலமும் படிக்கலாம், தமிழும் படிக்கலாம். இதற்கு ஒன்றும் தடையில்லை. நம் பிள்ளைகள் தமிழ்மொழி படித்தால், வேலைவாய்ப்பு கிடைக்குமா என்று நினைக்காதே! ஆசான் ஆசியால், நிச்சயம் கிடைக்கும்.
தமிழ் படித்தால்தான், திருக்குறள், திருஅருட்பா, திருவாசகம் போன்ற ஞான நூல்களை படிக்க முடியும். தமிழ் படித்தவனுக்குத்தான் ஞானம் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. ஆகவே ஞானத்தை அறிந்து கொள்வதற்கான, ரகசியமெல்லாம் தமிழ் மொழியில்தான் இருக்கிறது.
தமிழ் நமக்கு தாய் மொழி, ஞான மொழி. தமிழ் மொழிதான், ஞானத்திற்கு வழிவகுத்து கொடுத்தது. ஆகவே தமிழை படிக்க வேண்டும். நம் தமிழகத்தில் கூட எல்லோரும் தம் பிள்ளைகளை ஆங்கிலப்பள்ளியில் படிக்க வைக்கிறார்கள். இதை பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமை என்று நினைக்கிறார்கள்.
35)
4 ஞானத்திருவடி ஒரு காலத்தில் உண்மை தெரியும். திருக்குறளை படிக்க சொன்னால் படிக்க மாட்டேன் என் கிறானே! திரு அருட்பா வை படிக்கச் சொன் னால் படிக்க தெரியவில்லை, திருவாசகத்தை படிக்கச் சொன்னால் தடுமாறுகின்றானே! அப்போது “ஐயோ! நம் பிள்ளைகளுக்கு தமிழ் படிக்க முடியாத தடுமாற்றம் வந்துவிட்டதே என்று வருந்துவார்கள்.
பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யவில்லை. இது அவரவர்கள் செய்த வினைப்பயன். அதற்கு நாம் பொறுப்பல்ல! நாம் சொல்ல வேண்டிய கடமைக்கு சொல்கிறோம். அன்னவன் விதிப்பயன் அவ்வாறிருந்தால் அதற்கு யாம் என் செய்வோம்? அவனவன் வினைப்பயனுக்கேற்றவாறு ஆங்கிலப்பள்ளியில்தான் படிக்க வேண்டும். ஆங்கிலப்பள்ளியில் படித்தால்தான் உயர்ந்த அறிவு வருமென்று நினைக்காதே. நீ எவ்வளவு பாடுபட்டாலும், எத்தனை ஆங்கில பள்ளியில் படித்திருந்தாலும் சரி. தமிழ் மொழி படிக்காதவனுக்கு ஞானமில்லை .
தமிழ் மொழியில்தான், ஞானத்திற்கான இரகசியம் இருக்கிறது. இந்த ரகசியத்தை ஆசான் கணபதிதாசர் சொல்வார்,
ஒருபதந் தன்னைத் தூக்கி ஒருபதந் தன்னை மாற்றி இருபதம் ஆடுகின்ற இயல்பைநீ அறிந்தா யானால் குருபத மென்றுகூறுங் குறிப்புனக் குள்ளே யாச்சு
வருபத நாகைநாதர் மலரடி காண்பாய் நெஞ்சே. இதையே ஆசான் திருமூலர் சொல்வார்,
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில் உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும் புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.
- திருமந்திரம் - பிராணாயாமம் - கவி எண் 575 தமிழில்தான் இந்த ஞான இரகசியம் இருக்கிறது. அதை தமிழில்தான் படிக்க வேண்டும். நீ எப்படி தான் மொழி பெயர்த்தாலும், முடியாது. தன்னுடைய மகனையோ, மகளையோ கடவுளாக்கினால், அவர்கள் தன்னுடைய தாய் தந்தை பாவத்தையும் பொடியாக்குவார்கள். அப்படி செய்யாமல், அவர்களும் நம்மைப் போன்று அல்லற்பட்டு சாக நினைக்கின்றாயா? எதை நீ நினைக்கின்றாய். இதை உங்களால் போகப்போக உணர்ந்து கொள்ள முடியும். இதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டுமென்பதற்காகத்தான், நாங்கள் சொல்கிறோம்.
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மலமாக்கில் (உள்ளே போகின்ற காற்று வெளியே வராது.) அடுத்து,
14 ஞானத்திருவடி உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே ஆக இந்த ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும். ஆசான் தான் புருவ மத்தியில் ஒடுங்கி நரைதிரையை மாற்ற வேண்டும்.
இப்ப எனக்கு நரை திரை இருக்கிறது. என்னை புகைப்படம் (போட்டோ) பிடிக்கின்றீர்கள், இன்னும் இரண்டு வருடம் கழித்து என்னை பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். அடேயப்பா! என்னய்யா! இது.
உலக நடையில், காய்தான் பழுக்கும். ஆனால் பழம் காயாகின்றது. இது எப்படி? இது எந்த மொழியில் வந்தது? இந்த இரகசியம் எந்த மொழியில் இருக்கின்றது.
ஒரு இளம் பெண் முதுமையடைந்து கிழவியாவாள். இதுதான் உலக இயல்பு. ஆனால் கிழவி குமரியாக முடியாது. இப்ப நான் முதுமையாக தெரிகிறேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நரை திரை மாறி மீண்டும் இளமை வரும், இதைப்பற்றி எந்த மொழியில் இருக்கிறது? தமிழ் மொழியில் மட்டும்தான் இருக்கின்றது.
அதற்காக நான் மற்ற மொழிகளை புறக்கணிக்க விரும்பவில்லை. தமிழ் மொழி வேண்டும், ஆங்கிலம் வேண்டும், அந்தந்த நாட்டு தாய்மொழியும் வேண்டும். ஒரு பெண்ணுக்கோ ஆணுக்கோ மூன்று அல்லது நான்கு மொழி தெரிந்திருக்க வேண்டும். அவர்கள் கட்டாயம் தமிழ் மொழி அறிந்திருக்க வேண்டும்.
தமிழ் தலை மொழியாக, உண்மை மொ ழி யாக, ஞானத்திற்கு வழிகாட்டுகின்ற மொழியாக இருக்கிறது.
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை நெறிப்பட உள்ளே நின்மலமாக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும் உரோமம் - தலை முடி. இப்ப தலைமுடி வெளுத்திருக்கும், பின்பு கறுக்கும். புறப்பட்டுப் போகான் புரிசடையோனே - இந்த ரகசியத்தை தெரிந்திருக்க வேண்டுமென்றால் உன் பிள்ளை தமிழ் கற்றிருக்க வேண்டும். மலேசியாவில் உள்ள உங்கள் பிள்ளைகள், தமிழ்மொழி, மலேயமொழி, ஆங்கில மொழி தெரிந்திருக்க வேண்டும். அப்ப பல மொழிகளிலும் அவனை வல்லவனாக உருவாக்க வேண்டும்.
பிள்ளைகள் ஆண்மகனாக இருந்தாலும், பெண்மகளாக இருந்தாலும் சரி, அகத்தீசன் நாமத்தை சொல்ல வைக்க வேண்டும். பிள்ளைகளை பார்த்து, ஓம் அகத்தீசா! ஓம் அகத்தீசா என்று சொல்ல சொல்லி கேட்க வேண்டும். இப்படி பிள்ளைகள் ஒம் அகத்தீசா! ஓம் அகத்தீசா! என்று சொல்லும்போது ஆசான் அகத்தீசர் அவர்களை பார்க்கிறார்.
- 37
4 ஞானத்திருவடி ஆசான் அகத்தீசரின் பார்வை, ஆன்மாவை தட்டி எழுப்பும். ஒருநாள் சொன்னால், பலநாள் சொன்னால், தொடர்ந்து சொன்னால் ஆன்மாவை தட்டி எழுப்புவது மட்டுமல்லாமல், அவன் எல்லா மொழியிலும் வல்லவனாவான்.
நாங்கள் ஞானத்தைப் பற்றி பேசுகிறோம். நாங்கள் எந்த பள்ளிக்கும் சென்றதில்லை. தமிழ் மொழியை நாங்கள் படித்ததாலும், ஆசான் திருவடியை பற்றியதாலும் எங்களுக்கு இந்த உண்மை தெரிந்தது.
ஆக, நான் சொன்ன இந்த கருத்துக்களை கேட்பவருக்கெல்லாம், தன்னைப் பற்றி அறியக்கூடிய தகைமையும், வாய்ப்பும் கிடைக்கும். தலைவனை அறிகின்றவன் தான் தன்னை அறிவான். தன்னை அறிகின்றவன் தலைவனை அறிவான். இதுதான் நமது இலட்சியம்.
தினந்தினம் நாமஜெபம் செய்தால், சிறப்பறிவு உண்டாகும். அதன்மூலம் ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம். இந்த நோக்கத்தை அறிவதற்காகத்தான், நாம் வந்திருக்கிறோம்.
பிறந்தவர்க்கு மோக்ஷகதி தேடவேணும்
பின்கலையும் முன்கலையும் சேரவேணும் மறந்தவர்க்கு மறலிவந்தால் வாலுவாருண்டு
வருமுன்னரே வலுக்கட்டிக் கொள்ளவேணும் அறந்தழைக்கு மறுமுகவன் பாதம் போற்றி
அர்ச்சனைசெய் தாலுதவி யகண்டவாசல் துறந்துநின்ற திருவாடு துறையைப் பார்க்கில் சூரியனும் சந்திரனும் தோற்ற மாமே.
- மகான் அகத்தியர் - துறையறி விளக்கம் - கவி 6எண் 89 பிறந்தவரெல்லாம் மோட்சகதியை தேட வேண்டும் என் பார். இதை மறந்துவிட்டால், மறலி வந்துவிடும் என்பார். அப்ப, அறந்தழைக்கும் அறுமுகவன் பாதம் போற்றி என் பார், ஆறுமுகப் பெரு மா  ைன யோ, அகத்திய பெருமானையோ நினைக்கின்ற மக்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்.
பிறந்தவர் மோட்சகதியை தேட வேண்டும். மோட்சகதியை தேட விரும்புகின் றவன், மர ண மிலா பெருவாழ்வு பெற விரும்புகிறவன், நரகத்திலிருந்து விடுபட விரும்புகின் றவன், எதையும் கண்டு அஞ்சாத நெஞ்சத்தை விரும்புகின்றவன், ஆசான் ஞானபண்டிதனையும், அகத்தீசனை யும் பூஜை செய்து இந்த வாய்ப்பை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று சொல்லியிருக்கிறோம். )
நாம் வேண்டினால், பிறவாமையை வேண்ட வேண்டும். இதை ஆசான் திருவள்ளுவர் சொல்வார்,
4 ஞானத்திருவடி வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றுஅது வேண்டாமை வேண்ட வரும்.
- திருக்குறள் - அவா அறுத்தல் - குறள் எண் 362. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.
- திருக்குறள் - இனியவை கூறல் - குறள் எண் 96. பாவம் என்பதே உடம்புதானே? புண்ணியம் பெருகணும் என்றால் உயிர் ஆக்கம் பெறணும், உயிருக்கு ஆக்கமும், உடலுக்கு ஆக்கமும் வந்தால் பாவ புண் ணியம் சமமாகிவிட்டது என்று அர்த்தம். ஆகவே, அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை, நாடி இனிய சொலின் என்றார்.
நாங்கள் உங்களுடைய பொருளாதாரத்தில் லட்சியம் கொண்டிருந்தால், உங்களை அனுசரித்து பேசியிருப்போம். உங்களை மூடத்தனத்தில் மூழ்க செய்வோம்.
ஒவ்வொரு நாளும் நாங்கள் பேசுவதை நீங்கள் கவனிக்க வேண்டும். தலைவன் எங்களுக்கு பொருளாதாரத்தை அள்ளி அள்ளி கொடுக்கிறான். ஆக, நாங்கள் பொருள் சேர்க்கும்போது நியாயம் இருக்க வேண்டுமென்று சொல்வோம். நியாயம் இருந்தால்தான், அவன் வாழ முடியும். இல்லையென்றால் நாளுக்குநாள் வினை சூழ்ந்து கொள்ளும். இதையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் உங்களுக்கு உண்மையை சொல்லிக் கொண் டிருக்கிறோம், இதுதான் பாதை, இதுதான் உண்மையான பாதை. இது இப்படித்தான் இருக்கிறது. பிடித்து கரையேறிக் கொள்ளுங்கள். உங்களுக்கு இதை சொல்ல வேண்டுமென்பது எங்களது கடமை. நீங்கள் உலக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
ஆண் களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, ஜென் மத்தை கடைத்தேற்ற வேண்டுமென்பதற்காக பேசிக் கொண்டி ருக்கிறோம். நீங்களும் முன்னேற வேண்டும், உலக மக்களும் முன்னேற வேண்டும். உலகமெல்லாம் உண்மைப்பொருளை அறிந்து கொள்ள வேண்டும். உலக மக்கள் எல்லோரும் பாவத்திலிருந்து விடுபட வேண்டும், தெளிந்த அறிவு பெற வேண்டும்.
எப்போது பார்த்தாலும், நோயும், பிணியும், வறுமையும் வாட்டி வதைத்து அல்லற்படுகின்ற மக்களுக்கு நான் பேசிய கருத்துக்கள் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
139)
4 ஞானத்திருவடி நான் பக்தி நெறியைப்பற்றி பேசியிருக்கிறேன், யோகத்தைப்பற்றி பேசியிருக்கிறேன். அடையக்கூடிய லட்சியத்தைப்பற்றி பேசியிருக்கிறேன். நீங்களெல்லாம் இப்பொழுது பதிவு செய்யப்பட்ட நாடாவை, பலமுறை கேட்டு தெளிவடைய வேண்டும்.
மகான் பட்டினத்தார் பாடல், ஆசான் கணபதிதாசர் பாடல், மகான் தாயுமான சுவாமிகள் பாடல், ஆசான் அருணகிரிநாதர் பாடல்களைப் பற்றி பேசியுள் ளோம். திருமந்திரம், திருக்குறள் போன்ற நூல்களிலிருந்தும் பேசியிருக்கிறோம். இதெல்லாம் பதிவாகியிருக்கிறது.
இந்த பதிவு நாடாவை கேட்பவர்களெல்லாம் புண்ணியம் பெறுவார்கள், கேட்பவர்களெல்லாம் ஜென்மத்தைக் கடைத்தேற்றி கொள்வார்கள். இது நேரம் வரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த உங்கள் திருவடி வணங்கி முடிக்கிறேன், வணக்கம்,
அன்பான வாசகர்களே வணக்கம் உங்கள் ஆண்டு சந்தாவை புதுப்பித்துவிட்டீர்களா!
ஞானத்திருவடி நூலை படித்து, உங்கள் உணர்வுகளை எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்போடு அழைக்கின்றோம்.
- அன்பன் இடி-முடிதவுன், 98424 55661.
தைப்பூசத் திருவிழா
நாள் : 07-02-2012 செவ்வாய்க்கிழமை நேரம் : காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை இடம் : ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், துறையூர்.
07.02.2012, செவ்வாய்கிழமை அன்று
தைப்பூசவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை இல்லை.
40 தொடர்...
14 ஞானத்திருவடி திருச்சி மாவட்டம், துறையூர், ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள் மகான் ஓளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை
10. ஒப்புரவு ஒழுகு ஒப்புரவு என்பது உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்றும், கற்றவர் கல்லாதவர் என்றும், பணக்காரன் ஏழை என்றும், இவர் இந்த மதத்தை சார்ந்தவர் என்றும், இவர் இந்த சமயத்தை சார்ந்தவர் என்றும், இவர் இந்த இனத்தை சார்ந்தவர் என்றும், இந்த மொழியை பேசுபவர் என்றும், இவர் இந்த நாட்டை சார்ந்தவர் என்றும், இவர் இந்த ஜாதியை சார்ந்தவர் என்றும், உலகிலுள்ள பல்வேறு வகையான பாகுபாடுகளின்றி இனம், மொழி, மதம், ஜாதி, தகுதி வேறுபாடுகளை களைந்து அனைவரையும் சமமாக எண்ணி, அவர்களை ஒருதாய் பிள்ளைகளாக மதித்து போற்றுதலாகும்.
ஒழுகுதல் என்பது உலக நடையை அறிந்து கடைப்பிடிப்பதை கூறுவதாகும். இங்கு ஒப்புரவின் தன்மையை உணர வேண்டி ஒரு சில உதாரணங்களை கூறலாம்.
1) ஒரு கிராமத்தில் பல ஏக்கர் நிலமுடைய நிலசுவான்தாரர் இருந்தார். அவரது வயலிற்கு அருகில் அவரது வயலின் அடுத்ததாக ஒரு ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருந்த ஏழை விவசாயியும் இருந்தார். பயிரிடும் காலத்தில் ஏழை விவசாயி தனது வறுமையின் காரணமாக நிலச்சுவான்தாரரின் நிலத்தையும் சேர்த்து பத்து அடிகள் அதிகமாக தனது நிலத்தின் எல்லையை தாண்டி உழவு செய்து பயிரிட்டான், அதைக் கண்ட அந்த பெருநிலக்கிழாரின் பண்ணை யாள் அந்நிலக்கிழாரிடம் சென்று ஐயா தங்கள் வயலை ஒட்டிய விவசாயி தங்கள் நிலத்தையும் சேர்த்து உழுது பயிரிடுகிறான். தாங்கள் தான் இச் செயலை கண்டிக்க வேண்டும் எனக் கூறி முறையிடுகிறான்.
அதைக் கேட்ட அந்நிலக்கிழார் அடடா அவனை நான் தான் உழவு செய்யும் பொழுது, நிலத்தை சேர்த்து உழவு செய்து கொள்ளச் சொன்னேன். நான் ஏற்கென வே அவனை இச் செயலிற்கு அனுமதித்து விட்டேன் எனப் பெருந்தன்மையோடு கூ றி அப்பண்ணை யா  ைள சமாதானப்படுத்தி அனுப்பிவிடுகிறார். இப்படி தனது உடமையை கவர்ந்த போதும், கவர்ந்தவனையும் மதித்து மன்னித்து ஏற்றுக் கொள்ளுதல் ஒருவகை ஒப்புரவு அறிவாகும்.
2) ஒரு தொழிற்சாலையில் அனேகம் பேர்கள் வேலை செய்து கொண் டிருந்தார்கள். அத்தொழிற்சாலையில் திறமையான வர்கள் பலரும், திறமையற்ற தொழிலாளிகள் ஒரு சிலரும் இருந்தனர். அப்படி உள் ள திறமை
441)
4. ஞானத்திருவடி குறைந்த தொழிலாளி ஒருவன் வறுமை உடையவனாகவும் குடும்பஸ்தனாகவும் இருந்தான், அவனுக்கு பல குழந்தைகள் இருந்தன. இதனால் அவன் மேலும் வறுமையினால் கஷ்டப்பட்டான். அந்த தொழிற்சாலையின் முதலாளி திறமையானவர்களை மதித்து ஆதரித்து வந்தார். ஆயினும் திறமையற்ற அந்த வறுமையான நிலையிலுள்ள தொழிலாளியின் வறுமையை எண்ணி அவனது திறமையின்மையை கணக்கில் எடுத்துக் கொள்ளாது அவன து ஏழ்மையை மட்டும் கணக்கில் கொண்டு, அவனுக்கு தேவையான பொருளுதவி செய்து அவனை யும் அவனது குடும்பத்தையும் ஆதரித்து வந்தார். இப்படி ஒரு வார து தன்மையை அவன து சூழ் நிலையை அறிந்து அவன் இயலாதவனாய் இருப்பினும் பெருந்தன்மையோடு அதை ஏற்றுக் கொண்டு அவனையும் ஆதரிப்பது ஒருவகை ஒப்புரவு அறிவாகும்,
3) அனேகம் பேர் கூட்டுவியாபாரம் செய்வது உண்டு. இருவர் சேர்ந்து நபர் ஒன்றிற்கு பத்து லட்சம் வீதம் ஆக இருபது லட்சம் முதலீடு செய்து ஒரு வியாபாரத்தை கூட்டாக நடத்தி வந்தனர். அப்படி நடத்தும் காலத்து ஒருவர் திறமையாகவும் மற்றொருவர் திறமை குறைந்தும் செயல்பட்டார். திறமையானவரது. செயல்களால் வியாபாரம் நல்லபடியாக நடந்தது. அந்த வியாபாரத்தில் திறமை குறைவானவர் திறமையானவரைப் பார்த்து உனது திறமையினாலும் உழைப்பாலும் நல்ல வருவாய் கிடைத்துள்ளது. எனவே நமது ஒப்பந்தப்படி சமபங்கு என்று இல்லாமல் ஒரு பத்து சதம் அதிகமாக உனது பங்கை எடுத்துக் கொள், என பெருந்தன்மையோடு தனது கூட்டு வியாபாரியிடம் சொல்லி பெருந்தன்மையோடு நடந்து கொண்டார். இப்படி ஒருவனது உழைப்பை மதித்து அதற்கேற்றாற்போல் அவனை அரவணைப்பதும் ஒருவகை ஒப்புரவு அறிவாகும். -
4) ஒரு செல்வந்தர் தனது மகனுக்கு திருமணம் செய்தார். அத்திருமண விழாவில் பல வசதியான வர்களும் செல்வந்தர்களும், அதிகாரிகளும், விருந்தினர்களாக கலந்து கொண்டு அத்திருமண விழாவில் உணவு உண்டு கொண்டிருந்தனர். அப்பந்தியில் பசி தாளாத ஏழை ஒருவன் வந்து சாப்பிட உட்கார்ந்தான்,
அதைக் கண்ட அம்மண்டப காவலாளி அவனை பந்தியிலிருந்து எழுப்ப முயன்றான். இதைக் கண்ட அத்திருமணம் நடத்தும் செல்வந்தர் அவ்விடத்திற்கு விரைந்து சென்று காவலாளியைப் பார்த்து அவரை பந்தியிலிருந்து எழுப்பாதே அவர் உணவு அருந்தட்டும், அவருக்கு திருமண அழைப்பிதழை கொடுத்து விருந்திற்கு வருமாறு நான்தான் அழைத்திருந்தேன், எனக்கூறி காவலாளியின் செய்கையை தடுத்து அந்த ஏழை பசியாற உதவினார். இப்படி சூழ்நிலைக்கேற்றார்போல பிறரை மதித்து ஏழைகளையும் பாதுகாத்து அவர்களுக்கு உதவி செய்வதும் ஒருவகை ஒப்புரவு அறிவாகும்.



32)
14 ஞானத்திருவடி ஞானிகள் திருவடியைப் பற்றச் சொல்லியிருக்கிறோம். தினந்தினமும் ஆசானிடம் கேட்கச் சொல்லியிருக்கிறோம். தெளிவான அறிவை பெற்றுக் கொள் ளச் சொல்லியிருக்கிறோம்.
நாங்கள் இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறோம். எங்களுக்கு வாசி வசப்பட்டு பதினாறு வருடமாச்சு. பொல்லாத காம தேகம் வீழ்ந்து விட்டது. அதைத்தான் ஆசான் பட்டினத்தார் சொன்னார்.
நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்புபொம்ம லாட்டமென் றேயிரு பொல்லா வுடலை அடர்ந்தசந்தைக் கூட்டமென்றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர் ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்குப் தேசமிதே.
- மகான் பட்டினத்தார் பாடல் - பொது - கவி எண் 21. நாட்டமென்றே யிரு சற்குரு பாதத்தை நம்பு - நாட்டம் என்பது விரும்புதல். நாட்டம் என்றே யிரு - ஒரே சிந்தனையாக இரு.
இனி நான் பிறக்க விரும்பவில்லை, நீரே எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று இல்லறத்தார்கள் ஒரே சிந்தனையாக ஆசானை கேட்கவேண்டும். இனி நான் பிறக்க விரும்பவில்லை ஐயா! அதற்கு நீர்தான் அருள்செய்ய வேண்டும்! என்று இல்லறத்திலிருக்கும் ஒரு ஆண் மகனோ அல்லது பெண்மகளோ கேட்கவேண்டும்.
இந்த வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது. அந்த காலத்தில், கயிறு பிடித்து இழுத்து ஆட்டும் பொம்மலாட்டம் போன்றது. இப்படிப்பட்டதுதான் நமது வாழ்க்கை . இதைத்தான் ஆசான் பட்டினத்தார் தனது மற்றொரு பாடலிலும் சொல்வார்.
நீர்க்குமிழி வாழ்வைநம்பி நிச்சயமென் றேயெண்ணிப் பாக்களவாம் அன்னம் பசித்தோர்க் களியாமல் போர்க்குளெம் தூதன் பிடித்திழுக்கு மப்போது ஆர்ப்படுவா ரென்றே யறிந்திலையே நெஞ்சமே.
- மகான் பட்டினத்தார் பாடல் - நெஞ்சொடு புலம்பல் - கவி எண் 17 நீர்க்குமிழி வாழ்வை நம்பி நிச்சயமென்றே யெண் ணி இருப்பார்கள்.
நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்புபொம்ம லாட்டமென் றேயிரு பொல்லா வுடலை அடர்ந்தசந்தைக் கூட்டமென்றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர் ஒட்டமென் றேயிரு நெஞ்சே உனக்குப தேசமிதே.
- மகான் பட்டினத்தார் பாடல் - பொது - கவி எண் 21. ஞானியர்களின் சிந்தனையெல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மகான் பட்டினத்தார், மகான் அருணகிரிநாதர், மகான் திருமூலதேவர் அருளிய
33)
4 ஞானத்திருவடிபாடல்களை உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். ஞானிகள் பாடல்களில் உள்ளதை நிறைய சொல்லியிருக்கிறோம். காரணம் இந்த பாடல்கள் உங்கள் செவியில் விழ வேண்டும்.
உங்களுடைய ஆன்மா தட்டி எழுப்பப்பட வேண்டும், நீங்கள் பாவத்திலிருந்து விடுபட வேண்டும், தெளிந்த அறிவு பெற வேண்டும். ஞானிகளின் பாடல்களுடைய இயல்பு என்ன வென்றால், ஆன்மாவை குத்தி எழுப்பும். தட்டி எழுப்புவதல்ல! அடித்து எழுப்பக் கூடிய வார்த்தையை நான் பேசியிருக்கிறேன்.
அன்பர்கள், ஆணாக இருந்தாலும் சரி, பெண் ண ாக இருந்தாலும் சரி, மோட்சலாபமே! அடையக்கூடிய லட்சியம். காலம் நெருங்கிவிட்டது. இனி தாமதிக்க முடியாது.
ஆசான் இராமலிங்க சுவாமிகளிடம், அன்பர்கள் அனைவரும், "நீங்கள் இல்லாவிட்டால், நாங்கள் எப்படி அழைப்போம், எங்களை விட்டுப் போகிறீரே! நாங்கள் என்ன செய்வோம்?” என்றார். அதற்கு ஆசான் இராமலிங்க சுவாமிகள், “நீ எந்த நேரத்தில் நினைத்தாலும் நான் வருவேன் என்றார். இதைத்தான் ஆசான் இராமலிங்க சுவாமிகள் சொல்வார். நினைந்து நினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந் தன்பே
நிறைந்து நிறைந்து ஊற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே. - திருஅருட்பா ஆறாம் திருமுறை - வாய்ப்பறை பார்த்தல் - கவி எண் 1530. சத்தியம் செய்கின்றேன், சத்தியம் செய்யும் நோக்கம் என் ன வென்றால், நீங்களெல்லாம் முன்னேறுங்கள், நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து செயல்படுங்கள்! என்பார்,
தினந்தினம் திருவாசகத்தையும், திருஅருட்பாவையும் சிறிது நேரம் படிக்க வேண்டும், அதே சிந்தனையாக இருக்கணும். நாமஜெபம் செய்யணும். அன்பர்கள், ஒரு பத்து நிமிடம், ஆன் மீகவாதிகளோடு பேசணும். வீண் வார்த்தை பேசுபவர்களிடம் பேசக்கூடாது.
சுத்த ஆன்மீகவாதிகளான, ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் குழுவாக அமர வேண்டும், படிக்கத் தெரிந்தவர்கள் தமிழ் படிக்க வேண்டும். மலேசிய அன்பர்கள், தங்கள் பிள்ளைகளை மலேசியாவில் தமிழில் படிக்க வைக்க வேண் டும். என்ன
34.
4 ஞானத்திருவடி காரணம்? தமிழ் படித்தவன்தான் கடவுள் ஆக முடியும். தமிழில்தான் இந்த ரகசியம் இருக்கிறது. வேறு எங்கும் இந்த இரகசியம் கிடையாது.
ஒருபதந் தன்னைத் தூக்கி ஒருபதந் தன்னை மாற்றி இருபதம் ஆடுகின்ற இயல்பைநீ அறிந்தா யானால் குருபத மென்று கூறுங் குறிப்புனக் குள்ளே யாச்சு வருபத நாகைநாதர் மலரடி காண்பாய் நெஞ்சே.
- மகான் கணபதிதாசர் - நெஞ்சறி விளக்கம் - கவி எண் 22. ஒரு பதம் தன்னைத் தூக்கி, அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். இந்த இரகசியம் தமிழில்தான் உள்ளது. அதை அறிந்துகொள்வதற்கு நீங்கள் தமிழ் படிக்க வேண்டும்.
திருவாசகத்தை படிக்கத் தெரிய வேண்டும். நாம், பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுத் தராவிட்டால், அவர்கள் திருவாசகத்தையும், திருஅருட்பாவையும் படிக்க முடியாது. இது நம் பிள்ளைகளுக்கு நாம் செய்யக்கூடிய துரோகமாக கருத வேண்டும்.
நம் பிள்ளைகள் தமிழ் படிக்க வேண்டும். அவர்கள் ஒரு காலத்தில் தன் நிலை உணர்ந்து மரணமிலாப் பெருவாழ்வு பெற வேண்டும். அப்படி பெற்றால்தான், தனது இருபத்தியொரு தலைமுறையை ஞானியாக்குவார்.
ஒருவர் ஞானியானால், தனது தாய் வழி இருபத்து ஒன்று, தந்தை வழி இருபத்து ஒன்று தலைமுறையை ஞானியாக்குவார். ஆகவே தமிழ் படிக்க, நம் பிள்ளைகளுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். தமிழ் படித்தவன் யாரும் கெட்டுவிட மாட்டான். அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.
நீங்கள் மலேசியாவில், மலேய மொழியும், ஆங்கிலமும் படிக்கலாம், தமிழும் படிக்கலாம். இதற்கு ஒன்றும் தடையில்லை. நம் பிள்ளைகள் தமிழ்மொழி படித்தால், வேலைவாய்ப்பு கிடைக்குமா என்று நினைக்காதே! ஆசான் ஆசியால், நிச்சயம் கிடைக்கும்.
தமிழ் படித்தால்தான், திருக்குறள், திருஅருட்பா, திருவாசகம் போன்ற ஞான நூல்களை படிக்க முடியும். தமிழ் படித்தவனுக்குத்தான் ஞானம் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. ஆகவே ஞானத்தை அறிந்து கொள்வதற்கான, ரகசியமெல்லாம் தமிழ் மொழியில்தான் இருக்கிறது.
தமிழ் நமக்கு தாய் மொழி, ஞான மொழி. தமிழ் மொழிதான், ஞானத்திற்கு வழிவகுத்து கொடுத்தது. ஆகவே தமிழை படிக்க வேண்டும். நம் தமிழகத்தில் கூட எல்லோரும் தம் பிள்ளைகளை ஆங்கிலப்பள்ளியில் படிக்க வைக்கிறார்கள். இதை பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமை என்று நினைக்கிறார்கள்.
35)
4 ஞானத்திருவடி ஒரு காலத்தில் உண்மை தெரியும். திருக்குறளை படிக்க சொன்னால் படிக்க மாட்டேன் என் கிறானே! திரு அருட்பா வை படிக்கச் சொன் னால் படிக்க தெரியவில்லை, திருவாசகத்தை படிக்கச் சொன்னால் தடுமாறுகின்றானே! அப்போது “ஐயோ! நம் பிள்ளைகளுக்கு தமிழ் படிக்க முடியாத தடுமாற்றம் வந்துவிட்டதே என்று வருந்துவார்கள்.
பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யவில்லை. இது அவரவர்கள் செய்த வினைப்பயன். அதற்கு நாம் பொறுப்பல்ல! நாம் சொல்ல வேண்டிய கடமைக்கு சொல்கிறோம். அன்னவன் விதிப்பயன் அவ்வாறிருந்தால் அதற்கு யாம் என் செய்வோம்? அவனவன் வினைப்பயனுக்கேற்றவாறு ஆங்கிலப்பள்ளியில்தான் படிக்க வேண்டும். ஆங்கிலப்பள்ளியில் படித்தால்தான் உயர்ந்த அறிவு வருமென்று நினைக்காதே. நீ எவ்வளவு பாடுபட்டாலும், எத்தனை ஆங்கில பள்ளியில் படித்திருந்தாலும் சரி. தமிழ் மொழி படிக்காதவனுக்கு ஞானமில்லை .
தமிழ் மொழியில்தான், ஞானத்திற்கான இரகசியம் இருக்கிறது. இந்த ரகசியத்தை ஆசான் கணபதிதாசர் சொல்வார்,
ஒருபதந் தன்னைத் தூக்கி ஒருபதந் தன்னை மாற்றி இருபதம் ஆடுகின்ற இயல்பைநீ அறிந்தா யானால் குருபத மென்றுகூறுங் குறிப்புனக் குள்ளே யாச்சு
வருபத நாகைநாதர் மலரடி காண்பாய் நெஞ்சே. இதையே ஆசான் திருமூலர் சொல்வார்,
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில் உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும் புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.
- திருமந்திரம் - பிராணாயாமம் - கவி எண் 575 தமிழில்தான் இந்த ஞான இரகசியம் இருக்கிறது. அதை தமிழில்தான் படிக்க வேண்டும். நீ எப்படி தான் மொழி பெயர்த்தாலும், முடியாது. தன்னுடைய மகனையோ, மகளையோ கடவுளாக்கினால், அவர்கள் தன்னுடைய தாய் தந்தை பாவத்தையும் பொடியாக்குவார்கள். அப்படி செய்யாமல், அவர்களும் நம்மைப் போன்று அல்லற்பட்டு சாக நினைக்கின்றாயா? எதை நீ நினைக்கின்றாய். இதை உங்களால் போகப்போக உணர்ந்து கொள்ள முடியும். இதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டுமென்பதற்காகத்தான், நாங்கள் சொல்கிறோம்.
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மலமாக்கில் (உள்ளே போகின்ற காற்று வெளியே வராது.) அடுத்து,
14 ஞானத்திருவடி உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே ஆக இந்த ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும். ஆசான் தான் புருவ மத்தியில் ஒடுங்கி நரைதிரையை மாற்ற வேண்டும்.
இப்ப எனக்கு நரை திரை இருக்கிறது. என்னை புகைப்படம் (போட்டோ) பிடிக்கின்றீர்கள், இன்னும் இரண்டு வருடம் கழித்து என்னை பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். அடேயப்பா! என்னய்யா! இது.
உலக நடையில், காய்தான் பழுக்கும். ஆனால் பழம் காயாகின்றது. இது எப்படி? இது எந்த மொழியில் வந்தது? இந்த இரகசியம் எந்த மொழியில் இருக்கின்றது.
ஒரு இளம் பெண் முதுமையடைந்து கிழவியாவாள். இதுதான் உலக இயல்பு. ஆனால் கிழவி குமரியாக முடியாது. இப்ப நான் முதுமையாக தெரிகிறேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நரை திரை மாறி மீண்டும் இளமை வரும், இதைப்பற்றி எந்த மொழியில் இருக்கிறது? தமிழ் மொழியில் மட்டும்தான் இருக்கின்றது.
அதற்காக நான் மற்ற மொழிகளை புறக்கணிக்க விரும்பவில்லை. தமிழ் மொழி வேண்டும், ஆங்கிலம் வேண்டும், அந்தந்த நாட்டு தாய்மொழியும் வேண்டும். ஒரு பெண்ணுக்கோ ஆணுக்கோ மூன்று அல்லது நான்கு மொழி தெரிந்திருக்க வேண்டும். அவர்கள் கட்டாயம் தமிழ் மொழி அறிந்திருக்க வேண்டும்.
தமிழ் தலை மொழியாக, உண்மை மொ ழி யாக, ஞானத்திற்கு வழிகாட்டுகின்ற மொழியாக இருக்கிறது.
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை நெறிப்பட உள்ளே நின்மலமாக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும் உரோமம் - தலை முடி. இப்ப தலைமுடி வெளுத்திருக்கும், பின்பு கறுக்கும். புறப்பட்டுப் போகான் புரிசடையோனே - இந்த ரகசியத்தை தெரிந்திருக்க வேண்டுமென்றால் உன் பிள்ளை தமிழ் கற்றிருக்க வேண்டும். மலேசியாவில் உள்ள உங்கள் பிள்ளைகள், தமிழ்மொழி, மலேயமொழி, ஆங்கில மொழி தெரிந்திருக்க வேண்டும். அப்ப பல மொழிகளிலும் அவனை வல்லவனாக உருவாக்க வேண்டும்.
பிள்ளைகள் ஆண்மகனாக இருந்தாலும், பெண்மகளாக இருந்தாலும் சரி, அகத்தீசன் நாமத்தை சொல்ல வைக்க வேண்டும். பிள்ளைகளை பார்த்து, ஓம் அகத்தீசா! ஓம் அகத்தீசா என்று சொல்ல சொல்லி கேட்க வேண்டும். இப்படி பிள்ளைகள் ஒம் அகத்தீசா! ஓம் அகத்தீசா! என்று சொல்லும்போது ஆசான் அகத்தீசர் அவர்களை பார்க்கிறார்.
- 37
4 ஞானத்திருவடி ஆசான் அகத்தீசரின் பார்வை, ஆன்மாவை தட்டி எழுப்பும். ஒருநாள் சொன்னால், பலநாள் சொன்னால், தொடர்ந்து சொன்னால் ஆன்மாவை தட்டி எழுப்புவது மட்டுமல்லாமல், அவன் எல்லா மொழியிலும் வல்லவனாவான்.
நாங்கள் ஞானத்தைப் பற்றி பேசுகிறோம். நாங்கள் எந்த பள்ளிக்கும் சென்றதில்லை. தமிழ் மொழியை நாங்கள் படித்ததாலும், ஆசான் திருவடியை பற்றியதாலும் எங்களுக்கு இந்த உண்மை தெரிந்தது.
ஆக, நான் சொன்ன இந்த கருத்துக்களை கேட்பவருக்கெல்லாம், தன்னைப் பற்றி அறியக்கூடிய தகைமையும், வாய்ப்பும் கிடைக்கும். தலைவனை அறிகின்றவன் தான் தன்னை அறிவான். தன்னை அறிகின்றவன் தலைவனை அறிவான். இதுதான் நமது இலட்சியம்.
தினந்தினம் நாமஜெபம் செய்தால், சிறப்பறிவு உண்டாகும். அதன்மூலம் ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம். இந்த நோக்கத்தை அறிவதற்காகத்தான், நாம் வந்திருக்கிறோம்.
பிறந்தவர்க்கு மோக்ஷகதி தேடவேணும்
பின்கலையும் முன்கலையும் சேரவேணும் மறந்தவர்க்கு மறலிவந்தால் வாலுவாருண்டு
வருமுன்னரே வலுக்கட்டிக் கொள்ளவேணும் அறந்தழைக்கு மறுமுகவன் பாதம் போற்றி
அர்ச்சனைசெய் தாலுதவி யகண்டவாசல் துறந்துநின்ற திருவாடு துறையைப் பார்க்கில் சூரியனும் சந்திரனும் தோற்ற மாமே.
- மகான் அகத்தியர் - துறையறி விளக்கம் - கவி 6எண் 89 பிறந்தவரெல்லாம் மோட்சகதியை தேட வேண்டும் என் பார். இதை மறந்துவிட்டால், மறலி வந்துவிடும் என்பார். அப்ப, அறந்தழைக்கும் அறுமுகவன் பாதம் போற்றி என் பார், ஆறுமுகப் பெரு மா  ைன யோ, அகத்திய பெருமானையோ நினைக்கின்ற மக்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்.
பிறந்தவர் மோட்சகதியை தேட வேண்டும். மோட்சகதியை தேட விரும்புகின் றவன், மர ண மிலா பெருவாழ்வு பெற விரும்புகிறவன், நரகத்திலிருந்து விடுபட விரும்புகின் றவன், எதையும் கண்டு அஞ்சாத நெஞ்சத்தை விரும்புகின்றவன், ஆசான் ஞானபண்டிதனையும், அகத்தீசனை யும் பூஜை செய்து இந்த வாய்ப்பை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று சொல்லியிருக்கிறோம். )
நாம் வேண்டினால், பிறவாமையை வேண்ட வேண்டும். இதை ஆசான் திருவள்ளுவர் சொல்வார்,
4 ஞானத்திருவடி வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றுஅது வேண்டாமை வேண்ட வரும்.
- திருக்குறள் - அவா அறுத்தல் - குறள் எண் 362. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.
- திருக்குறள் - இனியவை கூறல் - குறள் எண் 96. பாவம் என்பதே உடம்புதானே? புண்ணியம் பெருகணும் என்றால் உயிர் ஆக்கம் பெறணும், உயிருக்கு ஆக்கமும், உடலுக்கு ஆக்கமும் வந்தால் பாவ புண் ணியம் சமமாகிவிட்டது என்று அர்த்தம். ஆகவே, அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை, நாடி இனிய சொலின் என்றார்.
நாங்கள் உங்களுடைய பொருளாதாரத்தில் லட்சியம் கொண்டிருந்தால், உங்களை அனுசரித்து பேசியிருப்போம். உங்களை மூடத்தனத்தில் மூழ்க செய்வோம்.
ஒவ்வொரு நாளும் நாங்கள் பேசுவதை நீங்கள் கவனிக்க வேண்டும். தலைவன் எங்களுக்கு பொருளாதாரத்தை அள்ளி அள்ளி கொடுக்கிறான். ஆக, நாங்கள் பொருள் சேர்க்கும்போது நியாயம் இருக்க வேண்டுமென்று சொல்வோம். நியாயம் இருந்தால்தான், அவன் வாழ முடியும். இல்லையென்றால் நாளுக்குநாள் வினை சூழ்ந்து கொள்ளும். இதையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் உங்களுக்கு உண்மையை சொல்லிக் கொண் டிருக்கிறோம், இதுதான் பாதை, இதுதான் உண்மையான பாதை. இது இப்படித்தான் இருக்கிறது. பிடித்து கரையேறிக் கொள்ளுங்கள். உங்களுக்கு இதை சொல்ல வேண்டுமென்பது எங்களது கடமை. நீங்கள் உலக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
ஆண் களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, ஜென் மத்தை கடைத்தேற்ற வேண்டுமென்பதற்காக பேசிக் கொண்டி ருக்கிறோம். நீங்களும் முன்னேற வேண்டும், உலக மக்களும் முன்னேற வேண்டும். உலகமெல்லாம் உண்மைப்பொருளை அறிந்து கொள்ள வேண்டும். உலக மக்கள் எல்லோரும் பாவத்திலிருந்து விடுபட வேண்டும், தெளிந்த அறிவு பெற வேண்டும்.
எப்போது பார்த்தாலும், நோயும், பிணியும், வறுமையும் வாட்டி வதைத்து அல்லற்படுகின்ற மக்களுக்கு நான் பேசிய கருத்துக்கள் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
139)
4 ஞானத்திருவடி நான் பக்தி நெறியைப்பற்றி பேசியிருக்கிறேன், யோகத்தைப்பற்றி பேசியிருக்கிறேன். அடையக்கூடிய லட்சியத்தைப்பற்றி பேசியிருக்கிறேன். நீங்களெல்லாம் இப்பொழுது பதிவு செய்யப்பட்ட நாடாவை, பலமுறை கேட்டு தெளிவடைய வேண்டும்.
மகான் பட்டினத்தார் பாடல், ஆசான் கணபதிதாசர் பாடல், மகான் தாயுமான சுவாமிகள் பாடல், ஆசான் அருணகிரிநாதர் பாடல்களைப் பற்றி பேசியுள் ளோம். திருமந்திரம், திருக்குறள் போன்ற நூல்களிலிருந்தும் பேசியிருக்கிறோம். இதெல்லாம் பதிவாகியிருக்கிறது.
இந்த பதிவு நாடாவை கேட்பவர்களெல்லாம் புண்ணியம் பெறுவார்கள், கேட்பவர்களெல்லாம் ஜென்மத்தைக் கடைத்தேற்றி கொள்வார்கள். இது நேரம் வரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த உங்கள் திருவடி வணங்கி முடிக்கிறேன், வணக்கம்,
அன்பான வாசகர்களே வணக்கம் உங்கள் ஆண்டு சந்தாவை புதுப்பித்துவிட்டீர்களா!
ஞானத்திருவடி நூலை படித்து, உங்கள் உணர்வுகளை எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்போடு அழைக்கின்றோம்.
- அன்பன் இடி-முடிதவுன், 98424 55661.
தைப்பூசத் திருவிழா
நாள் : 07-02-2012 செவ்வாய்க்கிழமை நேரம் : காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை இடம் : ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், துறையூர்.
07.02.2012, செவ்வாய்கிழமை அன்று
தைப்பூசவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை இல்லை.
40 தொடர்...
14 ஞானத்திருவடி திருச்சி மாவட்டம், துறையூர், ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள் மகான் ஓளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை
10. ஒப்புரவு ஒழுகு ஒப்புரவு என்பது உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்றும், கற்றவர் கல்லாதவர் என்றும், பணக்காரன் ஏழை என்றும், இவர் இந்த மதத்தை சார்ந்தவர் என்றும், இவர் இந்த சமயத்தை சார்ந்தவர் என்றும், இவர் இந்த இனத்தை சார்ந்தவர் என்றும், இந்த மொழியை பேசுபவர் என்றும், இவர் இந்த நாட்டை சார்ந்தவர் என்றும், இவர் இந்த ஜாதியை சார்ந்தவர் என்றும், உலகிலுள்ள பல்வேறு வகையான பாகுபாடுகளின்றி இனம், மொழி, மதம், ஜாதி, தகுதி வேறுபாடுகளை களைந்து அனைவரையும் சமமாக எண்ணி, அவர்களை ஒருதாய் பிள்ளைகளாக மதித்து போற்றுதலாகும்.
ஒழுகுதல் என்பது உலக நடையை அறிந்து கடைப்பிடிப்பதை கூறுவதாகும். இங்கு ஒப்புரவின் தன்மையை உணர வேண்டி ஒரு சில உதாரணங்களை கூறலாம்.
1) ஒரு கிராமத்தில் பல ஏக்கர் நிலமுடைய நிலசுவான்தாரர் இருந்தார். அவரது வயலிற்கு அருகில் அவரது வயலின் அடுத்ததாக ஒரு ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருந்த ஏழை விவசாயியும் இருந்தார். பயிரிடும் காலத்தில் ஏழை விவசாயி தனது வறுமையின் காரணமாக நிலச்சுவான்தாரரின் நிலத்தையும் சேர்த்து பத்து அடிகள் அதிகமாக தனது நிலத்தின் எல்லையை தாண்டி உழவு செய்து பயிரிட்டான், அதைக் கண்ட அந்த பெருநிலக்கிழாரின் பண்ணை யாள் அந்நிலக்கிழாரிடம் சென்று ஐயா தங்கள் வயலை ஒட்டிய விவசாயி தங்கள் நிலத்தையும் சேர்த்து உழுது பயிரிடுகிறான். தாங்கள் தான் இச் செயலை கண்டிக்க வேண்டும் எனக் கூறி முறையிடுகிறான்.
அதைக் கேட்ட அந்நிலக்கிழார் அடடா அவனை நான் தான் உழவு செய்யும் பொழுது, நிலத்தை சேர்த்து உழவு செய்து கொள்ளச் சொன்னேன். நான் ஏற்கென வே அவனை இச் செயலிற்கு அனுமதித்து விட்டேன் எனப் பெருந்தன்மையோடு கூ றி அப்பண்ணை யா  ைள சமாதானப்படுத்தி அனுப்பிவிடுகிறார். இப்படி தனது உடமையை கவர்ந்த போதும், கவர்ந்தவனையும் மதித்து மன்னித்து ஏற்றுக் கொள்ளுதல் ஒருவகை ஒப்புரவு அறிவாகும்.
2) ஒரு தொழிற்சாலையில் அனேகம் பேர்கள் வேலை செய்து கொண் டிருந்தார்கள். அத்தொழிற்சாலையில் திறமையான வர்கள் பலரும், திறமையற்ற தொழிலாளிகள் ஒரு சிலரும் இருந்தனர். அப்படி உள் ள திறமை
441)
4. ஞானத்திருவடி குறைந்த தொழிலாளி ஒருவன் வறுமை உடையவனாகவும் குடும்பஸ்தனாகவும் இருந்தான், அவனுக்கு பல குழந்தைகள் இருந்தன. இதனால் அவன் மேலும் வறுமையினால் கஷ்டப்பட்டான். அந்த தொழிற்சாலையின் முதலாளி திறமையானவர்களை மதித்து ஆதரித்து வந்தார். ஆயினும் திறமையற்ற அந்த வறுமையான நிலையிலுள்ள தொழிலாளியின் வறுமையை எண்ணி அவனது திறமையின்மையை கணக்கில் எடுத்துக் கொள்ளாது அவன து ஏழ்மையை மட்டும் கணக்கில் கொண்டு, அவனுக்கு தேவையான பொருளுதவி செய்து அவனை யும் அவனது குடும்பத்தையும் ஆதரித்து வந்தார். இப்படி ஒரு வார து தன்மையை அவன து சூழ் நிலையை அறிந்து அவன் இயலாதவனாய் இருப்பினும் பெருந்தன்மையோடு அதை ஏற்றுக் கொண்டு அவனையும் ஆதரிப்பது ஒருவகை ஒப்புரவு அறிவாகும்,
3) அனேகம் பேர் கூட்டுவியாபாரம் செய்வது உண்டு. இருவர் சேர்ந்து நபர் ஒன்றிற்கு பத்து லட்சம் வீதம் ஆக இருபது லட்சம் முதலீடு செய்து ஒரு வியாபாரத்தை கூட்டாக நடத்தி வந்தனர். அப்படி நடத்தும் காலத்து ஒருவர் திறமையாகவும் மற்றொருவர் திறமை குறைந்தும் செயல்பட்டார். திறமையானவரது. செயல்களால் வியாபாரம் நல்லபடியாக நடந்தது. அந்த வியாபாரத்தில் திறமை குறைவானவர் திறமையானவரைப் பார்த்து உனது திறமையினாலும் உழைப்பாலும் நல்ல வருவாய் கிடைத்துள்ளது. எனவே நமது ஒப்பந்தப்படி சமபங்கு என்று இல்லாமல் ஒரு பத்து சதம் அதிகமாக உனது பங்கை எடுத்துக் கொள், என பெருந்தன்மையோடு தனது கூட்டு வியாபாரியிடம் சொல்லி பெருந்தன்மையோடு நடந்து கொண்டார். இப்படி ஒருவனது உழைப்பை மதித்து அதற்கேற்றாற்போல் அவனை அரவணைப்பதும் ஒருவகை ஒப்புரவு அறிவாகும். -
4) ஒரு செல்வந்தர் தனது மகனுக்கு திருமணம் செய்தார். அத்திருமண விழாவில் பல வசதியான வர்களும் செல்வந்தர்களும், அதிகாரிகளும், விருந்தினர்களாக கலந்து கொண்டு அத்திருமண விழாவில் உணவு உண்டு கொண்டிருந்தனர். அப்பந்தியில் பசி தாளாத ஏழை ஒருவன் வந்து சாப்பிட உட்கார்ந்தான்,
அதைக் கண்ட அம்மண்டப காவலாளி அவனை பந்தியிலிருந்து எழுப்ப முயன்றான். இதைக் கண்ட அத்திருமணம் நடத்தும் செல்வந்தர் அவ்விடத்திற்கு விரைந்து சென்று காவலாளியைப் பார்த்து அவரை பந்தியிலிருந்து எழுப்பாதே அவர் உணவு அருந்தட்டும், அவருக்கு திருமண அழைப்பிதழை கொடுத்து விருந்திற்கு வருமாறு நான்தான் அழைத்திருந்தேன், எனக்கூறி காவலாளியின் செய்கையை தடுத்து அந்த ஏழை பசியாற உதவினார். இப்படி சூழ்நிலைக்கேற்றார்போல பிறரை மதித்து ஏழைகளையும் பாதுகாத்து அவர்களுக்கு உதவி செய்வதும் ஒருவகை ஒப்புரவு அறிவாகும்.

-42)
4 ஞானத்திருவடி 5) ஒரு செல்வந்தரது அண்டை வீட்டார் அகங்காரம் கொண்டவராக இருந்தார். அந்த செல்வந்தர் மிகுந்த பண்பாளர், சிறந்த சிவபக்தர் அனைவரையும் மதித்து நடக்கக் கூடியவராகவும் தான தருமங்கள் செய்பவராகவும் விளங்கினார்.
இதைக் கண்டு பொறுக்க முடியாத அண்டை வீட்டார், அவரது புகழை கெடுக்கும் நோக்கில் அடிக்கடி அவரிடம் சண்டையிடுவதும் தரக்குறைவான முறையிலும் நடந்தும், அடாது பல இடையூறுகள் செய்துவந்தான்.
அண்டை வீட்டார் கடவுள் இல்லையென்றும், பாவபுண்ணியம் இல்லையென்றும் கூறிக்கொண்டு, தான் செய்வதுதான் சரியென்றும் அகங்காரம் கொண்டு யாருக்கும் கட்டுப்படாமல் வாழ்ந்து வந்தான்.
ஆனால் செல்வந்தர் நினைத்தால், அவனது செயல்களுக்காக அவனை கடுமையான முறையில் தண்டிக்க முடியும். எனினும் அவர் அவ்வாறு செய்யாமல் நமது வளர்ச்சியைக் கண்டு அவன் பொறாமைப்படுகிறான், பாவம் அவனது தீய குணங்களே அவனது முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது, ஏதோ அறியாமல் செய்கிறான், அதைப் பொறுத்துக் கொள்வோம் என எந்த எதிர்ப்பும் காட்டாமலும் அவனது செயல்களை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டு அவனுக்கு இடையூறு செய்யாமலும், அவனை தண்டிக்காமலும் இருந்தார்.
இப்படி தமக்கு அடாது செய்பவர்களது செயல்களை பொறுத்துக் கொண்டு அவனையும் மன்னித்து ஏற்றுக் கொள்வதும் ஒருவகை ஒப்புரவு அறிவாகும்.
திறன் அல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறன்அல்ல செய்யாமை நன்று.
-திருக்குறள் - பொறை உடைமை - குறள் எண் 157. பரிமேலழகர்: திறன் அல்ல தன் பிறர் செய்யினும் - செய்யத்தகாத கொடியவற்றைத் தன்கண் பிறர் செய்தாராயினும்; நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று - அவர்க்கு அதனால் வருந்துன்பத்திற்கு நொந்து தான் அறனல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நன்று என்றவாறு.
உம்மை சிறப்பும்மை: துன்பத்திற்கு நோதலாவது, “உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்” (நாலடியார்: துறவு-8) என்று பரிதல்.
மணக்குடவர்(2): தகுதியல்லாதவற்றைத் தனக்குப் பிறர் செய்தாராயினும், அவற்றைத் தானுஞ் செய்தால் அவர்க்கு உளதாம் நோவுக்கு நொந்து அறமல்லாதவற்றைச் செய்யாமை நன்று என்றவாறு
பரிதியார் (2): தனக்குப் புகழல்லாத காரியத்தைத் தனக்கு உண்டானது செய்தாலும் செய்தவனைக் கோபித்துத் தன்மம் அல்லாத காரியம் செய்வான் அல்லன் என்றவாறு:
43,
43 ஞானத்திருவடிகாலிங்கர் (2): பொறையின் திறம் இதுவாகலால் செயப்படுந் திறப்பாடல்லனவற்றைத் தன்னைக்குறித்துப் பிறர் செய்தாராகிலும் தான் அதற்கு எதிராக நெஞ்சம் நொந்து அறமல்லனவற்றைச் செய்யாமை சால நன்று என்றவாறு.
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல்.
- திருக்குறள் - பொறை உடைமை - குறள் எண் 158. பரிமேலழகர்: மிகுதியான் மிக்கவை செய்தாரை - மனச் செருக்கால் தங்கண் தீயவற்றைச் செய்தாரை; தாம் தம் தகுதியான் வென்றுவிடல் - தாம் தம்முடைய பொறையான் வென்றுவிடுக என்றவாறு
தாமும் அவர்கள் தீயவற்றைச் செய்து தோலாது பொறையான் அவரின் மேம்பட்டு வெல்க என்பதாம்.
இவை நான்கு பாட்டானும் பிறர் செய்தன பொறுத்தல் சொல்லப்பட்டது.
மணக்குடவர்(5): தமது செல்வ மிகுதியாலே மிகையான வற்றைச் செய்தவர்களைத் தாங்கள் தமது பொறையினாலே வென்றுவிடுக என்றவாறு.
பரிதியார்(10): ஆங்காரத்தினாலே மிகைசெய்வார் பிழையைத் தமது பொறுமையினாலே வெல்கை அறிவு உடைமை என்றவாறு.
காலிங்கர்(3): செய்யும் திறம் ஒழிய நெறிகேட்டாலே மிகையான தீங்குகளைச் செய்தாரை வாது செய்தாற்போலத் தாமும் எதிர்மலைந்து செய்யாது தமக்குத் தகுதியாகிய பொறையினால் வென்றுவிடுக என்றவாறு.
தயை சிந்தை உடையவராக இருத்தல், பேதாபேதமின்றி அனைவரையும் சமமாக எண்ணுதல், விட்டுக் கொடுத்து வாழ்தல், பொறுத்துக் கொள்ளுதல், சமமாக எண்ணுதல், மன்னிக்கும் மனப்பான்மை, அனுசரித்தல் இக்குணங்களே ஒப்பறிவாளனுடைய பண்புகளாகும்.
6) இளம் பெண் ஒருத்திக்கு திருமணமாகி சந்தர்ப்ப வசத்தால் அவளது கணவனானவன் திருமணமான ஒரு மாதத்திற்குள்ளாகவே இறந்து போக நேரிட்டது. இதைக் கண்ட அவளது தாய்தந்தையர் மகளின் துரதிர்ஷ்டத்தை நினைத்து நினைத்து மனம் புழுங்கி வருந்தலானார்கள்.
அவர்களுக்கு பழக்கமான உறவினர் ஒருவன், இதைக் கண்டு அந்த தாயிடம் இதை நினைத்து வருந்தாதே! உங்களது பெண்ணை நான் திருமணம் செய்து கொள்கிறேன், எனக்கூறி அந்த தாயைத் தேற்றி, அந்த பெண்ணிற்கு மறுவாழ்வு தந்தான். இப்படி இளம்வயதிலேயே கணவனை இழந்த இளம் பெண்களுக்கு மறுவாழ்வளிப்பதும் ஒப்புரவு அறிவாகும்.
4 ஞானத்திருவடி ஒரு பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்து, அவளுக்கு தேவையான சீர்வரிசைகளோடு தனது மருமகன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர், பெண் ணின் பெற்றோர்கள். மருமகனுக்கு மதுப்பழக்கம், சூதாடும் பழக்கம் போன்ற தீயபழக்கவழக்கங்கள் இருப்பது பெண்ணின் பெற்றோருக்கு தெரியாது.
தனது பெண் சென்ற இடத்தில் நன்றாக வாழ்கிறாள் என எண்ணி நிம்மதியாக இருந்தனர், ஆனால் அவள் கணவனோ திருமணத்திற்கு பிறகு தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையானதுடன் தகாத பெண்களிடம் தொடர்பு கொண்டும் இருந்தான். இதனால் தனது மனைவியின் நகைகளையும் உடைமைகளையும் பறித்துக் கொண்டு, அவளை துன்புறுத்தி வந்தான். ஒரு சமயம் அவளை விரட்டிவிட்டான். இதனால் மனமுடைந்த அப்பெண் இனி வாழ்வதில் பிரயோசனமில்லை என மனம் நொந்து தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடன் இரவில் தற்கொலை செய்ய முயற்சித்தாள். இதைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் அவளை தடுத்து காப்பாற்றி தங்களது வீட்டில் அவளுக்கு அடைக்கலம் தந்து அவளது பெற்றோர்களுக்கு நடந்த செய்தியை தெரிவித்தார்கள்.
| செய்தியறிந்த பெற்றோர் மிகுந்த வருத்தத்துடன் தன் மகள் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என மனம் வருந்தி அவளை தங்களது இல்லத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் அவளது எதிர்காலம் குறித்து மனவேதனையுடன் வாழ்ந்து வந்தனர்.
இதைக்கண்ட அவர்களுக்கு பழக்கமான திருமணமாகாத வாலிபன் ஒருவன் அப்பெற்றோரை அணுகி அப்பெண்ணிற்கு நான் மறுவாழ்வு அளிக்கிறேன் எனக்கூறி பெருந்தன்மையோடு அப்பெண்ணை மறுமணம் செய்து கொண்டு அப்பெற்றோரின் துயரத்தைப் போக்கினான். இப்படி கணவனது கொடுமைகளால் வாழ்விழந்த பெண்களுக்கு மறுவாழ்வளிப்பதும் ஒப்புரவு அறிவாளன் செயலாகும்.
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன் சிந்தைமிக விழைந்த தாலோ.
- திருஅருட்பா - ஆறாம் திருமுறை - கவி எண் 1616 இயற்கை கடவுள் இவ்வுலகில் மென் மையும் அழகும் உடைய உயிரினங்களையும், கொடுமையும், கொடூர நடத்தைகள் உடையதும், விகாரமான தோற்றங்களையும் உடைய உயிரினங்களையும், நறுமணமுள்ள மலர்களையும்,
H45)
14 ஞானத்திருவடிதுர்நாற்றமடிக்கும் மலர்களையும், பயன்தரக் கூடிய தாவரங்களையும், பயனே இல்லாத தாவரங்களையும் இன்னும் அநேக அநேக ஜீவராசிகளையும் தோற்றுவித்து அவைகளில் பல்வேறு பேதங்கள் இருந்தபோதும் இயற்கையானது அவ்வுயிரினங்களுக்கு நல்லவைகள் தீயவைகள், அழகானவை அழகில்லாதவை, பயனுள்ளவை பயனற்றவை என பேதம் பார்க்காமல் அனைத்து உயிரினங்களையும் பேதமில்லாது சமமாகவே பாவித்து காத்து இரட்சிக்கிறது.
எப்படி இயற்கையானது உலக உயிரினங்களிடையே பேதம் பார்க்காமல் சரிசமமாக பாவித்து, அருள் செய்கிறதோ அதேபோல் எந்த உயிர்களிடத்தும் ஏற்ற தாழ்வு பார்க்காமல் பயன் கருதாமல் எல்லா உயிர்களையும் தம்முயிர் போல எண்ணி புறத்தே நடிக்காமல், அகத்துள்ளும் உண்மையான மன துடன் யார் ஒருவன் கடைப்பிடிக்கின்றானோ அவனே ஒப்புரவு ஒழுகுபவன்.
அவனே உண்மையான ஆன்மீகவாதி, அவனே ஞானியும் ஆவான்.
அப்படிப்பட்ட சமநிலை உடைய அந்த ஞானிகளின் உள்ளத்தில்தான் இறைவன் இருக்கிறார். அத்தகு உயர் குணம் படைத்த ஞானிகளின் உபதேசங்கள், அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞான அறிவை வளர்த்து, ஜென்மத்தைக் கடைத்தேற்றும் வல்லமைப் பெற்றதாகும்.
அப்படிப்பட்ட ஞானிகளின் திருவடிக்கு தொண்டு செய்ய நான் விரும்புகிறேன், என மகான் இராமலிங்க சுவாமிகள் கூறுவதால் ஒப்புரவு ஒழுகுபவருடைய உயர்வினை சொல்லவும் வேண்டுமோ!
நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரந் தான் பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.
- திருமந்திரம் - திருமூலர் வரலாறு - கவி எண் 85 இங்கு மகான் திருமூலதேவர், தான் அடைந்த பேரின்பத்தை, பேரின்ப நிலையின் தன்மையை தான் மட்டும் உணர்ந்தால் போதாது, அதை அனைவரும் அறிய வேண்டும், அடைய வேண்டுமென எண்ணி, அதன் இரகசியத்தை எல்லோருக்கும் அறிவிக்கின்றார்.
அவரது ஒப்புரவின் தன்மையை என்னவென்பது?
துர்நாற்றமுடையதும் மும்மலக் குற்றத்திற்கு ஆட்பட்டு நரை திரை மூப்பிற்குள் அகப்பட்ட இந்த தேகம் நம்மை வஞ்சிக்கக் கூடியது. எனது ஆசான் நந்தீசன் கருணையால் அத்தகு ஒப்புரவாளன் கருணையால் இத்தேகத்தின் இரகசியத்தை அவர் எனக்கு உணர்த்தினார்.
துர்நாற்றமுடைய இத்தேகத்தில்தான் எல்லாம் வல்ல இறைவனை அறியவும், அறிந்து இயற்கையை வென்று மரணமில்லா பெருவாழ்வை அடையக்கூடிய
146)
4 ஞானத்திருவடி வாய்ப்பும் உள்ளதென்பதை உணர்ந்து, பெறுதற்கரிய பெரும்பேற்றை அடைந்து, ஒளி உடம்பைப் பெற்று, மரணமில்லா பெருவாழ்வைப் பெற்றேன்.
அத்தகு பேரின்பநிலையை நான் பெற்றது போலவே, உலக மக்களே நீங்களும் பெற வேண்டும், என பேதமின்றி அனைவரையும் பொதுவாக எண்ணி கூறுகிறார், இதை இரகசியமாக பாதுகாக்காமல் அனைவரையும் அழைக்கிறார்.
இப்படி ஒரு துறை இருக்கிறது, இது இயற்கையை வென்ற துறை, மரணத்தை வெல்லக்கூடிய துறை, இதை அறிந்துகொள்ள எல்லோரும் வாருங்கள், என அழைக்கிறார். இப்படிப்பட்ட மிக உயர்ந்த தமது ஒப்புரவு தன்மையினால் மகான் திருமூலதேவர் அனைவரையும் அழைக்கிறார்.
எல்லா ஞானிகளும் தாம் அடைந்த, தாம் உணர்ந்த, அந்த பேரின்பநிலையை எல்லோரும் பெற வேண்டுமென்ற மிக உயர்ந்த ஒப்புரவு தன்மையினால் அந்த இரகசியங்களை மூடி வைக்காமல் பொதுவாக வைத்தனர்.
ஞானிகள் ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான பாடல்கள் இயற்றி, அவற்றின் மூலம் இவ்வுலக மக்களுக்கு இந்த இரகசியங்களை பொதுவில் வைத்து அனைவரும் அறியும்படி செய்தனர்.
இப்படி அனைவரையும் சமமாக எண்ணி, எவ்வுயிரையும் பேதமிலாது போற்றி காக்கும் ஞானிகளின் ஒப்புரவு தன்மையை என்னவென்று சொல்வது?
ஒரு தூய்மையான ஒப்புரவாளன் என்று சொன்னால் அது ஞானிகளைத்தான் குறிக்கும்.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.
- திருமந்திரம் - இதோபதேசம் - கவி எண் 2104. ஜென்மத்தை கடைத்தேற்ற வேண்டுமெனில், ஆன்மீகவாதிகளுக்கு ஒப்புரவு வேண்டும் என்கிறார் மகான் திருமூலர்.
ஆன்மீகவாதிகள், இந்த தெய்வம் உயர்ந்தது. இது தாழ்ந்தது என்று பாகுபாடு பார்க்கக் கூடாது.
ஆன்மீகவாதிகள் இந்த இனத்தைச் சேர்ந்தவன் உயர்ந்தவன், அந்த இனத்தைச் சேர்ந்தவன் தாழ்ந்தவன் என்று, இனப்பாகுபாடு பார்க்கக்கூடாது.
இப்படி உயிர்களிடத்தும் மனிதரிடத்தும் பேதாபேதமின்றி எல்லோரையும் சமமாக எண்ணி ஒப்புரவோடு வாழ்ந்து கடைப்பிடித்தால் அவன் இந்த ஞானத்துறையில் முன்னேறலாம்.
அவ்வாறன்றி பேதாபேதம் பார்த்தால் அது அவனது உயிருக்கே ஆபத்தாக முடியும். இத்துறையில் அவனால் முன்னேற முடியாது.
47)
4 ஞானத்திருவடி ஆகவே ஒருவன் ஞானத்துறையில் முன்னேற வேண்டுமெனில் அவனுக்கு ஒப்புரவு தன்மை மிகமிக அவசியமான ஒன்றாகும். )
உலகத்தார் உண்டு என்பது இல்என்பான் வையத்து அலகையா வைக்கப் படும்.
- திருக்குறள் - புல்லறிவாண்மை - குறள் எண் 850. என்கிறார் மகான் திருவள்ளுவர்.
எல்லாரு மின்புற் றிருக்க நினைப்பதுவே யல்லாமல், வேறொன் றறியேன்; பராபரமே!
- மகான் தாயுமானவர் - பராபரக் கண்ணி - கவி எண் 221 என்கிறார் மகான் தாயுமான சுவாமிகள். மகான் நந்தனாரோ தாம் அடைந்த பேரின்ப நிலையை மற்றவரும் அடைய வேண்டுமென்ற மிக உயர்ந்த நோக்கத்தோடு
எல்லோரும் வாருங்கள் சுகமிருக்குது பாருங்கள் நீங்கள் (எல்லோரும்) நல்லோர் பணிந்திடுந் தில்லையம்பல நாதன்பாதம் பணிந்துகொள்வோம் (எல்லோரும்) வாருங்கள் பரமானந்த மிருக்குது பாருங்கள் சடமெடுத்தபின் னேதுமே கண்டிலீர் விடமெடுத்துண்ட மேனியன் தேர்வர் வடம்பிடித்திட வாருங்கள் தில்லையில் இடம்பிடித்துநா மெல்லோரும் வாழலாம் (வாருங்கள்) சொல்லடாதில்லைச் சிற்றம் பலமென்று மெல்லடாவாயைச் சந்நிதி நேரவே நில்லடாயிந்த மாயப் பிறவியைக் கொல்லடாசிவ லோகங் குடிபுக (வாருங்கள்) சள்ளடாநம தில்லற வாழ்க்கையைத் தள்ளடாநந்தன் சொல்லுறுதி யென்று கொள்ளடா தில்லை யம்பலத்தாண்டவன் பள்ளடாவென்று பாடிக் கூடத்தாடியே (வாருங்கள்)
- மகான் நந்தனார். எனக் கூறுவதன் மூலம் ஆன்மீகவாதிகளை அழைக்கிறார்.
ஒப்புரவின் தன்மையை எடுத்துக் கூறும் விதத்தில் மகான் திருவள்ளுவர் தமது திருக்குறளில் ஒப்புரவு அறிதல் என்ற ஒரு தனி அதிகாரத்தில் பத்து குறள்கள் மூலம் ஒப்புரவின் தன்மையையும், அதை அறிவதன் அவசியத்தையும் பலனையும் குறிப்பிடும் விதத்தில் அமைத்துள்ளார்கள்.
- 212
14 ஞானத்திருவடிஒப்புரவு அறிதல் கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என் ஆற்றும் கொல்லோ உலகு. |
- 211 இந்த உலகத்தார் தமக்கு உதவும் மழைக்கு என்ன கைம்மாறு செய்கின்றனர்? மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைம்மாறு வேண்டாதவை.
தாளாற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு,
ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே ஒப்புரவின் நல்ல பிற.
- 213 பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப்போல நல்லன வாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்.
- 214 ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான்; மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு.
- 215 ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம், நீரால் நிறைந்தாற் போன்றது. |
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயன் உடை யான்கண் படின்.
- 216 ) ஒப்புரவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால், அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்.
- 217 ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடம் செல்வம் சேர்ந்தால், அஃது எல்லா உறுப்புக்களும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.
இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடன்அறி காட்சி யவர்.
ஒப்புரவு அறிந்து ஒழுகுதலாகிய தம் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வவளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
- 218
H49)
4 ஞானத்திருவடி நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு.
- 219 ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.
ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து.
- 220 ஒப்புரவால் கேடு வரும் என்றால், அக்கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளும் தகுதி உடையதாகும்.
தயைசிந்தை உடையவனாக இருத்தல், பேதா பேதமின்றி அனைவரையும் சமமாக எண்ணுதல், விட்டுக் கொடுத்து வாழ்தல், பொறுத்துக் கொள்ளுதல், மன்னிக்கும் மனப்பான்மை, அனுசரித்தல் ஆகிய இக்குணங்களெல்லாம் ஒப்புரவாளனுடைய பண்புகளாகும்.
மனிதனாக பிறந்தவன் சமுதாய வாழ்விலும், உலகியல் வாழ்விலும், ஆன்மீக வாழ்விலும் இக்குணங்களை கடைப்பிடித்தால் அவன் வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலைக்கு செல்லலாம்.
இப்படி பலவிதத்திலும் உயர்வான வாழ்வை அளிக்கக்கூடிய ஒப்புரவு குணங்களை ஒருவன் போற்றி தம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதாலேயே மகாள் ஒளவையார் ஒப்புரவு ஒழுகு எனக் கூறுவது மட்டுமல்லாமல், அனைவரும் ஒப்புரவு தன்மைகளை தம் வாழ்வில் கடைப்பிடித்து ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகிறார்.
அகத்திய மாரிஷி நமா என்றென்றோது
அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார் அகத்தியரே காஷாய வேட மீவார்
அப்போது சித்தரெல்லாம் கைக் கொள்வார்கள் அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல
யாருக்கும் தடையில்லை அரசே யென்பார் அகத்தியர் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே.
-கொங்கணர் கடைக்காண்டம் 500ல் 76. "ஓம் அகத்தீசாய நம" என்போம் ஆசி பெறுவோம்
-50
4 ஞானத்திருவடி"ஓம் அகத்தீசாய நம" ஒன்பது கோடி ஞானிகளுக்குத் தலைவரும் கும்பமுனி என்றும், குருமுனி என்றும் பட்டம் பெற்ற ஆசான் அகத்தீசர் அவர்களின் திருவடியை பூஜித்துதான் ஒன்பது கோடி மனிதர்களும் பாவத்தை நீக்கி புண்ணியத்தைப் பெற்று என்றும் மரணமில்லா பெருவாழ்வு பெற்று ஞானிகள் ஆகியுள்ளார்கள்.
நாமும் தினமும் காலையில் 30 நிமிடமும், மாலையில் 30 நிமிடமும் முடிந்தால், இரவு 12 மணிக்கு 30 நிமிடமும் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு திருவிளக்கு ஏற்றி, நறுமணமுள்ள பத்தி வைத்து, சமமான இடத்தில் வெண்ணிறத் துணியில் அமர்ந்து "ஓம் அகத்தீசாய நம" என்று நாமஜெபமாகிய பூஜை செய்து வந்தால் நீடிய ஆயுளும், நோயில்லா வாழ்வும் அமையும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பண்புள்ள புத்திர பாக்கியம் தோன்றும், மேலும் தொழில், விவசாயம், உத்தியோகம், வியாபாரம் நல்ல முறையில் நடக்கும், செல்வமும் பெருகும்.
"ஓம் அகத்தீசாய நம" என்று சொல்லி - அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டுமென்றும், அதற்குரிய அறிவும் பரிபக்குவமும் வேண் டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
"ஓம் அகத்தீசாய நம" என்று சொல்லி - நாம் பிற எவ்வுயிர்க்கும் இடையூறு செய்யாமலும், புலால் உண்ணாமலும் சைவ உணவை மேற்கொள்ள எனக்கு அருள்செய்ய வேண்டுமென்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
| "ஓம் அகத்தீசாய நம" என்று சொல்லி - தாய், தந்தை, மனைவி மக்கள், உடன் பிறந்தவர் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் இவர்களிடம் அன்போடு நடந்து கொள்ளும் பக்குவத்தை எனக்கு தந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
"ஓம் அகத்தீசாய நம" என்று சொல்லி - குடி பழக்கம், புலால் உண்ணுகின்ற பழக்கம், சூதாடும் பழக்கம் என்னைத் தொடரா வண்ணம் இருக்க எனக்கு அருள்செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
| "ஓம் அகத்தீசாய நம" என்று சொல்லி - பிறர் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் படாது இருக்க பக்குவத்தை தந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
"ஓம் அகத்தீசாய நம" என்று சொல்லி - என்னை யாரும் பேராசைக்காரன் என்று சொல்லாத அளவிற்கு என்னைப் பக்குவப்படுத்த வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
| "ஓம் அகத்தீசாய நம" என்று சொல்லி - நான் பிறர் மனம் புண்படும்படி பேசாது பிறர் மகிழும்படி பேசும் பழக்கத்தை எனக்குத் தந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்,
"ஓம் அகத்தீசாய நம" என்று சொல்லி - பிறர் எனக்கு இடையூறு செய்த போதிலும் நான் முன் செய்த வினைப்பயனே என்று எண்ணி இடர் செய்தவர்க்கு இடர் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றா வண்ணம் இருக்க எனக்கு அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
451)
ஞானத்திருவடி"ஓம் அகத்தீசாய நம" என்று சொல்லி - உண்மை தெரியாது கோபப்படுகின்ற பலகீனம் என்னிடம் இல்லாது இருக்க அருள்செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
"ஓம் அகத்தீசாய நம" என்று சொல்லி -சந்தேக நோய் நட்பையும் கெடுக்கும், அமைதியையும் கெடுத்து விடும். எனவே, உண்மை தெரியாது சந்தேகப்படுவதால் பெரும்பாவம் வரும் என்பதை எனக்கு உணர்த்தவேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும். -
"ஓம் அகத்தீசாய நம" என்று சொல்லி - தினமும் உமது திருவடியை மறவாது பூஜித்து வந்தாலே நீர் எனது அகமும் புறமும் இருந்து எது பாவம்? எது புண்ணியம்? என்பதை உணர்த்துவீர் என்று யான் அறிவேன். ஆகவே, உம்மை மறவாது பூஜித்து ஆசி பெற எளக்கு வரமருள வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
| "ஓம் அகத்தீசாய நம" என்று சொல்லி - தொடர்ந்து வரும் பிறவிக்கு காரணம் மனமாயை தான் என்பதை அறிந்து அதை வெல்லவும், வெல்வதற்குரிய வல்லமையும் நீரே எனக்குத் தந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
நாம் அகத்தீசர் நாமத்தைச் சொல்லி - நான் எடுத்த பிறவிகளோ கணக்கில் அடங்காது, செய்த பாவங்களோ எண்ணிலடங்காது இதிலிருந்து விடுபடவும், இனி பிறவா மார்க்கமாகிய சன்மார்க்கத்தை கடைபிடித்து ஒழுகவும் நீரே எனக்கு அருள்செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவேண்டும்.
| "ஓம் அகத்தீசாய நம" என்று சொல்லி - பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றக் கூ டி ய இரக்க சிந்தையும், அதற்குரிய வாய்ப்பையும் எனக்கு தந்தருள வேண்டுமென்று வேண்டிக்கொள்ள வேண்டும். பசியாற்றக் கூடிய எண்ணம் எப்பொழுது எனக்கு வருகிறதோ அன் றே நான் நிலை உயர்வேன் என்பதை உமது அருளால் அறிந்துகொண்டேன்,
"ஓம் அகத்தீசாய நம" என்று சொல்லி - கணக்கில் அடங்கா பாவிகள், புண்ணியவானாகிய உமது திருவடியை பூஜித்துதான் பாவத்தை நீக்கி புண் ணியத்தைப் பெற்றுள்ளார்கள். நானும் பாவிதான் என்பது உலகறிந்த உண்மையாகும். இருப்பினும் என்னைப் போன்ற பாவிகளை ரட்சித்து அருள்வது உமது கடனே ஆகும். எனவே, உன்னை நம்பி உமது திருவடியை பூஜிக்கிறேன். என்னை ஏற்று அருள் செய்ய வேண் டும் அகத்தீஸ்வரா! என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
"ஓம் அகத்தீசாய நம" என்று சொல்லி - மாதம் இருவருக்கு அன்னதானம் செய்வதையும் விருந்தை உபசரிப்பதையும் ஒரு இலட்சியமாகக் கொண்டு செயல்பட எனக்கு அருள்செய்ய வேண்டுமென்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
"ஓம் அகத்தீஸ்வரா!" என்று சொன்ன அக்கணமே உமது சீடர்களாகிய ஒன்பது கோடி ஞானிகளும் அருள் செய்வார்கள் என்பதை நானறிவேன். உமது திருவடியை நான் பூஜித்து வருவதால் இனி எக்குறையும் எனக்கு ஏற்படாது என்று பெருமிதத்தோடு இருக்கிறேன், எனவே அஞ்சேல்! அஞ்சேல்! என்று சொல்லி என்னை ஆட்கொள்ள வேண்டுமென்று உமது திருவடி பணிந்து வேண்டிக்கொள்கிறேன்.


ஓம் அகத்தியர் துணை
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
எல்லாம் செயல்கூடும் என்னானை அம்பலத்தே
எல்லாம் வல்லான் தன்னை ஏற்று
வடலூர் வள்ளல் பெருமானார்
அன்னதானம் செய்தால் துன்பங்கள் விலகும் மாதா பிதா குரு தெய்வமாக விளங்கும் எங்களது குருநாதர் தவத்திரு. ரெங்கராஜ தேசிக சுவாமிகளின்
அருளாசி வேண்டி...
நளாஸ் R. சேகர் நளாஸ் சைவ உணவகம் நெ. 46-A, வில்லியனூர் ரோடு, பவழநகர், புதுச்சேரி - 5,
செல்: 9787720354
ஓம் அகத்தியர் துணை
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
அருள்ஜோதி முருகன் மகான் அகத்தியர் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் ஞானிகளை வணங்குபவன் ஞானியாவான்
PERTUBUHAN KEBAJIKAN SRI AGATHIAR ARANGGAR SANMAARKA SANGGAM,
NO 28, JALAN 2, TAMIAN SEMARAK, | SG CHUA 43000, KAJANG, SELANGOR, MALAYSIA,
REG. NO: 1793-09-SEL PH -(0387391867, Webb - agathiar.webs.coin, Email - (VTAja200)4(7 yahoo.coIm, agthiarimalaysia (6) yah(N),Coim அன்னதானம் செய்தால் துன்பங்கள் நீங்கும் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமைதோறும் மாலை 7.30 மணியளவில்
ஞானியர்கள் சிறப்பு பூஜையும் வழிபாடும் நடைபெறும். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திருவிளக்கு பூஜை நடைபெறும்.
உண்மை ஆன்மீகத்தை அறிந்து கொள்ள ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு, தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அருளும் ஞானத்திருவடி மாத இதழ்
வாங்கி படியுங்கள் ... அன்னதானத்திற்கு பொருளுதவி செய்ய விரும்புவோர் மற்றும்
ஞானத்திருவடி மாதஇதழ் பெற விரும்புவோர் ) CONT FOR - Mr. RAJASEGAR, KL - 192704782
| Mr, VILLASAMY, KEDAH - 019 5184744 Mr. KARUNA, JB
- 016793730)() Mir, KARTHIK, KL.
- 01.3 3616446 குரு அருள்வேண்டி... SRI ARANGAR ENTERPRISES, MALAYSIA CONT - ROBERT CHARLES - (013 3681636
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
ஓம் அகத்தியர் துணை அருட்பெருஞ்சோதி
அருட்பெருஞ்சோதி
அறிவுக்கு அறிவாய் விளங்கும்
அருள்ஜோதி முருகன் முருகா என்று சொன்னால், முன்னின்று அருள்வான் முருகா என்று சொன்னால், முன்வினை தீர்ப்பான்
aud,
அன்னதானம் செய்தால் துன்பங்கள் விலகும்
மாதா பிதா குரு தெய்வமாக விளங்கும் எங்களது குருநாதர் தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளின்
அருளாசி வேண்டி... S.P.பிரியா B.Sc., B.Ed., LIC இன்சூரன்ஸ் ஆலோசகர், சேடபாளையம், நாரணாபுரம் - 641664, பல்லடம் {Tk.), திருப்பூர் (Dt.) 94861 87657, 89034 77657
4 ஞானத்திருவடி
"சிவாய ரெங்கராஜ தேசிகாய நம” அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. -குறள் 226. IS
சுந்தரானந்தர் எலக்ட்ரிகல்ஸ்
54-தெற்கு சிவன் கோயில் தெரு, வடபழனி,
சென்னை - 600 026.
0 044-24720499, 23721160. 'அன்னதானம் செய்தால் துன்பங்கள் தீரும்"
குருவருள் வேண்டி ... கணேஷ் ஹார்டுவேர்ஸ்
& அலுமினியம், No.72A - 100 அடி ரோடு, வடபழனி,
சென்னை - 600 026. | Cell : 98400 - 20828. 0 044 - 23651284, 23652568.
4 ஞானத்திருவடி
அகத்தியர் துணை
மகான் அம்பிகானந்தர் டைல்ஸ் & சானிட்டரிவேர்ஸ் பெருமாள் கோவில் தெரு, பிரசன்ன மஹால்
எதிரில்,
- Regency
JOHNSON
TILES
Panonyware Neucer
குரு அருள் வேண்டி ... ASR.ராஜா
S.திருமுகம் 98435 68696
98431 58696
லட்சுமி கிரில் டிசைன்ஸ்
எல்லாவிதமான மாடர்ன் கிரில் வேலைகளும், மாடர்ன் பர்னிச்சர் வேலைகளும் சிறந்த முறையில் செய்து தரப்படும்.
4. ஞானத்திருவடி
கவனகர்.
முழக்கம்
மாத இதழ் - ரூ. 10/கவனகரின்
ஆழமான ஆன்மீக விளக்கங்கள் அறிவுபூர்வமான சிந்தனையைத் தூண்டும் கருத்து மலர்கள். விந்தையான பதில்கள் மற்றும் அனைத்துச் சிறப்பம்சங்களும் நிறைந்த மாத இதழ்.
தமிழர்களின் வாழ்க்கைப் பாதையை வெற்றிப்பாதையாக மாற்ற வழிகாட்டும் இதழ் கவனகர் முழக்கம்
ஆசிரியர் :உலகத் தமிழர்களில் ஓர் அதிசய மனிதர், பல்கலை வித்தகர், பதினாறு கவனகர், நினைவு கலைச்செம்மல், மனிதகணிணி
திருக்குறள் இராம.கனகசுப்புரத்தினம்
மேலும் விபரங்களுக்கு ..... 4, இராகத் குடியிருப்பு, 2/746, கசூராத் தோட்டம், இரண்டாம் தெரு, நீலாங்கரை, சென்னை -41. K 044-24490826.
மற்றும் 66, ராமசாமி வீதி, சாய்பாபா காலனி,
கே.கே, புதூர், கோவை-38, (C) 0422-2441136. மெகா டிவியில் தினமும் காலை 7.30 மணிக்கு கவனகர் அய்யா அவர்களின் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி பார்த்து பயன்பெறுங்கள்
-58
4 ஞானத்திருவடி அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல் விருப்போடு இகல்உறு வெறுப்பும் தவிர்த்தே
அருட்பேறு அளித்த அருட்பெருஞ்ஜோதி அருட்பேர் தரித்து உலகனைத்தும் மலர்ந்திட
அருட்சீர் அளித்த அருட்பெருஞ்ஜோதி உலகெலாம் பரவஎன் உள்ளத்து இருந்தே
அலகிலா ஒளிசெய் அருட்பெருஞ்ஜோதி விண்ணினுள் விண்ணாய் விண்நடு விண்ணாய்
அண்ணி நிறைந்த அருட்பெருஞ்ஜோதி விண் உறு விண்ணாய் விண் நிலை விண்ணாய்
அண்ணி வயங்கும் அருட்பெருஞ்ஜோதி ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு
குரு அருள் வேண்டி ...
340
ANU BUILDERSS Builders & Estates
Plot No.66, 2nd Main Road, V.G.P. Babu Nagar, Medavakkam,
Chennai - 601 302. Phone: 2277 0495,
Cell : 94440 70495, E-mail : anubuilders@yahoo.com
அகத்தியர் துணை நிறுவனர், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள்
அவர்கள் தலைமையில் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளையின்
நித்திய செயல்பாடுகள்
காலை 6.00 ஆசான் அகத்தீசர் ஜோதி வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
தியானம் (நாமஜெபம்) காலை 7.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம். காலை 8.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம் காலை 9.30 சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள் தரிசனம் மதியம் 12.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம் மதியம் 1.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம் மாலை 6.00 அருட்ஜோதி வழிபாடு
தியானம் (நாமஜெபம்) ஆசான் அகத்தீசர் வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம் குறிப்பு: பிரதி வியாழக்கிழமை தோறும் காலை 9.30 மணியளவில் ஞானியர்கள் சிறப்பு பூஜையும், குருநாதர் அவர்களின் தரிசனமும் நடைபெறும். ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளைக்காக வெளியிடுபவர்
S.செந்தில்குமார், நிர்வாக அறங்காவலர், 113-நகர் விரிவாக்கம், துறையூர்-621 010, திருச்சி மாவட்டம். ஆசிரியர் - இரா.மாதவன்.
அச்சிட்டோர் :
இராம.தொல்காப்பியன், வாஞ்சி மறுதோன்றி அச்சகம், கூட்டுறவு நகர், துறையூர்.
'ஞானத்திருவடி - மாத இதழ்
சந்தா படிவம் ப1 வருட சந்தா ரூ.120/
ப3 வருட சந்தா ரூ.350/
திரு/திருமதி. : முகவரி
ஊர்
பின்கோடு
வட்டம்
மாவட்டம்
போன் : (வீடு)
(அலுவலகம்). (செல்)
சந்தா செலுத்தும் முறை 0ரொக்கம் 0DD வரைவோலை 0 MO-மணியார்டர் * வரைவோலையை Sri Agathiar Sanmaarga Charitable Trust என்ற
பெயரில் எடுக்கவும். $7 வரைவோலையை payable at Trichy (or) Thuraiyur என்று எடுக்கவும்.
தேதி :
செலுத்துபவர் கையொப்பம் படிவத்தை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
ஞானத்திருவடி - மாத இதழ்
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை ஓங்காரக்குடில், 113-நகர்விரிவாக்கம், துறையூர் - 621 010. திருச்சி மாவட்டம்.
ஓங்காரக்குடில் அலுவலக உபயோகத்திற்கு மட்டும்
-
ரசீது எண் : ..................தேதி : ......................... ரூபாய் : ........... சந்தாதாரர் முகவரி மாற்றம் இருப்பின் கடிதம் மூலம் தெரிவிக்கவும்.
---

Comments

Popular posts from this blog

மார்ச் 2012 ஞானத்திருவடி நூல் ஓங்காரக்குடில்