மார்ச் 2012 ஞானத்திருவடி நூல் ஓங்காரக்குடில்

________________________________________
அகத்தியர் துணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஞானத்திருவடி ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மைப் பத்திரிக்கை | கர (3 பங்குனி (மார்ச் - 2012)
விலை : ரூ.10/நிறுவனர், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள்
உள்ளடக்கம்)
11. சித்தர்கள் போற்றித் தொகுப்பு ........
2. மகான் அகத்தீசர் ஆசி நூல் ...
|3. சித்த தத்துவமும் பொருளாதாரமும்
- குருநாதர் அருளுரை ... |4. ஆத்திச்சூடி - குருநாதர் அருளுரை தொடர் ..................
|5, ஓங்காரக்குடில் நித்திய செயல்பாடுகள் ...............
8 ஓங்காரக்குடில் ஆசான் 8 சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளிடம்
ஆசிபெறும் நேரம் தினசரி காலை 9.30 முதல் 11 மணி வரை மட்டுமே
?
4. ஞானத்திருவடி புண்ணியமான ஞானத்திருவடி நூலதனை பார்த்தவர் படித்தவர்கள் பல்லோர் அறிய எண்ணியவார் செய்திடவே வேண்டும் வேண்டும் எடுத்துரைக்கும் அரங்கனின் உபதேசங்கள் | உபதேசங்கள் மானிடர்க்கு நல்வழி காட்டும் உத்தமன் அரங்கன் உறவுதனை கொண்ட மக்கள் எப்போதும் புண்ணியர்களாய் உலகில் வாழ்வார் ஏற்றமுடன் நற்பண்பு குணம்அறிவும் அறிவு பெற்று அகத்தியத்தை உணர்ந்துவிட்டால் அண்டிடா பலதுயரம் விலகிவோடும் குற்றமெனும் பகைதுன்பம் நோய்களோடு காலனும் அஞ்சியே விலகி போவான்
- மகான் அகத்தியர் ஆசி நூல், அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,
ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.
ஞானத் திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்க ளைப் பற்றி பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். எனவே இந்நூல் ஞான வாழ்வு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம் தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமணியரும் நமது வீட்டில் இருந்து அருள் செய்வதாக எண்ணவேண்டும்.
மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 35 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில் கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான் சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள், ஞானிகளின் பாடல்களில் தான் உணர்ந்த பல இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு எளிய முறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல்.
இந்த ஞானத்திரு வடி நூலின் விற்பனை வருவாய் அன்னதானப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அன்புடன் – இரா.மாதவன். திருவிளக்கு பூஜை உங்கள் பகுதியில் செய்ய தொடர்புக்கு
R.சுரேஷ் - 94434 21935
4 ஞானத்திருவடி
துவக்கப்பாடல்
திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும் திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும் திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும் திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம் : திருவடிப்பேறு : 1598 ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று
உலகறியச் செய்யும் வள்ளல், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
தொகுத்து வழங்கிய சித்தர்கள் போற்றித் தொகுப்பு ஓம் . அகத்தியர்
திருவடிகள் போற்றி அகப்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி அத்திரி மகரிஷி
திருவடிகள் போற்றி அநுமான்
திருவடிகள் போற்றி அம்பிகானந்தர்
திருவடிகள் போற்றி அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி அருள்நந்தி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி அல்லமாபிரபு |
திருவடிகள் போற்றி அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி 10 இடைக்காடர்
திருவடிகள் போற்றி இராமலிங்கசுவாமிகள் திருவடிகள் போற்றி இராமதேவர்
திருவடிகள் போற்றி இராமானந்தர்
திருவடிகள் போற்றி உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி ஒளவையார்
திருவடிகள் போற்றி கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி கண்ணானந்தர்
திருவடிகள் போற்றி 20
ஓம் | கண்ணிச்சித்தர்
கண நாதர் கணபதிதாசர் கதம்பமகரிஷி கபிலர் கமலமுனிவர் கருவூர்தேவர் கல்லுளிச்சித்தர் கலைக்கோட்டு முனிவர் கவுபாலச்சித்தர் கனராமர் காகபுஜண்டர் காசிபர் காலாங்கிநாதர் குகைநமச்சிவாயர் குதம்பைச்சித்தர் குமரகுருபரர் குருதட்சணாமூர்த்தி குருராஜர் குறும்பைச்சித்தர் கூர்மானந்தர் கொங்கணேஸ்வரர் கோரக்கர் கௌசிகர் கௌதமர் சங்கமுனிச் சித்தர் சங்கர மகரிஷி சங்கிலிச்சித்தர் சச்சிதானந்தர் சட்டநாதர் சண்டிகேசர் சத்யானந்தர்
சிவயோகமாமுனிவர் ஓம் சிவவாக்கியர் ஓம் சிவானந்தர்
E• E• E• E• E• E• E• E• E• E• E• E• E• E• E• E• E• E4 B. B. E. E.
4. ஞானத்திருவடி) திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி 30 திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி 40 திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி 50 திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி
ஓம்
ஒம்
ஓம்
ஓம்
ஒம்
ஓம்
ஓம்
ஓம்
சுகப்பிரம்மர் ஓம் சுந்தரானந்தர் ஓம் சுந்தரமூர்த்தி
சூதமுனிவர் சூரியானந்தர் சூலமுனிவர் சேதுமுனிவர் சொரூபானந்தர் ஜம்பு மகரிஷி
ஜமதக்னி ஓம் ஜனகர்
ஐனந்தனர். ஓம் ஜனாதனர்.
ஜனக்குமாரர் ஜெகநாதர் ஜெயமுனிவர்
ஞானச்சித்தர் ஓம் டமாரானந்தர்
தன்வந்திரி ஓம் தாயுமான சுவாமிகள் ஒம்
தானந்தர்
திரிகோணச்சித்தர் ஓம் திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
திருமாளிகைத் தேவர் ஓம் திருமூலதேவர்
திருவள்ளுவர் ஓம் தூர்வாசமுனிவர் ஓம் தேரையர் ஓம் நந்தனார்
நந்தீஸ்வரர்
நாதாந்தச்சித்தர் ஓம் நாரதர் ஓம் நொண்டிச்சித்தர் ஓம் பட்டினத்தார்
18ஞானத்திருவடி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி 60 திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி 70 திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி 80 திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி 90
ஓம் |
ஓம்
ஓம்
ஓம்
ஒம்
ஓம்
ஓம் .
ஓம்
ஓம்
ஓம்
ஓம்
ஓம்
பத்ரகிரியார்
பதஞ்சலியார் ஓம் பரத்துவாசர்
பரமானந்தர் ஓம் பராசரிஷி
பாம்பாட்டிச்சித்தர் ஓம் பிங்களமுனிவர் ஓம் பிடி நாகீசர் ஓம்
பிருகு மகரிஷி ஓம் பிரும்மமுனிவர் ஒம்
பீர்முகமது
புண்ணாக்கீசர் ஓம் புலத்தீசர் ஓம்
புலிப்பாணிச்சித்தர் ஓம் பூனைக்கண்ணார் ஓம்
போகமகாரிஷி
மச்சமுனிவர் ஓம் மஸ்தான்
மயூரேசர் ஓம் மாணிக்கவாசகர் ஓம் மார்க்கண்டேயர்.
மாலாங்கன்
மிருகண்டரிஷி ஓம் முத்தானந்தர்
மெய்கண்டதேவர் ஓம்
மௌனச்சித்தர் ஓம் யாகோபு.
யூகிமுனிவர் ஓம் யோகச்சித்தர் ஓம் யோகானந்தர் ஓம் ரோமரிஷி ஓம் வசிஷ்டமகரிஷி ஓம் வரதரிஷி
வரரிஷி
வராகிமிகி ஓம் வால்மீகி
4. ஞானத்திருவடி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி 100 திருவடிகள் போற்றி ! திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி 110 திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி 121 திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி
ஓம்
ஓம் ஓம்
ஓம்
ஓம்
ஓம் ஒம்
4. ஞானத்திருவடி ஓம் விசுவாமித்திரர்
திருவடிகள் போற்றி ஒம் வியாக்ரமர்
திருவடிகள் போற்றி ஓம் வியாசமுனிவர்
திருவடிகள் போற்றி ஓம் . விளையாட்டுச் சித்தர் திருவடிகள் போற்றி ஓம் வேதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி 131 ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள்
திருவடிகள் போற்றி போற்றி. நிறைவுப்பாடல் வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம் வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள் வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.
திருமந்திரம் 3047 | மேற்கண்ட 131 சித்தர்கள், மகான்களின் திருவடிகளை தினசரி காலையும் மாலையும் போற்றி பூஜை செய்வதே சிறப்பறிவாகும். சிறப்பறிவு பெற்றவர்களுக்கு குடும்ப ஒற்றுமை, புத்திர பாக்கியம், உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள் பெருகி, மது அருந்துதல், புலால் உண்ணுதல், சூதாடுதல் போன்ற தீவினைகள் நீங்கிவிடும். மேலும், மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால், பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்,
ஓங்காரக்குடில் ஆசான் ஆசி!
ஓங்காரக்குடிலில் நடைபெறும் அன்னதானம் மற்றும் அறப்பணிகளுக்காக, தமிழகமெங்கும் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக திருவாளர்கள் கே.எஸ்.கைலாசம், பத்மநாபன், சுபாஸ், ராமமூர்த்தி, ரெங்கநாதன், திருமுகம் மற்றும் திருவண்ணாமலை, பாண்டிச்சேரி, கோவை, பொள்ளாச்சி, செங்கல்பட்டு, வேதாரண்யம், விருதுநகர், மண்ணச்சநல்லூர், திருச்சி அன்பர்கள் நமது ஞானத் திருவடி மாத இதழை தினசரி பொதுமக்களுக்கு வினியோகம் செய்கிறார்கள்.
ஞானத்திருவடி நூலை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அன்பர்களுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஞானிகள் அருள் கிட்டி எல்லா நன்மைகளும் அடைவார்கள். மேலும் உடல் ஆரோக்கியமும், நீடிய ஆயுளும், எல்லா நலமும் வளமும் பெறுவார்கள். மேலும் ஞானமும் சித்திக்கும் என்று ஓங்காரக்குடில் ஆசான் ஆசி வழங்கியுள்ளார்கள்.
4. ஞானத்திருவடி ஞானத்திருவடி நூலிற்கு மகான் அகத்தியர் அருளிய ஆசிநூல் சுவடி வாசித்தளித்தவர் A.S.துரைகணேசன், செல் : 94439 58639 மகான் அகத்தியர் நாடிஜோதிட நிலையம், தட்டாஞ்சாவடி, புதுச்சேரி. |
13.12.2011 1. சதுர்த்தியிலே நாதவிட வாமபூசை
சிவனடியான் தயவேணும் அடியேன் செய்து மதித்தபடி வரம் தருவாய் வாலையம்மா மலையரசன் மகளே நீ ஆதி சக்தி சக்தியே உனது திருவடிகள் போற்றி சாற்றுகிறேன் அகிலம்காக்கும் அரங்கனுக்கு யுகயுகமாய் பூலோகத்தில் அவதரித்து உலகோர் வாழ நல்வழிகள் வகுத்தளித்த அளித்திட்ட அரங்கராசா உன்வழியே அகத்தியன் யான் உலகோரிடம் நூல்வழி பேசி அளிக்கின்றேன் உபதேசம் நல்கருத்து அரங்காவுன் வடிவிலே சித்தர்கள் எல்லாம் எல்லோரும் மாந்தர்கட்கு பணிகள் செய்து எண்ணற்ற குறைகளை தீர்த்துவாரோம் நல்லதுவாய் நீ பிறந்து தவத்தை நோக்கி நவகோடி சித்தர்களின் அருளை பெற்றாய் அருள்பெற்று ஆதவனாய் ஒளிரும் உன்னுள் அற்புத சக்திகளும் நிறைந்திருக்கு திருமந்திரம் எனதுநாமம் என்றுணர்ந்து தீவிரமாய் அகத்தீசா அகத்தீசாயென்று என்றுமே உறவறுத்து ஊணுறக்கமற்று ஏற்றியதவம் இன்றுஉலகை காத்ததப்பா இனியெவர் இந்த நிலையை அடைவார் உலகில் ஈசனாய் இருக்கின்றாய் அரங்கராசா அரங்கராசர் தவநிலை மகிமை சொல்வேன் அறிந்து கொள்வீர் மானிடமே ஞானியின் தவத்தை இறவாநிலை கண்டஒருவன் அரங்கனாகும் இருகலையும் வழிநடத்த அறிந்தவன் ரங்கன்
4 ஞானத்திருவடி
அறிந்துமே ஆதாரங்கள் இயக்கி பார்த்தான் ஏற்றிவந்து சுழுமுனையில் இருத்திவைத்து குற்றமில்லா புவன்கதவை மூடிவைத்து களங்கமிலா நல்மனதை இதயத்திலும்
இதயத்தில் பொறிபுலன்கள் புத்தியைகட்டி உயிரதுவை உச்சியில் நிறுத்திவைத்து சதாசிவ நிலையதுவை பலமுறையும் சிவஞானி அனுபவித்தார் பேரின்பத்தை
10. பேரின்ப நிலையதுவில் உடல் மறந்து
பரமானந்த நிலைகண்ட தருணம் தன்னில் அரங்கனே வந்துவிடு என்றழைத்தேன் அகத்தியன்எனை கடுந்தவத்தால் வெற்றிக்கொண்டு கொண்டு மீண்டும் உடலுக்கு சக்தியளித்து கூடான சரீரத்தில் இயக்கலானார் வேண்டினாலும் கிட்டாத நிலையை அரங்கா விட்டுவிட்டாய் என்று நாங்கள் சித்தர்கள் கேட்டோம்
12. கேட்டதற்கு அரங்கமுனி அகத்தீசா என்று
கலியுகத்தில் மாந்தர்கட்கு வழிகாட்ட வேண்டும் தொடருகின்றேன் மானிட உருவில் எனது பணியை
தவரிசியே துணைபுரிய வேண்டும் வேண்டும் 13, வேண்டி வந்தான் அரங்கராசன் மானிடம் காக்க
வணங்கியே வாழவேண்டும் மாந்தரெல்லாம் அண்டி வந்து அரங்கனின் அடிபணிந்தால் அரங்கனின் திருவரமே புண்ணியமாகும்
14. புண்ணியமான ஞானத்திருவடி நூல்தனை
பார்த்தவர் படித்தவர்கள் பல்லோர் அறிய எண்ணியவார் செய்திடவே வேண்டும் வேண்டும் எடுத்துரைக்கும் அரங்கனின் உபதேசங்கள்
15. உபதேசங்கள் மானிடர்க்கு நல்வழி காட்டும்
உத்தமன் அரங்கன் உறவுகளை கொண்ட மக்கள் எப்போதும் புண்ணியர்களாய் உலகில் வாழ்வார் ஏற்றமுடன் நற்பண்பு குணம்அறிவும்
4. ஞானத்திருவடி) 16, அறிவு பெற்று அகத்தியத்தை உணர்ந்துவிட்டால்
அண்டிடா பலதுயரம் விலகிவோடும் குற்றமெனும் பகைதுன்பம் நோய்களோடு காலனும் அஞ்சியே விலகி போவான்
17. விலகியபின் அமைதி சிந்தை அருள் நிறைந்து
விரும்பியவார் சித்தர்களும் துணைபுரிவார் உலகில்இனி அகத்தியன்என் அருளாட்சி நடக்கும்
உணர்த்திடுவாய் அரங்கராசா உன்வழி மாந்தர் 18. மாந்தர்களும் சத்தியத்தை உணர்ந்து வாழ்வார்
மக்கள் எல்லாம் சாதிமத பேதமின்றி இந்த உலகில் அரங்கன்காட்டும் நல்வழிபற்றி இறவாநிலை பிறவாயினி நிலையடைவார்
19, நிலையடைய எனது நாமம் மகாமந்திரம்
நிலைபெருகி தேக்சக்தி சித்திகள் காண கலையாத எனது நாமம் மகா மருந்து
கண்டுகொண்டால் கலிவென்று வாழ்வுஓங்கும் 20. ஓங்கிவர உயர்வாழ்வு தானம் செய்வீர்
உலகிலே மானுடம் செழிப்பதற்கு பாங்குடைய தானதவம் சிறந்த மார்க்கம் பண்புடன் ஆலயம்பல தொழுதிட்டாலும்
21. தொழுதிட்டாலும் புண்ணியமும் அடைவதேது
தானதவம் செய்தால்தான் புண்ணியம் சேரும் அழகான வாழ்வமையும் அருள் பெருகும்
அருந்தவமும் செய்வோரை காத்தருள்வேன் 22. அருள்வேண்டி அகத்தியன் எனை வணங்கிய குடிக்கு(குடும்பம்)
அருள்தந்து இருளகற்றி காத்தருள்வேன். திருமந்திரம் எனதுநாமம் செபித்த இடத்தில்
தவரிசியான் சித்தர்களும் தேவர்களும் இருப்போம் 23, இருந்துகாப்போம் அரங்கனை வணங்கி நின்றால்
உலகம்காக்க யுகங்கள் முன்பு சித்தரிசிகள் அருள்வேண்டி யாகயெக்கியங்கள் செய்துவிட்டார் அறியும்கால் தானதவம் மானிடனுக்கு போதும்
________________________________________
14. ஞானத்திருவடி 24. போதும்போதும் என்று மானிடன் சொல்லுகின்ற புண்ணியமான அன்னதானம் கடைப்பிடித்தால் சத்தியமாய் மானிடனும் மகானாவான்
சிறப்புடனே தானம்பல செய்தவர்க்கு 25, செய்பவர்க்கு நிம்மதியும் நிலைக்க செய்வோம்
சர்வபாவ சங்கடங்கள் அகன்று ஓடும் தெய்வமெல்லாம் துணைபுரியும் விலகா நின்று
தயவுண்டாகும் உயிர்களிடத்தில் சிவத்தை உணர்வான் 26. உணர்ந்ததொரு அரங்கராசா உற்றுகேட்பாய்
உனதுதவத்தால் உலகெல்லாம் மானுடம் செழிக்கும் உயிர்பலிகள் தவிர்த்துவரும் கருணைபிறக்கும் உயர்கதியும் சிவசிந்தை பேரானந்தமடைவர்
27, பேரானந்தம் நீ அடைந்த காரணத்தால்
போகர் புலிப்பாணி பதஞ்சலியும் இராமதேவர் இடைகாடர் வியாசமுனிவர்
இருநவத்தோர்(18 சித்தர்களும்) உன்னோடு சப்தரிசிகளும் 28. இரிசிகள் எல்லாம் அரங்காஉன் தவத்தை காத்து
இடைவிடா நற்பணிகள் செய்துவாரார் தட்டிவிடா ஓங்காரகுடில் அன்னதானம்
தவமுனிவர் அருள்மருந்து புசிப்பவர்க்கு ஞானம் 29.
ஞானமுடன் பக்திதோன்றும் சிந்தை தெளியும் ஞானியின் வழிநின்று பக்தர்களும் தினம் தினம் செய்கின்ற அன்னதானத்திற்கு
தவரிசிகள் பூரண அருளைதாரோம் 30. அருளோடு செய்கின்ற அன்னதானத்தை
அமைதியுடன் புசிப்பவர்கள் புண்ணியம் பெறுவார் விரும்பியே பக்தியோடு அன்னமளித்தால் வளநலமும் பெற்றிடுவார் பூலோகத்தில்
31.
பூலோகத்தில் ஓங்காரகுடில் கைலாயமாகும் பரமானந்த அரங்கனே ஈசனாவான் ஆலசுகம் அனுபவிக்க ஓங்காரகுடில் வந்து அரங்கனாசி பெற்றிடும் மக்கள் பெருவாழ்வு காண்பார்
4. ஞானத்திருவடி 32, வாழ்வதனில் அகத்தியன் யான் காப்பேன் திண்ணம்
வாழ்த்துகிறேன் அகத்தியன் யான் அரங்கமுனியை தாழ்வில்லா தவத்தினால் உலகை காத்த தெய்வசித்த ஞானியே வாழ்க முற்றே.
-சுபம்
பல்,
ஞானிகள் திருஉருவப்படங்கள், ஆசான் அருளிய நூல்கள், தினசரி, மாத - நாட்காட்டிகள், ஆசான் அருளுரைகள் அடங்கிய ஒலி, ஒளி குறுந்தகடுகள் (CD) மற்றும் ஞானத்திருவடி நூல் கிடைக்கப் பெறாதவர்களும் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி
K.ரவிச்சந்திரன், ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், துறையூர்,
(C) 04327-255784, செல்: 94883 91565 ஓங்காரக்குடிலாசானிடம் தீட்சை பெற விரும்புகிறவர்கள் தொடர்புக்கு
ந.நடராஜன், கொள்கை பரப்பாளர், செல்: 98947 55784
: சென்னை திருவொற்றியூரில் கோயில் கொண்டுள்ள முற்றுப்பெற்ற: 'மகானும், அழைத்தால் அக்கணமே அஞ்சேல் என்று சொல்லக்கூடிய ஆற்றல் : பெற்ற மகான் பட்டினத்தார் சந்நிதியில் ஒவ்வொரு வாரம் : (வியாழக்கிழமைதோறும், மாலை ஆறு மணியளவில் ஞானியர் வழிபாடும், ; குருநாதர் அவர்களின் அருளுரைகள் ஒலிஒளி காட்சியாகவும் நடத்தப்படுகின்றது. ! 'அச்சமயத்தில் ஞானத்திருவடி நூல்கள் விநியோகம் செய்யப்படுகிறது. பூஜை : 'முடிவில் ஞானிகளை பூஜித்த பிரசாதம் வழங்கப்படுகிறது. மேற்படி பூஜையில் - கலந்துகொள்ள விரும்புபவர்களும், குருநாதர் அவர்களின் அருளுரைகள்: 'அடங்கிய குறுந்தகடுகள் பெறவும், குருநாதர் அவர்களின் நூல்கள் மற்றும் ! 'ஞானத்திருவடி பெறவும் சென்னையில் தொடர்பு கொள்ள:
திரு. K.S.கைலாசம் - 98400 63510 திரு. D.ரெங்கநாதன் - 96770 17170 திரு. A.பத்மநாபன் - 044 25733917
-13)
4 ஞானத்திருவடி) திருச்சி மாவட்டம், துறையூர் ஓங்காரக்குடிலாசான் சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு, தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள் 05.07.1998 அன்று ஆன்மீக அன்பர்கள் முன்னிலையில்
வழங்கிய அருளுரை "சித்த தத்துவமும் பொருளாதாரமும்" அன்புள்ள சன்மார்க்க சங்க உறுப்பினர்களே வணக்கம்.
நாம் இதுவரையில் பேசிய கருத்துக்களை சைவத்தை சார்ந்தவர்களும் வைணவத்தை சார்ந்தவர்களும் பேசுவார்கள். அவர்களிலும் சிலபேருக்கு உண்மை தெரியும். எல்லோருக்கும் தெரியும் என்று சொல்ல முடியாது.
இந்த உடம்பு வீணான உடம்பென்றும், முதுமைக்கு உரியதென்றும், எதற்கும் பயன்படாதென்றும் சிலர் சொல்வார்கள். நாம் பழைய சட்டையை எப்படி கழட்டி எறிகிறோமோ, அப்படி இந்த உயிர் இந்த உடம்பைத் தூக்கி எறிந்துவிட்டு புது உடம்பை எடுக்குமென்று சொல்கிறார்கள். அவர்கள் அறிந்த உண்மை அதுதான். இதை வெகுபேர் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.
ஆக கிழிந்த வேட்டி, கிழிந்த சட்டையைப் போல், நலிந்த அல்லது நோய்வாய்ப்பட்ட இந்த உடம்பை, உயிர் தூக்கி எறிந்துவிட்டு புதிய உடம்பு எடுக்குமென்றும் சொல்கிறார்கள்.
மோட்சம் என்பது என்ன?
உயிர்தான் மோட்சம் பெறும் என்கிறார்கள். உயிர் தான் மோட்சம் பெறுகிறதென்று சொன்னதால், அவர்களுக்கு உண்மை தெரியவில்லை என்பதுதான் பொருள்.
சித்த தத்துவம் அப்படி அல்ல. தனி உயிரோ, தனி உடம்போ மோட்சம் பெறாது, இரண்டும் சேர்ந்துதான் மோட்சம் பெறும் என்பார்கள். இது சித்த தத்துவம்.
சைவத்தை சேர்ந்தவர்களும், வைணவத்தை சேர்ந்தவர்களும் வேறொன்றை சொல்லுகிறார்களே என்றால், அவர்கள் அறிய முடியாத ஒன்றை சித்தர்கள் அறிந்திருக்கிறார்கள். இதைத்தான் மகான் திருமூலர் சொல்வார்
ஆறு சமயமுங் கண்டவர் கண்டிலர் ஆறு சமயப் பொருளும் அவனலன் தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின் மாறுதல் இன்றி மனைபுக லாமே.
- -திருமந்திரம் - புறச்சமய தாஷணம் - கவி எண் 1533
-14)
14. ஞானத்திருவடிஅந்தக்காலத்தில் பௌத்தம், ஜைனம், போன்ற ஆ, று மதங்கள் இருந்துள்ளது. இத்தனை மதத்திலும் அறியமுடியாத ஒன்றை தமிழன்தான் அறிந்திருக்கிறான், தமிழகத்தில் தோன்றிய முதுபெரும் ஆசான் சுப்ரமணியர் சொன்னதால்தான் தமிழன் அறிந்திருக்கிறான்.
ஆசான் சுப்ரமணியர்தான், உடம்பும் உயிரும் சேர்ந்துதான் மோட்சலாபம் பெறும் என்றார். தனி உயிருக்கு உணர்ச்சி இல்லை, தனி உடம்புக்கும் உணர்ச்சி இல்லை. இரண்டும் சேர வேண்டும். உடம்பும் உயிரும் சேர்ந்தால்தான் மோட்ச லாபத்தை தருமென்று ஆசான் சுப்ரமணியர் சொன்னார். அவர்களால் சொல்ல முடியாத ஒன்றை இவர் எப்படி அறிந்தார் என்றால், அதுதான் தலைவனின் தனித்தன்மை,
உடம்பையும் உயிரையும் ஞானிகளால் மட்டும்தான் ஒன்று சேர்க்க முடியும். உடம்பையும், உயிரையும் எப்படி சேர்க்க முடியும்? உடம்பையும் உயிரையும் சேர்க்கின்ற இடம் எது? உடம்பையும் உயிரையும் சேர்க்கின்ற இடம் புருவமத்திதான், புருவமத்தி என்பதும் சுழிமுனை என்பதும் ஒன்றுதான். அப்ப இடகலையும், பிங்கலையும் சேருகிறது. இடகலையும், பிங்கலையும் புருவமத்தியில் சேர்ந்தால் அது மோட்சத்தை தரும்.
ஆக, மோட்சம் என்றால் என்ன? அதை எங்கிருந்து பெறுவது. இடகலையும் பிங்கலையும் சேர்ந்தால் உள்ளே ஒரு அக்னி ஏற்படுகிறது. அந்த அக்னி என்ன செய்கிறது? உடல்மாசை நீக்கி ஜோதியாக வெளிப்படுகிறது. இதைத்தான், "சேர்ப்பதுதான் இடை சமனாய் சேர்த்துக் கொண்டால், சிவா சிவா சொல்லரிது செயலைத்தானே" என்றார்கள். ஆக சேர்ப்பது இடை சமனாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை திருமூலர் சொல்வார்
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங் காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக் கூற்றை யுதைக்குங் குறியது வாமே.
- திருமந்திரம் - பிராணாயாமம் - கவிஎண் 571. ) "ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்" என்னும் வார்த்தை மிக இலகுவானது. நமக்கு ரெண்டு பக்கமும் சுவாசம் வந்து போய்கிட்டு இருக்கும். வந்து போகிற காற்றை ஸ்தம்பிக்கிறான் நிறுத்துகிறான். அப்படி நிறுத்தினால் இரண்டு பக்கமும் காற்று ஓடும். இரண்டு பக்கமும் வருகின்ற காற்றை இழுத்து, கண்ட ஸ்தானத்திலிருந்து புருவமத்திக்கு இழுத்து விடுகிறான். புருவ மத்திக்கு காற்றை இழுத்துவிட்டால் இரண்டு பக்கமும் வருகின்ற காற்று போய் ஒடுங்கிவிடும். ஏனென்றால் அந்த காற்று வெளியே போக முடியாது.
15
3 ஞானத்திருவடி இப்படி சேர்த்து விட்டால், சேர்ப்பது தான் இடை சமனாய் சேர்த்துக்கொண்டால், சிவா சிவா சொல்லரிது செயலைத்தானே - அப்படியே உடலும் உயிரும் சேர்க்கப்படும்.
உடல் என்று சொல்லப்பட்ட சந்திரகலையையும், உயிர் என்று சொல்லப்பட்ட சூரியகலையையும் சேர்த்துவிட்டால், உடல் மாசு நீங்கிவிடும். உடல்மாசு நீங்கினால் உயிருக்கு மாசு கிடையாது. உடம்புக்குத்தான் மாசு. அப்ப உடம்புக்குள்ளே மாசை நீக்குவதற்கு ஞானிகள் இப்படி ஒருமுறையை கையாண்டு இருக்கிறார்கள். இப்படி சேர்க்கும்போதுதான் உடல் மாசு தீரும். உடல் மாசு தீர்ந்தால்தான் அனல் ஏ றும். இரண்டு பக்கமும் வருகின்ற மூச்சுக்காற்றை சேர்த்து புருவமத்தியில் செலுத்திவிட வேண்டும்.
| “சேர்ப்பது தான் இடை சமனாய் சேர்த்துக் கொண்டால், சிவா சிவா சொல்லரிது” என்றார். ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் - காற்றை ஸ்தம்பித்து நிறுத்தினால், இரண்டு பக்கமும் காற்று வரும்.
சுவாசம் எப்போதும் ஒருபக்கமாகத்தான் வரும். ஒன்று இடது பக்கமாக வரும் அல்லது வலது பக்கமாக வரும். இடதுபக்கம் வருகின்ற காற்றுக்கு சந்திரகலை என்றும், வலதுபக்கம் வருகின்ற காற்றை சூரியகலை என்றும் சொல்வார்கள்.
வயிற்றில் உணவு இல்லாதபோது பத்மாசனம் இட்டு காற்றை ஸ்தம்பிக்க வேண்டும். அதற்கென்று ஒருமுறை இருக்கிறது. பாசிப்பயிறு, பச்சரிசி சேர்த்து சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால்தான் மலச்சிக்கல் இருக்காது. அப்ப வெறும் வயிறாக இருக்கிறது. மலச்சிக்கல் இல்லை. வினாத்தண்டை வில்போல் நிமிர்த்தி வைத்துக் கொள்கிறான். மூச்சைக் கட்டுகிறான். மூச்சைக் கட்டினால் இரண்டு பக்கமும் சுவாசம் வரும். இரண்டு பக்கமும் மூச்சுக்காற்று வரும். ஞானிகள் அந்த நேரத்தைப் பார்த்து, அந்த காற்றை ஸ்தம்பித்து நிறுத்தி விடுவார்கள்.
அப்ப “ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்" என்பதில், பூரித்தல் என்றால் “பொங்குதல்” என்று அர்த்தம். ஒரு பக்கமாக வரும் காற்று இரண்டு பக்கமாக வரும். ஏனென்றால் அந்த அடைப்பு உடைந்துவிடும்.
ஆக, அந்த காற்றை ஸ்தம்பித்து நிறுத்தினால் இரண்டு பக்கமும் காற்று வந்து விடும். அப்படி வருகின்ற காற்றை வெளியே விடாமல் புருவமத்தியில் ஆசான் ஆசியால் ஞானிகள் செலுத்திவிடுகிறார்கள். அப்படி செலுத்தினால் அந்தக் காற்று வெளியே போகாது. இதை மகான் திருமூலதேவரும் சொல்வார்
இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித் துதிக்கையால் உண்பார்க்குச் சோர்வும் வேண்டாம் உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட் கிறக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே.
- திருமந்திரம் - கேசரி யோகம் - கவி எண் 801.
-16)
14 ஞானத்திருவடி இங்கே துதிக்கை என்பது புருவமத்தி அல்லது சுழிமுனைக் கதவு என்று அர்த்தம். இடக்கை, வலக்கை இரண்டையும் மாற்றி - இரண்டு பக்கமும் வருகின்ற காற்றை ஸ்திரப்படுத்தி, துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாம் - அப்படி செய்தால் அவர்களுக்கு சோர்வு கிடையாது என்பார்.
புருவமத்தி என்று சொல்லப்பட்ட பத்தாம் வாசல் இருக்கிறது என்பதை “ஆறுசமயமும் கண்டவர் கண்டிலர்" ஆக, ஆறு சமயத்தார்களும் இந்தப் பொருளை அறியவில்லை.
துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாம் - புருவமத்தியில் அல்லது சுழிமுனைக்குள் வாசியை இழுக்க முடியாது. ஆகவே கண்டஸ்தானத்தில் காற்றை நிறுத்தி ஸ்தம்பித்தால் அந்தக்காற்று புருவமத்தியை விட்டு போகமுடியாது. மற்ற காற்றெல்லாம் வயிற்றுக்குள் இருக்கு. வயிற்றில் உணவில்லை, எனவே மற்ற காற்றெல்லாம் வயிற்றில் இருக்கும். அந்தக் காற்றை வெளியே விடாமல் ஸ்தம்பிக்கிறான். ஸ்தம்பிக்கும் போது அந்தக் காற்று இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் போகாமல் ஒரே நேராகச் செல்கிறது.
ஆக, இப்படி ஸ்தம்பித்து நிறுத்தி இரண்டு பக்கமும் வருகின்ற காற்றை புருவமத்தியில் நிறுத்தினால் சோர்வு இல்லை, மரணமில்லை.
சரி அப்படி அந்தக் காற்றை நிறுத்தினால் அதற்கு என்ன பொருள்? மோன நிலை என்று பொருள்.
என்னய்யா? இன்று பேசுவதெல்லாம் யோகக் கருத்துக்களாக இருக்கு? தொடர்ந்து ஞானத்தைப் பற்றியே பேசிக்கொண்டு வந்திருக்கிறோம்.
ஞானம் என்பதே மூச்சுக் காற்றைப் பற்றி அறிகின்ற அறிவு என்று அர்த்தம். இப்படியெல்லாம் ஞானிகள் படிக்கட்டு போன்ற அமைப்பை வைத்திருப்பார்கள், அது யோகநெறி.
ஆக, இரண்டு பக்கம் வருகின்ற காற்றை முறைப்படுத்தி ஸ்தம்பித்து புருவமத்தியில் செலுத்தினால், அந்தக் காற்று பத்தாம்வாசலாகிய புருவமத்தியிலிருந்து பிடரிவழியாக மயிரிழை போன்ற ஒரு நரம்பு வழியாகச் சென்று குண்டலியில் தங்கிவிடுகிறது. அதன் மூலமாக அனல் ஏறுகிறது. அந்த க ன ல் ஏறஏற உடல் மாசு நீங்குகிறது. உடல் மாசு நீங்க நீங்க அறிவு தெளிவடைகிறது. உடல் மாசு நீங்க நீங்க, உள்ளம் தெளிவடைகிறது.
உடல் மாசு எது? நாம் சாப்பிடக் கூடிய சத்தே நமக்கு மாசை உண்டு பண்ணுகிறது. மாசை உண்டுபண்ணுவது சத்து. அதற்காக சாப்பிடாமல் இருக்க முடியாது. அப்போ சாப்பிட்டே ஆக வேண்டும். ஆனால் சாப்பிடசாப்பிட உடம்பில் சத்து வருகிறது. அதனால் உடம்புக்கு புஷ்டி அல்லது பலம் கிடைக்கிறது. இதன் மூலமாக சிந்தை தடுமாறுகிறதென உணவை நிறுத்தினால் செத்துப் போவான்.
Ni7)
4 ஞானத்திருவடி அப்ப உணவையும் நிறுத்தக் கூடாது, உயிரையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஆக இப்படி ஒரு இரகசியம் உள்ளது.
வாசியை புருவ மத்தியில் செலுத்துவதால், இந்த சத்து என்று சொல்லப்பட்ட மாசு அல்லது களிம்பு அற்றுப்போகிறது. களிம்பு அற்றுப்போவதற்கு, உள்ளே தோன்றும் அந்த கனலை வகைதொகை அறிந்து ஏற்றுபவர்களுக்குத்தான் அது சித்திக்கும். சமுதாயத்தில் உள்ள உலகமக்கள் எல்லோருக்கும், இப்படி ஒரு வாய்ப்பு இருந்தும் அதை அறியமுடியவில்லை. அப்ப அறியமுடியவில்லை என்பதற்காக, அதை விட்டுவிட முடியுமா?
மனிதன் அடையக்கூடிய லட்சியம் மாசற்ற கொள்கையை மனதில் அடைய வேண்டும் என்றார் மகான் ஒளவையார்.
மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால் ஈசனைக் காட்டு முடம்பு.
- மகான் ஒளவையார் - உடம்பின் பயன் - குறள் எண் 6. அப்ப இந்த உடம்பிற்கு ஈசனைக் காட்டக் கூடிய மாசற்ற ஒரு வாய்ப்பு இருக்கிறது.
உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா முடம்பினி லுத்தமனைக் காண்.
- மகான் ஔவையார் - உடம்பின் பயன் - குறள் எண் 1. ஆக மாசற்ற கொள்கையை அல்லது குற்றமற்ற கொள்கையை மனதில் அடையவேண்டும் என்பதற்காகத்தான் நாம் இங்கே கூடியிருக்கிறோம்.
அப்ப குற்றமற்ற கொள்கையை கடைப்பிடிக்க வேண்டுமென்றால் ஞானிகளின் திருவடியைப் பற்ற வேண்டும். இதைத் தவிர வேறு வழியே இல்லை. ஞானிகளெல்லாம் வல்லவர்கள், கேட்டதை தரக்கூடியவர்கள். அவர்களிடம் மாசற்ற கொள்கை எதுவென்று கேட்கிறோம்.
மாசற்ற கொள்கையே திருவடியைப் பற்றுவதுதான். எந்த அளவிற்கு ஞானிகளின் திருவடியை உருகி பற்றுகின்றானோ, அந்த அளவுக்கு அறிவு தெளிவடையும். அறிவில் தெளிவு ஏது ஐயா? அதுதான் எனக்கு அறிவு மழுங்கி போச்சே, என்றான்.
நாம் சாப்பிடுகிறோம். அது உடம்பிலே சத்தாக இருக்கிறது. அது எந்த வகையான உணவாக இருந்தாலும் சரி, அது சத்து தாளோ, பால், நெய், பழங்களாக இருந்தாலும் சரி அல்லது அசுத்த உணவாகிய அசைவமான புலால் உணவாக இருந்தாலும் சரி, அந்த உணவு உடம்பில் சத்தாக இருக்கும்.
புலால் உணவு உடம்பிலே மிகுந்த வெறியை உண்டாக்கும். புலால் உணவை நிறுத்திவிட்டால் உடனே ஞானியாகிவிட முடியுமா? அதற்காக நாம்
18
4. ஞானத்திருவடி அசைவத்தை சாப்பிடச் சொல்லவில்லை. உயிர்வதை செய்து சாப்பிட்டால் பாவம் சூழும், வினை மேலும் மேலும் சூழும். அதனால் அறிவுக்கு மாசு ஏற்படும். அறிவு மாசுபட்ட ஆன்மாவும் மாசுபடும்.
ஒரு உயிரைக் கொன்று அசைவ உணவான புலாலை(உடம்பை) உண்டால், அந்த உயிர் எந்த அளவிற்கு அல்லற்பட்டதோ, அந்த அளவிற்கு இந்த உயிர்(ஆன்மா) மாசுபடும், அல்லற்பட்டுத்தான் ஆகும். ஆக, இதைத்தான் "கொன்றால் பாவம் தின்றால் தீரும்” என்றார். புலாலை உண்பவர் அல்லற்பட்டே தீரவேண்டும். அதாவது ஒரு உயிரை கொன்றதால் ஏற்பட்ட பாவத்தை அவ்வுயிரை கொன்றவன் அவ்வுயிர்பட்ட துன்பத்தை அனுபவித்தால்தான் தீரும் என்கிறார்.
ஆக புலால் உணவை மறுப்பது ஆன்மீகத்திற்கு இன்றியமையாத சிறந்த கொள்கையாகும். அதனால்தான் நாம் சைவத்தை மேற்கொண்டிருக்கிறோம். எல்லோரும் இதையே சொல்வார்கள்.
ஒரு உயிரைக் கொன்று உண்ணாதே! என்று சொல்வதற்கு என்ன காரணம்? அது உடம்பையும் மாசுபடுத்தும், உயிரையும் மாசுபடுத்தும். அதற்காகத்தான் சொல்கிறோம்.
எனவே தொடு உணர்ச்சியாகிய ஓர் அறிவுள்ள தாவர உண வு சாப்பிடலாம், அப்ப நம்ம வினை நீங்கும். அப்படி சாப்பிடுவது நல்லது.
ஓர் உயிரை கொன்று சாப்பிடக்கூடாது. இதற்கு என்ன காரணம்?
அப்படி சாப்பிட்டால் உடம்பில் ஒரு வகையான சத்து ஏற்படும். புலால் உணவு ஓர் மூர்க்கத்தனமான சத்தை உடம்புக்குள் ஏற்றும். ஆக, புலால் உண்பதை நிறுத்திவிடுவது நல்லது.
இந்த துறையை விரும்புகிற மக்கள் புலால் உணவு உண்பதை நிறுத்திவிட வேண்டும், தொடர்ந்து புலால் உணவு சாப்பிட விரும்புகிற மக்களுக்கு உடம்பு தொடர்ந்து மாசுபடும், அதை உண்பதால் இன்னொரு மிகுதியான சத்து கிடைக்கும். மிகுதியான சத்தினால் அறிவு வேலை செய்யாது.
சரிய்யா, சைவ உணவு சாப்பிட்டால் மட்டும் அறிவு வேலை செய்யுமா? என்றால், அப்பவும் வேலை செய்யாது. கொஞ்சம் கடினத்தன்மை குறையும். மென்மையான அறிவு இருக்கும். உடல் மாசு தீருமா என்றால், அது எப்படி தீரும்? சைவ உணவாக சாப்பிட்டால் மட்டும், அறிவு தெளிவடையுமா? தெளிவடையாது.
அறிவு தெளிவடையணும். அறிவு தெளிவடைவதற்கு ஒரு மார்க்கம் இருக்கு, இப்ப இந்த உடம்பில் என்ன இருக்கு? இந்த உடம்பில் இருக்கும் அறிவு என்ன செய்யும்? இந்த சத்து என்ன செய்யும்?
19)
14 ஞானத்திருவடி " இந்த உடம்பில் இருக்கும் சத்து விகாரமான காமத்தை உண்டுபண்ணும். ஆக, சைவமாக இருந்தாலும் அசைவமாக இருந்தாலும் அது காமத்தை உண்டு பண்ணும். ஒன்றை உறுதியாகப் பற்றி நிற்கமுடியாதவாறு பலஹீனத்தை உண்டு பண்ணும். அதற்காக விட்டுவிட முடியுமா? விட்டுவிட முடியாது. இது உடம்போட இயல்புதான். அதற்காக என்ன செய்வார்கள். இதுபோல் புலால் உணவை மறுத்து, சைவ உணவை மேற்கொண்டு தினம் தினம் தியானம் செய்வார்கள். யாரைக் குறித்து? இதற்கு ஆசான் வள்ளுவர்,
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
- திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் எண் 2. வாலறிவன் - தூய்மையான அறிவுள்ளவன். ஆசான் வள்ளுவர், கற்றதனால் என்ன பயன்? என்று கேட்டார்.
தூய்மையான அறிவுள்ளவனுடைய நல்ல திருவடியை நீ பற்ற வேண்டுமென்று ஆசான் சொல்லிவிட்டார்.
எப்ப தூய்மை வந்தது? நம்மை போல்தான் மாசுடன் இருந்தது. உடல் மாசு நீங்கியதால் அறிவு தெளிந்தது,
அப்ப நல்ல திருவடியை சித்தர்கள் தான் அறிமுகப்படுத்துவார்கள். செத்தவனை அறிமுகப்படுத்த மாட்டார்கள்.
ஆசான் வள்ளுவ பெருமான் சுட்டிக்காட்டுகிறார் என்றால், அது சின்ன விசயம் அல்ல, "வாலறிவன் நற்றாள்” என்றார்.
உடல்மாசு நீங்கியது. அறிவு தெளிவடைந்தது. தூய்மையான அறிவு வந்தது. அப்ப உடல் மாசு நீங்கியதால் அறிவு தெளிவடைந்தது. அறிவு தெளிவடைந்ததால் ஆன்மாவைப் பற்றி அறிந்தான். ஆன்மாவைப் பற்றி அறிந்ததால் ஆன்மாவை வியப்படுத்தினான், ஆன்மா வை லயப்படுத்தியதால் ஒளி தோன்றியது, ஜோதி தோன்றியது. |
தோன்றிய ஒளி, உடம்பா அல்லது உயிரா என்றால் இரண் டுமே சேர்ந்துவிட்டது. அப்ப இதை வாலறிவன் - தூய்மையான அறிவு உள்ளவள் என்று சொன்னார், தூய்மையான அறிவு மாசற்ற உடம்பிலிருந்து வந்தது.
மாசுள்ள உடம்பிலிருந்து தூய்மையான அறிவு வரவே வராது. எண் கணத்திலும் சிந்தனையிலும் தடுமாற்றம் இருக்கும். சிந்தனை தடுமாற்றத்துக்கு காரணம், உடம்பா உணர்ச்சியா என்றால், உடம்புதான்.
உடல்மாசு நீங்கியது அறிவில் தூய்மை வந்தது. எனவே ஆசான் வள்ளுவர் இவர்களை மாசற்றவர்களென்றும் தூய்மையான அறிவு உள்ளவர்களென்றும் அறிமுகப்படுத்துவார்.
120
14. ஞானத்திருவடி உடல்மாசு நீங்கியதால், உயிர் மாசு நீங்கியது. உயிர்மாசு நீங்கியதால் அறிவில் தெளிவு வந்தது. தெளிந்த அறிவுள்ளவன் தான் தூய்மையான அறிவுள்ளவன் என்று அர்த்தம்.
இனி மீண்டும் பிறக்காதவன் என்று அர்த்தம். இனி மீண்டும் பிறக்காதவன் யாரோ? அவனே தூய்மையானவன். “வாலறிவன்” என்ற சொல்லில் உள்ள “வால்” என்ற பகுதிக்கு தூய்மை, தூய்மையானவன் என்று பொருள். எனவே நீ அவர்களை அறிந்து அவர்களுடைய திருவடியைப் பற்ற வேண்டுமென்றார்.
நற்றாள் - நல்ல திருவடி. நல்ல திருவடியைப் பற்றிக்கொள்ள வேண்டுமென்ற அறிவு வந்தால், சிறப்பறிவு வந்தது என்று அர்த்தம். அப்ப நல்ல திருவடி எது என்றால்? மாசற்ற திருவடிதான் நல்ல திருவடி. ஆசான் வள்ளுவர் மாசற்றவர். ஆசான் வள்ளுவபெருமானின் திருவடிதான், நல்ல திருவடி.
நம்மை தோற்றுவித்த இயற்கைதான், நமக்கு மாசை உண்டாக்குகிறது. ஆனால் அதே இயற்கை தோற்றுவித்த உடம்பினுள், பத்தாம் வாசலாகிய புருவமத்தியில் காற்றை செலுத்திவிட்டால், உடல் மாசு நீங்கும். உடல் மாசு நீங்கினால் மூலக்கனல் ஏறும். மூலக்கனல் ஏறினால் மாசு தீரும். மாசு நீங்கினால் அறிவு தெளிவடையும். அறிவு தெளிவடைந்தால் மரணமிலா பெருவாழ்வு கைகூடும்.
மனிதவர்க்கம் மரணமிலா பெருவாழ்வு பெறுவதற்கு வாய்ப்பு இருந்தும் ஏன் அதை அடைய முடியவில்லை? தக்க ஆசான் இல்லாததால் வந்த கேடு. ஆசான் வள்ளுவர் சொன்னது போல், நல்ல திருவடியை அறிந்து, நல்ல திருவடியைப் போற்றுதல் வேண்டும். நற்றாள் தொழாஅர் - நல்ல திருவடியை தொழாவிட்டால் கற்று பயன் என்ன? என்று கேட்பார்.
இப்ப நாம அறிமுகப்படுத்துகின்ற, நம்மால் சொல்லப்பட்ட ஞானிகளெல்லாம் தூய்மையான அறிவுள்ளவர்கள். மகான் திருமூலதேவர், மகான் போகர், ஆசான் கருவூர்தேவர், ஆசான் காலாங்கிநாதர் எல்லோரும் தூய்மையான அறிவுள்ளவர்கள். நாம், தூய்மையான அறிவுடையவர்களின் திருவடியைப் பற்றிக்கொள்ள வேண்டுமென்று சொல்லியிருக்கிறோம். ஆக, இதுபோன்ற தூய்மையான அறிவுள்ளவர்களின் ஆசியில்லாமல் வாசி வசப்படாது, வாசி வசப்படாமல் சோர்வு நீங்காது. எனவே, ஆசான் திருமூலதேவர், “காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக் கூற்றை யுதைக்குங் குறியது வாமே” என்றார்.
காற்றைப் பிடிக்கக் கற்றுக்கொண்டவன் கூற்றை உதைப்பான், மரணத்தை வெல்லுவான் என்பார் ஆசான் திருமூலர். அவனுக்கு கூற்றுவனை வெல்லும் வல்லமையும் உண்டாகும்,
________________________________________
12)
4 ஞானத்திருவடி அப்ப எந்த வகையில் காற்றைப் பிடிப்பது? ஞானிகள் ஆசியில்லாமல் ஒருவனுக்கு வாசி வசப்படாது, மூச்சுக் காற்று லயப்படாது. நாம் இங்கே கூ டி யிருப்பது ஜென்மத்தை கடைத்தேற்றுவதற்குத்தான். மற்ற இடத்தில் பேசுவதெல்லாம் பேச்சல்ல. அதை அப்படி செய்யணும், இதை இப்படி செய்யணும் என்ற கதையெல்லாம் ஆகாது.
ஆக, அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும். ஞானிகள் நல்ல திரு வடியைப் பற்றிக்கொள் என்பார்கள். நல்ல திருவடியை அறிமுகப்படுத்துவார்கள். நாம் இனி பிறக்கக் கூடாது. இதற்காக நாம் வந்திருக்கிறோம்.
பிறவாமை என்ற ஒன்று இருக்கிறது. அதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு முயற்சிக்கிறோம். அந்த முயற்சி இந்த ஜென்மத்தில் கைகூடலாம் அல்லது கைகூடாமலும் போகும். அதற்காக முயற்சியை விடக்கூடாது. பாடுபட்ட அளவிற்கு நிச்சயம் பலனுண்டு. வீண்பாடல்ல இது. என்ன காரணம்?
ஞானிகள் எக்காலத்திலும் இருக்கக் கூடியவர்கள். ஆசான் அகத்தீசரும் ஆசான் திரு மூலதேவரும் எக்காலத்திலும் இருக்கக் கூ டி யவர்கள். கோடானகோடி யுகம் இருக்கக் கூடியவர்கள்.
“யுகம் கோடாகோடி கண்ட மூல நாயன்” என்று மகான் திருமூலதேவரை சொல்வார்கள். அவருடைய நாமத்தை சொல்லி பூஜை செய்தால் இந்த ஜென்மத்தில் கைகூடும், இல்லாவிட்டால் அடுத்த ஜென்மத்தில் கைகூடும். ஒன்றும் குற்றமில்லை. இது விடவே விடாது.
ஆக, ஞானிகள் அத்தனை பேரும் சிறந்த அறிவாளிகள், சிறந்த பக்திமான்கள். அத்தனைபேரும் பக்தி செலுத்திதான் வந்திருக்கிறார்கள். மகான் திருமூலதேவர் "திருவடி யே சிவமாவது தேரில்" என்பார். ஆசான் வள்ளுவப் பெருமானோ “நற்றாள்” என்பார்.
சிவமாவதுதேரில் - ஆராய்ந்து பார்க்க வேண்டும். நாம் இங்கே கூடியிருந்து ஞானிகள் பெருமையை பேசுகிறோம். வாரம் ஒருமுறை பேசுகிறோம், பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். இது எந்த அளவுக்கு நிற்குது மனசிலே? இது சின்ன விசயமல்ல? காலையில் பத்து நிமிடம் நாமம் சொல்வதற்குள் தடுமாறிக் கொண்டிருப்போம். அந்த பத்து நிமிடமாவது முதுபெரும் ஞானிகளை வணங்கிக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் நம்மிடம் இருக்க வேண்டும். எனவே நாமத்தை சொல்லி ஆசி பெற்றுக் கொண்டிருக்கிறோம்.
இந்த காலக்கட்டத்தில்தான் வெகுபேர் தெளிவடைவதற்கு வாய்ப்பு இருக்கு. நாங்கள் அந்த சிவயோகத்தை அறிந்திருக்கிறோம்.
-22
4. ஞானத்திருவடி "சேர்ப்பதுதான் இடைசமனாய் சேர்த்துக் கொண்டால், சிவா சிவா சொல்லரிது செயலைத்தானே” என்றார். அந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருக்கு.
இரண்டு பக்கம் வருகின்ற காற்றை நிறுத்தி புருவமத்தியில் செலுத்தி வைத்திருக்கிறோம், அவ்வாறு செலுத்தப்பட்ட காற்றுக்கு “மோன நிலை” என்று சொல்வார்கள். அதனுடைய விளைவு சிறந்த மரணமிலாப் பெருவாழ்வைத் தரும். அது மர ண மிலாப் பெருவாழ்வை தரக்கூடியது என் பதை நாம் அறிந்ததனால்தான் சொல்கிறோம். இப்படி யெல்லாம் ஒரு வாய்ப்பு இருக்கு. பிடித்து கரையேறிக் கொள்ள வேண்டுமென்றும், நாட்களை வீணாக்கக் கூடாதென்றும் சொல்வார்கள். இப்ப இந்த காலத்தில் நாங்கள் (ஓங்காரக் குடி லாசான்) இருக்கிறோம்,
சிவயோகி ஞானி செறிந்த அத் தேசம் அவயோகம் இன்றி அறிவோருண் டாகும் நவயோகங் கைகூடு நல்லியல் காணும் பவயோகம் இன்றிப் பரலோக மாமே,
- திருமந்திரம் - அடியார் பெருமை - கவி எண் 1882. செறிதல் – தங்குதல், சிவயோகி ஞானி செறிந்த அத் தேசம் - யோகநெறி, ராஜாங்க யோகம், ராஜயோகம் என்று சொல்லுவார்கள். ராஜயோகம் என்பது நொடிப் பொழுதில் வாசி நடத்தித் தருவது என்று பொருள்.
மகான் இராமலிங்க சுவாமிகள் “வாசி நடத்தித் தருவாண்டி, ஒருவாசியில் இங்கே வருவாண்டி” என்பார்.
“சிவயோகி ஞானி செறிந்த அத் தேசம்” என்றார். அப்ப ஆசானுடைய ஆசியினால் வாசி நடத்திக் கொடுக்கப்பட்டது. அதனாலேயே அது சிவயோகம் எனப்பட்டது.
ஆக, சிவதரிசனம் கண்டதனால், நாங்கள் (குருநாதர் ) சிவயோகி. இப்ப நாங்கள் சொல்லுகின்றது உங்களுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும். இதுநாள் வரையிலும் பக்தியைப் பற்றி பேசினோம், பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். இப்ப யோகத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.
ஆசான் ஆசியால் வாசிவசப்பட்ட நான் சிவயோ கிதான். அப்ப இந்த தேசம், “சிவயோகி ஞானி செறிந்த அத் தேசம்”. நாம் இந்த அ ரில் தங்கியிருக்கிறோம். அப்ப இக்காலத்தில் உள்ளவர்கள் எல்லாம் தெளிவடைய வாய்ப்பு இருக்கு,
| “அவயோகம் இன்றி அறிவோருண் டாகும்” என்றார். அவயோகம் என்பது வீணான யோகம், அறிவோர் உண்டாகும் - அறியக் கூடியவர்கள்.
H23)
4 ஞானத்திருவடி அப்ப நாம் பிராணாயாமம் செய்யாதே, பிராணாயாமம் செய்தால் செத்துப் போயிடுவாய் என்று சொல்லுவோம். ஆசானின் ஆசியை நினைத்துக் கொண்டு வா,
முதலில் ஆசானின் ஆசி பெற்றால், அதன் பிறகு வாசி வசப்படும். அவயோகம் யாரும் சொல்ல மாட்டார்கள். யாரும் யோக நெறியைப் பின்பற்ற மாட்டார்கள். உருகி தியானம் செய். என்றைக்கு ஆசான் மனம் மகிழ்கின்றாரோ, அன்று நன்மை நடக்கும் என்று சொல்வோம்.
"நவயோகம் கைகூடும் நல்லியல் காணும்” - நவம் என்பது புதுமை “நவ பாரதம்" என்று சொல்வார்கள். புதிய பாரதம், இளைய பாரதம் என்று சொல்வார்கள். நவயோகம் கைகூடும், நல்லியல் காணும் - புதுமையான தத்துவம் புலப்படும். நல்லியல் காணும் - பெருந்தன்மை உண்டாகும். அப்ப நம்ம அறிவு தெளிவடைந்தால் நல்ல இயல்பு உண்டாகும். இயல்பு என்பதற்கு நல்ல செயல்பாடுகள், நல்ல சிந்தனைகள் என்று அர்த்தம்.
ஆக இந்தக்காலத்தில் இப்படியொரு மார்க்கம் இருக்கு, பெரியோர்களின் ஆசியைப் பெற்றுக் கொள்ளுங்கள், முடிந்த அளவிற்கு அன்ன தானம் செய்யுங்கள். காலத்தை வீண்செய்ய வேண்டாம். இப்படிப்பட்ட கருத்துக்களை நாட்டு மக்களிடம் பரப்புகிறோம். இந்த கருத்து எல்லோருக்கும் புரியாது. புரிகிறமாதிரி இருந்தால் எல்லோரும் வந்துவிட மாட்டார்களா? இது எங்களுக்கும் தெரியும், ஞானிகளுக்கும் தெரியும்.
“கோடியிலே ஒருவனடா குறியைக் காண்பான்” என்றார். கோடியில் ஒருவன்தான் இதை அறிவான். அப்ப கோடியில் ஒருவன்தான் அறிவான் என்றால், நாம் இருக்கக் கூடாதா என்றால் நாமும் இருக்கலாம். கோடான கோடி பேரில் ஒருவன் வருவான், பலபேர் வருவதற்கு வாய்ப்பு இருந்தாலும், இப்படி பையபைய, ஒவ்வொருத்தராக தெளிவடைந்து கொண்டே வருவார்கள். இதற்காகத்தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆக மக்களுக்கு இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பிருக்கு என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் பக்தி நெறியை சொல்வோம். ஆசான் அகத்தியரும் மூச்சுக் காற்றைப் பற்றி சொல்வார். இந்த மூச்சுக் காற்று எங்கேயும் போக முடியாது, அப்படியே சிரசில் நிற்கும் என்பார். தினம் பூஜை செய்யும் மக்களுக்கு இது புலப்படும். இதற்கும் ஒரு பாடல் உண்டு. அந்த பாடலை தெரிந்து கொள்வதற்கு, ஆசி வேண்டும்.
பெட்டியிலே அடைத்துவைத்த பாம்புதன்னைப்
பிடித்தாட்டத் தெரியாமல் புலம்புவார்கள் எட்டிலே இரண்டுவைத்து ஆட்டினாக்கால்
இருபுறமும் ஆடிவர எதிரேயேறும்
4. ஞானத்திருவடி கட்டிற்குள் நில்லாது சிரசிலேறும்
கடைவாசல் சுழிமுனையில் கட்டும்வாசி சுட்டியின் கீழ் திருவாடு துறையைப்பார்க்கில் சூரியனும் சந்திரனும் தோற்றமாமே.
- துறையறி விளக்கம் - 86 பெட்டி என்பது வயிறு. பெட்டியிலே அடைத்து வைத்த பாம்பு. பாம்பு - மூச்சுக்காற்று.
இந்த மூச்சுக் காற்றுக்கு 18 பாஷையிருக்கு. அது இடகலை, பிங்கலை என்றும், கருஞ்சாரை, வெஞ்சாரை என்றும், (கருஞ்சாரை - சந்திரக்கலை, வெஞ்சாரை - சூரியக்கலை) அதற்கு பாம்பு என்ற பொருளும் உண்டு. இந்து, ரவி என்றும் சொல்வார்கள் (இந்து - சந்திரக்கலை, ரவி - சூரியக்கலை).
இங்கே “பெட்டியிலே அடைத்து வைத்த பாம்புதனைப் பிடித்தாட்ட தெரியாமல் புலம்புவார்கள்” என்றார். ஆட்டுதல் என்பது "ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்” என்பதாகும்.
“எட்டிலே இரண்டை வைத்து ஆட்டினாக்கால் இருபுறமும் ஆடிவர எதிரே ஏறும்” என்றார். அப்ப வெளியே காற்றுப்போகாது. வயிற்றில் இருக்கும் காற்றை வெளியே போகாமல் அப்படியே கண்டஸ்தானத்தில் ஸ்தம்பித்து, இப்பக்கமும் அப்பக்கமும் போகாமல் அதை அப்படியே புருவமத்தியிலே செலுத்தணும். அதை நாம் செய்ய முடியாது, ஆசான்தான் செய்ய முடியும்.
எட்டிலே இரண்டை வைத்து ஆட்டினாக்கால் - எட்டு என்பது புருவமத்தி, அகார ஸ்தானம். அகாரம் என்பது புருவ மத்தி. உகார ஸ்தானம் என்பது கண்ட ஸ்தானம். (உகாரம் - இரண்டு) கட்டிற்குள் நில்லாது சிரசில் ஏறும், கடைவாயில் சுழிமுனையில் கட்டும் வாசி என்றார்.
ஸ்தம்பித்த அந்தக் காற்று இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் போகாவிட்டால் என்ன செய்யும்? புருவ மத்தியில் ஏறிவிடும். அது அந்த கட்டிற்குள் நிற்காது எங்கேயாவது மென்மையான பாதை இருக்குமென்றால் அது புருவமத்தியான ஊசிமுனை ஆகும்.
ஆக கண்டஸ்தானத்தில் காற்றை நிறுத்திவிட்டு காற்றை வெளியே போகவிடாமல் புருவமத்தியில் இழுத்து விடுவார்கள். இதுக்கு ஞானிகளின் ஆசி இருக்க வேண்டும்.
"கடைவாயில் சுழிமுனையில் கட்டும் வாசி” என்றார். கடைவாயில் என்றால் மூலாதாரம். “கடைவாயில் சுழிமுனையில் கட்டும் வாசி, சுட்டியின் கீழ் திருவாடு துறையைப் பார்க்கில், சூரியனும் சந்திரனும் தோற்றமாமே" என்கிறார். இதைக் கேட்பதற்கு இலகுவாக இருக்கும். மேலும் மகான் கொங்கண மகரிஷி சொல்வார்.
14 ஞானத்திருவடி வாசிப் பழக்க மறியவேணுமற்று .
மண்டல வீடுகள் கட்டவேணும் நாசி வழிக்கொண்டு யோகமும் வாசியும் நாட்டத்தைப் பாரடி வாலைப்பெண்ணே.
- மகான் கொங்கண நாயனார் - வாலைக்கும்மி- கவி எண் 28. வாசிப் பழக்கம் அறிய வேண்டும். இந்த துறையில் வருகின்ற மக்கள் வாசிப்பழக்கத்தை அறிய ஆசானை கேட்க வேண்டும். ஆசானைக் கேட்டு ஆசிப்பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் “இன்று முதல் நீ பிராணாயாமம் செய், உப்பில்லாமல் சாப்பிடு” என்பார். உப்பில்லாமல் சாப்பிட்டுவா என்றால் அந்த பக்குவம் வந்துவிட்டது என்று அர்த்தம்.
ஆக சாப்பிடாதே என்று ஆசான் சொன்னால், சாப்பிடாமல் இருப்பான். உப்பில்லாமல் சாப்பிடு என்றால் சாப்பிடுவான். கொஞ்சம் கூட அந்த கோட்டிலிருந்து மாறமாட்டான். இப்படி நமக்கு ஆசான் கட்டளை போட்டார்கள்.
உப்பில்லாமல் சாப்பிட துவங்கி வருகின்ற செப்டம்பர் மாதத்தோடு இருபத்தியிரண்டு வருடம் ஆகிறது. உப்பில்லாமல் சாப்பிடுகிறோம். இதற்கிடையில் காலையில் ஆறு மணிக்கு இரண்டு பழம் சாப்பிடணும். தேவையென்றால் மூன்று பழம் வரை சாப்பிடலாம். ஆனால் சாப்பிட முடியாது, வாந்தி வரும்.
பனிரெண்டு மணி நேரம் பட்டினி கிடந்துவிட்டு மாலை ஆறு மணிக்கு மேல் இரண்டு பழம் சாப்பிடு என்றார். பழத்தை பார்த்தாலே நமக்கு வயிற்றெரிச்சலாக இருக்கும். சாப்பிட்டுத்தான் ஆகணும். இன்றோடு 110 நாள் முடிந்து 111 நாளாச்சு. ஆக இந்த 110 நாளுக்கும், இதுதான் உணவு என்றார் ஆசான். அப்படியே இருக்கின்றோம் மாறவில்லை.
ஆக இந்த அறிவு எப்போது வந்தது?
தூய்மையான ஆசான் திருவடியைப் பற்றியதாலும், ஆசான் ஆசியாலும் இந்த வைராக்கியம் வந்தது. காலையில் இரண்டு பழம் சாப்பிட்டோம். அதற்கு பிறகு முப்பது நாழிகைக்கு எந்த உணவும் கிடையாது. பனிரெண்டு மணி நேரம் பட்டினி கிடக்கிறோம்.
இதற்கு முன்பு பச்சரிசி பால் சாதம் உண்டோம். உடம்பு நல்ல திடமாக இருந்தது, இந்த உணவை திடீரென நிறுத்த சொன்னார்கள். அப்படியே நிறுத்தி விட்டோம். இந்த வைராக்கியம் ஆசான் திருவருளால் கிடைத்தது. ஆக நூற்றிபத்து நாட்களாக, ஆசான் உண வில்லை என்று சொல்லிவிட்டார். அப்படியே உணவை நிறுத்தினோம்.
இவ்வளவு பலகீனங்கள் உடலில் இருந்தாலும், இந்த வைர நெஞ்சத்தில், மகான் மஸ்தான் சாகிப் சொன்னது போல், “செத்தாலும் வைத்த அடி
26)
4. ஞானத்திருவடி பின்வாங்காது முன்னேறு தீர மொன்றருள் புரியவும்" என்ற ஒரு வைராக்கியம் உள்ளது. சாவு வரட்டுமே, எல்லோரும் சாவதைப்போல சாவதைவிட இப்படி ஆசான் கட்டளையை சிரமேற்கொண்டு வைராக்கியமாய் இருந்து சாவலாமே. இந்த வைராக்கியம் தலைவன் கொடுத்ததாகும்.
ஆசான் மேல் பக்தி இருக்க வேண்டும். ஆசான் அகத்தீசனையோ, ஆசான் திருமூலதேவரையோ பூஜை செய்ததால் வைராக்கியம் வந்தது, அறிவு வந்தது, ஆற்றல் வந்தது, சொல்வன்மை வந்தது, கல்வி வந்தது, மரணமிலாப் பெருவாழ்வும் வந்தது, பெரும்பேறும் வந்தது.
ஆசான் ஆசியினால் வைராக்கியம் வரும். இன்று முதல் உப்பில்லாமல் சாப்பிடு என்று சொல்லுமளவிற்கு நாம் பக்குவப்படணும். உப்பில்லாமல் சாப்பிடு என்று தலைவன் சொல்ல வேண்டும். “ஏனய்யா, உப்பில்லாமல் சாப்பிட வேண்டும்” என்று கேட்கமாட்டான். இப்படி இருந்தால் பக்குவம் வந்துவிட்டது என்று அர்த்தம். இதை மகான் மஸ்தான் சாகிப், “பக்குவம் அறிந்து எனைப் பக்குவ விசேடனாய்ப் பண்ணி வைத்து அருள் புரியவும்” என்று சொல்வார்.
தேவரீர் திருவடிக்கு ஆளாகவும்
அட்டமா சித்தி தந்து அருள்புரியவும் சித்தர்கணம் எல்லாம் எனக்கு அருள் இரங்கவும்
சித்தம் வைத்து அருள் புரியவும் பாவி அடியேன் செய்த பாவங்களெல்லாம்
பறந்தோட அருள் புரியவும் பக்குவம் அறிந்து எனைப் பக்குவ விசேடனாய்ப்
பண்ணி வைத்து அருள் புரியவும் நாவிட்டு உரைக்க ஒணாச் சோதி நயனத்தூடு
நடனமிட அருள்புரியவும் நம்பினேன் ஐயனே நட்டாற்றில் என் கைகள்
நழுவிடாது அருள்புரியவும் மாவேகமாக மெய்த் தவராஜ சிங்கமே
வரவேண்டும் என்றன் அருகே மாகுணங்குடி வாழும் என் அகத்தீசனே
மவுன தேசிக நாதனே.
- மகான் மஸ்தான் சாகிப் - அகத்தியர் சதகம் - 13வது பாடல். அப்ப பக்குவம் வந்தால் அவர்களே சொல்லுவார்கள். நாம் எல்லோரும் பக்குவவாதியாக மாறவேண்டும். நாமெல்லாம் பக்குவம் அடைந்தவர்களாக மாறவேண்டும் என்பதற்காக இங்கே வந்திருக்கிறோம். பக்குவம் அடைந்தால் ஆசான் தானே வந்து சொல்வார். ஆக இதெல்லாம் ஞானிகளுடைய செயல். நாம்
-27)
4. ஞானத்திருவடி இப்போது பக்தியும், யோகமும் கலந்து பேசிக்கொண்டிருக்கிறோம். பக்குவவாதியாக ஆவதற்கு முயற்சிக்க வேண்டும்.
நாம் வாசி வசப்பட்டிருக்கிறோம். ஆகவே இங்கே (ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்) பேசிக்கொண்டிருக்கிறோம். இல்லையென்றால் நாம் தேவையில்லாத கருத்துக்களைப் பேசிக்கொண்டு, ஏதாவது செய்து கொண்டிருப்போம், மற்றவனையெல்லாம் மடையனாக்கிக் கொண்டிருப்போம்.
அங்கே பூஜை செய், இங்கே பூஜை செய், அந்த குளத்திற்கு போ, இந்த குளத்திற்கு போ, ராமேஸ்வரத்துக்கு போ, அங்கு கடல்ல நீராடு என்பான். ராமேஸ்வரத்துக்கு போய் என்ன செய்யப் போகிறான்?
நமது சித்தர்கள் இதை சொல்லவே மாட்டார்கள். நீ எங்கே போய் என்ன செய்வ? நீ காசிக்கு போனா என்ன? ராமேஸ்வரம் போனா என்ன? எங்கே போய் குளித்தாலும் சோப்பு இல்லையென்றால் அழுக்கு போகாது. அதுவும், கடல் தண்ணீரில் சோப்பு போட்டு குளித்தால் உள்ளதும் போச்சு. சோப்பை மூன்று மணிநேரம் தேய்த்து கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். ஒரு அங்குல அழுக்குக்கூட போகாது.
ஆக எந்த தண் ணீரில் குளித்தாலும் பிறவிப்பிணி தீராது, என்ற இரகசியத்தை அறிந்தவர்கள் சித்தர்கள்.
அப்ப அவர்களெல்லாம் செய்கிறார்களே? செய்துவிட்டு போறான், உன்னையா கேட்டான்? அப்ப ஏனய்யா ராமேஸ்வரம் கடலில் நீராடுறான்? குளிச்சிட்டு போறான், உன்னிடம் கேட்டானா? கடல் நீர் எதற்கு குளிப்பதற்குத்தானே? குடிப்பதற்கு இல்லையே? அப்ப அதையும் குடிக்கிறான் என்றால் நமக்கு என்ன நட்டம்? சித்தர்களெல்லாம் சொல்ல மாட்டாங்க.
சித்தர்கள் அந்த குளத்தில் குளி, இந்த குளத்தில் குளி என்று சொல்ல மாட்டார்கள். அக்னி தீர்த்தம் அப்படி இப்படி என்று மற்றவர்கள் சொல்லிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் சித்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
சித்த தத்துவம் அறிந்தவர்கள் உடம்பையும் உயிரையும் அறிந்தவர்கள், சடங்குகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். .
நாம் இனி பிறக்கக் கூடாது என்பதற்காக பேசிக்கொண்டிருக்கிறோம். புனித நீராடினால் புண்ணியம் வரும் என்று திரு அருட்பாவில் சொல்லி இருக்கிறாரா? அவர் அப்படி சொல்ல மாட்டார். புனித நீராடுவது என்பது வேறு. அது அமிழ்த பானம், திரு அருட்பாவில் கிடையாது. இது ரகசியம். ஆக எந்தக்குளத்தில் குளித்தாலும் பிறவி போகாது. அப்ப பிறவியை தீர்ப்பதற்கு ஒரு தீர்த்தம் இருக்கிறது.
28 )
14 ஞானத்திருவடிமகான் திருமூலர் “உள்ளத்தின் உள்ளே உள பல தீர்த்தங்கள்” என்பார். மனசிலே தீர்த்தங்கள் இருக்கு. அது என்ன தீர்த்தம் என்றால் அதுதான் அமிழ்தபானம். அமிழ்தபானத்தை உண்ணுகிற மக்களுக்கு பிறவி இல்லை. அதுதான் உண்மையான தீர்த்தம். அதைத்தான் தீர்த்தமாடுதல் என்றார். அந்த தீர்த்தம்தான் பிறவிப்பிணிக்கு மருந்தாக இருக்கும். அது நம்முள்ளே இருக்கு, "உள்ளத்தின் உள்ளே - அறிவுதான்.
அப்ப அறிவுடைய மக்கள் அமிழ்தபானம் உண்கிறார்கள். இதெல்லாம் ரகசியந்தான். மகான் இடைக்காடர்,
சாவாது இருந்திடப் பால்கற - சிரம்
தன்னில் இருந்திடும் பால்கற வேவாது இருந்திடப் பால்கற - வெறு
வெட்ட வெளிக்குள்ளே பால்கற.
- மகாள் இடைக்காடர் - பால் கறத்தல் - கவி எண் 107. பால் கற பசுவே பால்கற என்பார். ஆக இப்படியெல்லாம் மனிதருக்குள்ளே அமிழ்தபானம் இருக்கிறது. அடுத்து மகான் திருமூலர் இதை சொல்வார்
உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள் மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப் பள்ள மும் மேடும் பரந்து திரிவரே கள்ள மன முடைக் கல்வியி லோரே.
- மகான் திருமூலர் - தீர்த்த ம் - கவி எண் 509. “உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள், மெள்ளக் குடைந்து நின்று ஆடார் வினைகெட” என்பார். மெள்ளக் குடைதல் - அவசரப்படக் கூடாது என்று அர்த்தம். அவர்களுக்கு என்ன? கவியாக குவியும். கவியா அது? புவியெல்லாம் கவிபாடும் புண்ணியவான்கள்,
அப்ப அவர்கள் மெள்ள குடைந்து நின்று பாடுபடுவார்கள். வினை கெடவேண்டும், அப்ப வாசி வசப்படாமல் வினை கெடாது. எதுய்யா வினையை உண்டுபண் ணும்? உடம்பே வினைதானே? முன் செய்த வினையால்தான் இப்போது உடம்பு எடுத்து நடமாடிக் கொண்டிருக்கிறோம்.
எப்படிப்பட்ட உடம்பை எடுத்திருக்கிறோம்? நச்சுத் தன்மையான உடம்பை எடுத்திருக்கிறோம். இந்த உடம்புதான் வினை. இந்த வினையை நீக்கினால்தான் அமிழ்தம் சுரக்கும்.
ஞானிகள் அத்தனை பேரும், மெள்ளக் குடைந்து நின்றாடார் வினை கெட - இப்படி ஒரு மார்க்கம் இருப்பதை அறிந்தவர்கள்தான், அமிழ்த பானத்தை உண்டவர்கள். அமிழ்த பானத்தை உண்ட மக்கள் வாசி வசப்பட்டவர்களாகத்தான் இருக்க முடியும்.
4. ஞானத்திருவடி பக்தி நெறியால் மட்டுமே வாசி வசப்படும் என்று முன்னமே சொல்லி இருக்கிறோம்.
அடுத்து “பள்ளமும் மேடும் பரந்து திரிவரே” என்பார். மேடு என்பது மலை, பள்ளம் என்பது மடு அல்லது குளம். இவன் என்ன செய்வான்? ஒவ்வொரு குளத்திற்கு போவான், வருவான். மேடு என்பது மலை அருவி. அந்த அருவியில் குளித்தால் புண்ணியம், இந்த அருவியில் குளித்தால் புண்ணியம் என்பான். இதெல்லாம் ஒன்றுமில்லை. எங்கே குளித்தாலும் உடம்பில் சோப்பு போட்டால்தான் அழுக்கு போகும்.
அடுத்ததாக “பள்ளமும் மேடும் பரந்து திரிவரே, கள்ள மனமுடைக் கல்வியி லோரே" என்பார். நீ எதற்காக இவ்வளவு கல்வி கற்றாய் என்றார்? கள்ள மனம் நீங்க ணும் இல்லையா? என்னய்யா இவ்வளவு பெரிய பட்டதாரியாக இருக்கின்றான், கள்ள மனம் மட்டும் நீங்கவில்லை. நெஞ்சத்தில் வஞ்சம் உள்ளது.
சிலர் யாருடைய சொத்தையும் அபகரிக்க மாட்டார்கள். இப்படி இருப்பது ஒரு நல்ல பண்புதான். அதையாரும் மறுக்க முடியாது. ஆனால் “கள்ள மனம்" என்ற ஒன்று இருக்கிறது. அதை நீக்க கல்வி வேண்டுமே. கல்வி கற்பதே கள்ள மனம் நீங்குவதற்கு.
கள்ள மனம் எது? அதுதான் உடல் மாசு. எனவே உடல் மாசு நீங்காமல் கள்ள மனம் தீராது, நீங்காது என்று ஞானிகள் சொல்வார்கள்.
நாம் பக்தி செலுத்துகிறோம், கள்ள மனம் தீரவேண்டும். களங்கம் தீராமல் ஒருவனுக்கு கள்ள மனம் தீராது. உடல் மாசு தீரவேண்டும்.
பக்தி செலுத்துவோம் தொடர்ந்து வருகின்ற பிறவியை உடைத்தெறிவோம். பக்தி செலுத்துவோம் முன்செய்த பாவத்தையெல்லாம் பொடியாக்குவோம். பக்தி செலுத்துவோம் பகுத்தறிவு பெறுவோம்.
பகுத்து ஆராய வேண்டும். பகுத்தறிவு உள்ளவனெல்லாம் வினையை தீர்ப்பான். சிலர் தன்னை பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். அந்த பகுத்தறிவுவாதி வேறு.
இவன் தினமும் பூஜை செய்வான். எந்த குளத்திலும் குளிக்க மாட்டான். குளித்தால் என்ன ஆகிவிடப்போகிறது என்பான். அப்ப குளிக்கக் கூடாது என்று அர்த்தமல்ல. இதை மகான் சிவவாக்கியர் சொல்வார்
அழுக்கறத் தினங்குளித்து அழுக்கறாத மாந்தரே அழுக்கிருந்த அவ்விடம் அழுக்கிலாதது எவ்விடம் அழுக்கிருந்த அவ்விடத்து அழுக்கறுக்க வல்லிரேல் அழுக்கிலாத சோதியோடு அணுகி வாழலாகுமே.
- மகான் சிவவாக்கியர் - கவி எண் 215.
| 30
4. ஞானத்திருவடி அப்ப அழுக்கு இல்லாதது ஜோதி. அழுக்கிருந்தால் ஜோதி வராதென்று அர்த்த ம். மேலும்,
காலைமாலை நீரிலே முழுகும் அந்த மூடர்காள் காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும் காலமே எழுந்திருந்து கண்கள் மூன்றில் ஒன்றினால் | மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி யாகுமே.
- மகான் சிவவாக்கியர் - கவி எண் 132. என்றார் மகான் சிவவாக்கியர்.
அப்ப கள்ள மனம் தீருவதற்கு தினம் பூஜை செய்ய வேண்டுமென்றார். அதற்கு கல்வி வேண்டும். அதனால்தான் “கற்றதனால் ஆய பயன்என்கொல்" என்றார் ஆசான் வள்ளுவப் பெருமான். அவர் ஞானி அல்லவா? அதனால்தான் கற்று என்ன பயன்? என்றார். “கள்ள மனமுடைய கல்வி இலோரே” என்றார். கள்ள மனம் தீரணும், நல்ல மனம் வரணும். கள்ள மனம் எப்போது தீரும்? அதற்கு என்ன உபாயம்?
பட்டமும் கயிறுபோல் பறக்கநின்ற சீவனை பார்வையாலே பார்த்து நீ படுமுடிச்சு போட்டா திட்டவும் படாதடா சீவனை விடாதடா கட்டடா நீ சிக்கெனக் களவறிந்த கள்ளனை.
- மகான் சிவவாக்கியர் - கவி எண் 205, பட்டமும் கயிறு போல பறந்து நின்ற சீவனை பார்வையால் பார்த்து எப்படி ஐயா முடிச்சு போடுவது? எப்படி எங்கே முடிச்சு போடுவது? முடிச்சு போடுவது கையால்தானே முடியும்? இது ஒரு செய்முறை பயிற்சிதானே ஐயா?
நீங்கள் சொல்வது சிந்தனையினால் முடிச்சு போடுவது என்பதாக உள்ளது. ஞானிகளால் மட்டும்தான் பார்வையால் முடிச்சு போடமுடியும். அதுதான் கல்வி என்றார்.
அப்ப ஆன்மா என்பது கயிறு. பட்டம் இருந்தால் கயிறு இருக்க வேண்டும். அப்ப பட்டமும் கயிறு போல பறக்கநின்ற சீவனை, பார்வையால் பார்த்து நீ படு முடிச்சு போட்டா என்றார். பரந்து என்றால் எங்கும் வியாபித்துள்ள சீவன் ஆகும். இப்ப அந்த சீவனை பார்வையால் பார்த்து நீ படுமுடிச்சு போட்டா என்றார். பார்வை என்றால் எப்படிப்பட்ட பார்வை? கூர்பார்வை.
அப்ப கூர்பார்வையை புருவ மத்தியில் செலுத்த வேண்டும். புருவமத்தியில் கூர்பார்வை செலுத்தும்போது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் கட்டப்படும் என்றார். அடுத்து, "திட்டவும் படாதடா சீவனை விடாதடா, கட்டடா நீ சிக்கெனக் களவறிந்த கள்ளனை” என்றார் மகான் சிவவாக்கியர், .

________________________________________
4. ஞானத்திருவடி அப்ப, "கட்டடாநீ சிக்கெனக் களவறிந்த கள்ளனை" என்பதற்கு அந்த இரகசியத்தை அறிந்தவனை நீ பிடித்துக்கொள்ள வேண்டுமென்பதாகும். அங்கே, "கற்றதனால் ஆய பயனென்” என்றார். இங்கே "கட்டடா” என்றார். ஆக இப்படியெல்லாம் ஞானிகள் சொல்லியிருப்பார்கள்.
ஜீவான்மாவும், பரமான்மாவும் ஒன்றுபடுகிற இடம் புருவமத்தி, எங்கும் வியாபித்த ஆன்மாவை புருவமத்தியில் சிறை வைக்கிறான். இது சின்னவிசயம் அல்ல. இதை உனக்கு சொல்லிவிட்டேன். என்னை திட்டிவிடாதே என்பார். அடுத்து இதையே மகான் திருமூல தேவரும் சொல்வார்
அத்தாற் பிறவி யவரிரு கண்களை வைத்தார் நுனிமூக் கின்புரு வத்திடை நித்தார் மங்கே நினைக்கவல் லார்க்கு எத்தாலுஞ் சாவிலை இறையவ னாமே.
-மகான் திருமூலர் - ஞானக்குறி 30 - கவி எண் 5. புருவமத்தியில் கூர்பார்வை செலுத்த வேண்டும். வா சிவசப்பட்ட மக்கள்தான் கூர்பார்வை செலுத்தி பார்க்க வேண்டும். வாசி வசப்படாத மற்றவர்களெல்லாம், கூர்பார்வை செலுத்தினால் கண் கெட்டுப்போகும். இதை மகான் பட்டினத்தாரும்,
மூக்கு முனையை முழித்திருந்து பாராமல் ஆக்கைகெட்டு நானும் அறிவழிந்தேன் பூரணமே.
- மகான் பட்டினத்தார் - பூரணமாலை - கவி எண் 9. ஆக வாசி வசப்பட்டவர்கள் தான் கூர்பார்வை செலுத்துவார்கள். கூர்பார்வை செலுத்தினால் கோடானு கோடி நன்மை உண்டாகும். இதை,
தானென்ற ஞானத்தின் பெருமைகளை தலைகீழாய் பஞ்சாக்கினி இடையில் நின்று கோனென்ற கோடி கற்பகாலம் செய்தபோதிலும் கூறிய அசுவமேத யாகம் நூறு கோடி செய்த போதிலும் தேனென்ற மூவர்க்கு செய்த போதிலும் கோனென்ற ஞான நிஷ்டை செய்தவபலத்துக்கு ஒவ்வாது
-மகான் சிவவாக்கியர் நூறு கோடி யாகம் செய்வதும் ஒன்று, கூர்பார்வை செலுத்துவதும் ஒன்று. எனவே இந்த இரகசியத்தை அறிந்தவர்களை பிடித்துக் கொள், பிடித்துக் கொள் என் பார் மகான் சிவவாக்கியர். அவர் வாக்கியம் சிவவாக்கியம், ஞானிக ளெல்லாம் இப்படிப்பட்ட ஒரு இரகசியத்தை அறிந்திருக்கிறார்கள்,
-32
4 ஞானத்திருவடி) ஜீவான்மாவையும், பரமான்மாவையும் சேர்க்கின்ற இடம் புருவமத்திதான். புருவமத்தியில்தான் ஜீவான்மாவையும் பரமான்மாவையும் சேர்த்து முடிச்சு போடவேண்டும்.
பார்வையாலே பார்த்து படுமுடிச்சு போட வேண்டுமென்று சொல்லி இருக்கிறார். பார்வையாலே பார்த்து எப்படி படுமுடிச்சு போட வேண்டுமென்றால், கூர்பார்வை செலுத்தினால் இந்தக் குறிப்பு உணர்த்தப்படும்.
இது எப்ப புலப்படும் என்றால் தொடர்ந்து பூஜை செய்தால் மட்டும்தான் புலப்படும். தொடர்ந்து பூஜை செய்யாவிட்டால் புலப்படாது. இதைத்தான் கல்வி கற்றதன் பயன் நற்றாள் தொழுதல் என்று சொல்வார்.
எனவே கள்ளமனம் தீரவேண்டும். நல்ல மனம் வரவேண்டும். நல்லமனம் பயிற்சியால் வர முடியுமா? பயிற்சியால் நல்ல மனம் வரமுடியாது. ஏதாவது பண்புள்ளவனாக இருக்கலாம். அது ஒரு பயிற்சிதான். அது பிறவிப்பிணிக்கு மருந்தாகுமோ? ஆகாது என்றார்.
பிறவிப்பிணியை வெல்ல வேண்டும் அல்லவா? பிறவிப்பிணியை வென்றவர்கள்தானே நல்ல மனம் உள்ளவர்கள். "கள்ளமனம் உடையோரே கல்வி இலோரே" கள்ள மனம் தீரவேண்டும், நல்ல மனம் வரவேண்டும். அப்ப பிறவிப்பிணியை வெல்வதற்கு இப்படியெல்லாம் ஞானிகள் சில உபாயங்களை உருவாக்கி இருக்கிறார்கள். பெரியவங்க எல்லாம் ஞானிகளிடம் ஆசி பெற்றுக்கொள்ளுங்கள் என்பார்கள். இதற்கு பக்திதான் முக்கியம். இதை மகான் கடுவெளிச்சித்தர் சொல்வார்
பாரி லுயர்ந்தது பத்தி - அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவருமுத்தி சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ் சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி.
- மகான் கடுவெளிச்சித்தர் அட்டமா சித்தி என்பதற்கு எட்டு என்று அர்த்தம். புருவ மத்தியாகிய அகார ஸ்தானத்தில் வாசி வசப்பட்டால் அட்டமாசித்தி வந்துவிட்டது என்று அர்த்தம். (தமிழ் எழுத்து 'அ' என்பது எட்டைக் குறிக்கும்) அடுத்து, சீரி லுயரட்ட சித்தி, யார்க்குஞ் சித்திக்குமே சிவன் செயலினால் பத்தி” என்றார்.
கடவுள் ஒருவன் இருக்கிறான். அவன் திருவடியைப் பற்றி பூஜை செய்ய வேண்டும்,
அவன் யார்?
எவன் ஒருவன் தன்னை கடந்தானோ, எல்லாவற்றையும் கடந்து வெற்றி பெற்றானோ, அவன் தான் கடவுள். கடந்தவன் கடவுள், கடந்த ஒன்றை உள் ளே கண்டவன் கடவுள்,
4 ஞானத்திருவடி அப்ப கடவுளின் ஆசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரே கடவுள். ஒருவன் தான் கடவுள். இதை "ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு” என்பார் மகான் பட்டினத்தார். எனவே கடவுள் ஒருவன் உண்டு என்று அறியவேண்டும்.
நாம் போகுமிடமெல்லாம் கையெடுத்து வணங்கிவிட்டு போகலாம். அப்படி வணங்கினால் என்ன பயன்? தலைவனை புரிந்து கொண்டுதான், பூஜை செய்ய வேண்டும். அதுதான் முக்கியம்.
அப்ப தலைவனை புரிந்து பூஜை செய்கிறவன் ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்வான். தலைவனை சிவஞானி என்றும் சிவன் என்றும் சொல்வார்கள்.
சிவன் வேறு அவன் வேறு அல்ல, இருவரும் ஒன்று. மேலும் “குருவே சிவமென் று” சொல்வார் திருமூலர், குருதான் சிவம். "ஆசானும் ஈசானும் ஒன்றேயாகும்" என்பார். அப்ப நாம் சுட்டிக்காட்டக் கூடியவர்கள் எல்லாம் சிவன். இதை ஆசான் திருமூலர் சொல்வார்
குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவமென் பதுகுறித் தோரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே யுரையுணர் வற்றதோர் கோவே.
- திருமந்திரம் - சிவகுரு தரிசனம் - கவி எண் 1581. சிவஞானியும் சிவனும் ஒன்றென்று அறிய வேண்டும். அதுதான் தகுமறிவு. இதை ஆசான் வள்ளல்பெருமான் சொல்வார் சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்
தான்என அறிந்த அறிவே தகும் அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே
தனித்தபூ ரணவல்லபம் வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்
விளையவிளை வித்ததொழிலே மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே
வியந்தடைந் துலகம் எல்லாம் மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை
வானவர மேஇன்பமாம் மன்னும்இது நீ பெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
மரபென் றுரைத்தகுருவே தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்தெனைத்
தேற்றி அருள் செய்தசிவமே சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
தெய்வநட ராஜபதியே. - திருஅருட்பா ஆறாம்திருமுறை - நடராஜபதி மாலை - கவி எண் 1369.
H34)
4. ஞானத்திருவடி) சிவபெருமான் மிக்க வல்லமை உள்ள ஆசான். ஆசான் வள்ளல் பெருமானும் சிவபெருமானும் ஒன்று என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். ஆக சிவனும் சிவ ஞானியும் ஒன்று என்றார்கள். மகான் திருமூலதேவரும், மகான் அருணகிரிநாதரும், ஆசான் கடுவெளிச் சித்தரும் சிவனே. இத்தகைய பெரியவர்களிடத்து பக்தி செலுத்த வேண்டும். பக்தி செலுத்தி பெரியோர்களது ஆசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
நம் சங்கத்தில் தொடர்ந்து ஞானிகளைப் பற்றித்தான் பேசிக்கொண்டு வருவோம். மற்ற கதையெல்லாம் வச்சிக்க மாட்டோம். அன்னதானம் செய் என் போம், நாலு பேர், பத்து பேருக்கு அன்னதானம் செய்துவிட்டு வாய்யா என்போம். எங்களுக்கு வறுமை இருக்கு என்பார். ஆசானை பூஜை செய்யசெய்ய செல்வம் பெருகும், செல்வம் பெற்றதன் பயன் அதைக்கொண்டு புண்ணியத்தை தேடிக்கொள்ள வேண்டும். செல்வத்தை மூட்டை கட்டுவதற்கா கொடுத்தான்?
ஆசான் திருவள்ளுவர், “அற்கா இயல்பிற்றுச் செல்வம்” என்றார். நாங்கள் அன்னதானம் செய் என்போம். தினம் தியானம் செய் என்போம். ஞானிகள்தான் கடவுள் என்போம். ஞானிகள்தான் தன்னை வென்றவர்கள்.
எல்லாம்வல்ல இயற்கை நம்மை தோற்றுவித்தது. ஞானிகள் மட்டும் தம்மை தோற்றுவித்த இயற்கையை வென்று கடவுளாகிவிட்டார்கள். இப்படித்தான் பெரியவங்களும் நாங்களும் சொல்லுவோம்.
ஆசான் வள்ளுவர், நிலையில்லாத செல்வத்தை நீ பெற்றிருக்கிறாய். அது நிலையான செல்வம் என்று நீ நினைத்துவிடாதே என்பதை,
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று.
- திருக்குறள் - நிலையாமை - குறள் எண் 332. என்பார். அடுத்த குறளில்,
அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல்,
- திருக்குறள் - நிலையாமை - குறள் எண் 333. செல்வம் என்று சொல்லாமல் பெருஞ்செல்வம் என்றார். “அற்கா இயல்பிற்றுச் செல்வம்" அல்கா என்றால் நிலையில்லாத செல்வம் என்று பொருள். “அல்கா" என்ற சொல்லில் ல் என்பதை ற் என்று சொல்வார்கள். “அற்கா இயல்பிற்றுச் செல்வம்” செல்வத்தின் இயல்பு என்னவென்று கேட்டால், அது நிலையில்லாத ஒன்று. அப்ப என்ன செய்வது? ஆக நிலையில்லாத செல்வத்தைப் பெற்றால் அது வரும்போதே நல்ல காரியத்தை செய்துகொள் என்பார். இதை “அற்குப ஆங்கே செயல்” என்பார்.
35
4 ஞானத்திருவடி நல்ல காரியம் செய்துகொள்பவர்கள், வல்லவர்களாக இருப்பார்கள். இப்ப இதையெல்லாம் எந்த அறிவைக் கொண்டு செய்வது? செல்வம் போனால் திரும்ப வராதே, காசு கைவிட்டுப் போனால் எப்படி கிடைக்கும் என்பான். ஆனால், வல்லவர்களுக்கும், நல்லவர்களுக்கும் செல்வம் போகும், பின்பு அது நிச்சயம் வரும் என்றார். நிச்சயமாக அது கைவிட்டுப் போகாது.
தலைவன் ஆசி இருப்பதால் நிச்சயம் பொருள் சேர்ந்து கொண்டுதான் இருக்கும். பொருள் கைவிட்டுப் போகாது. செலவு செய்ய செய்ய, ஊருகின்ற கேணி, இறைக்க இறைக்க ஊறுவது போல் செல்வம் குறையவே குறையாது. தலைவன் ஆசி இருக்கல்லவா? நிலையில்லாத செல்வத்தை பெற்றபோது, நிலையான தர்மத்தை செய்தால் நிச்சயமாக வறுமை வராது என்பது ஆசானுக்கும் கடவுளுக்கும் தெரியும்.
ஆக நிலையில்லாத செல்வத்தை பெற்றபோதே அன்ன தானம் செய்ய வேண்டும் என்பார், அன்னதானத்தை செய்து புண்ணியத்தை தேடிக்கொள் என்பார்.
புண்ணியத்தை தேடிக்கொள்வதற்கு கையில் காசு இல்லை என்பான். நிச்சயம் வரும், நீ செலவு செய்து வேண்டுமானால் பார். கையைவிட்டு போகுமா என்ன? ஆசி இல்லாமல் ஒருவனுக்கு செல்வம் பெருகாது. ஆசி வரும் போது பொருளும் வந்துவிடும், அருளும் வந்துவிடும். அருள் வந்த உடனேயே பொருளும் வந்துவிடும்,
பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம் பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம் பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே.
- திருமந்திரம் - அருளுடைமையின் ஞானம் வருதல் - கவி எண் 1645. தினமும் பூஜை செய்கிறவர்களுக்கு நிச்சயம் வறுமை நீங்கும், செல்வம் பெருகும்.
எனவே, மகான் திருமூலதேவர், போகமகாரிஷி, ஆசான் அகத்தீசர் போன்ற ஞானிகளை பூஜை செய்தால் நிச்சயம் நல்ல செல்வம் பெருகத்தான் செய்யும்.
“என்னய்யா, நாங்களெல்லாம் பத்து வருடம் பூஜை செய்கிறோம். எங்களுக்கு செல்வம் பெருகவில்லை” என்றான்.
இன்னும் அந்த நேரம் உனக்கு வரவில்லை. நேரம் வந்தால் ஞானிகள் செல்வம் தராமல் இருப்பார்களா? வந்து குவித்துவிட்டு போய்விடுவார்கள். ஒன்று போட்டால் ஒன்பதாக வந்து குவிந்துவிடும்.
தலைவன் ஆசி வந்துவிட்டது என்று அர்த்தம். அதுவரை நாம் பாடுபட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும்.
=36)
4 ஞானத்திருவடி) எங்களுக்கு இல்லை என்ற பேச்சே இல்லை. ஆரம்பத்தில் நான்கு பேருக்கு, ஹோட்டலில்தான் நாங்க சாப்பாடு வாங்கி தருவோம். இப்ப நான்கு பேர் என்ன, நாற்பது பேர் என்ன, நானூறு பேர் என்ன, நாலாயிரம் பேர் என்ன, ஆக எவ்வளவு மக்கள் வந்தாலும் தடைபடாமல் அன்னதானம் செய்யலாம். எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆக “பிரான் அருள் உண்டு, தலைவன் ஆசி இருக்கு.
பிரான் என்றால் ஒருவனே தலைவன் என்று பொருள். ஆசான் ஞானபண்டிதன் ஆசி பெற்ற திருமூலதேவரையும், அகத்தீசரையும் மற்ற ஞானிகளையும் தொடர்ந்து வணங்கினோம் நல்ல செல்வத்தை தந்தார்கள். நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்குதான் நல்ல செல்வத்தை தந்திருக்கிறார்கள்.
ஆக நம்மிடம் உள்ள செல்வம் அள்ள அள்ள குறையாது. காமதேனுவும், கற்பக விருட்சமும் நம்மிடம் இருக்கு. அட்சய பாத்திரமும் இருக்கு, அச்சத்தை தீர்க்கும் அட்சய பாத்திரம்.
காமதேனு என்பது நினைத்ததெல்லாம் தரக்கூடிய மருந்து. காமம் என்றால் விருப்பம் என்று அர்த்தம். விரும்புவதெல்லாம் கொடுப்பதுதான் காமதேனு. கற்பக விருட்சம் என்றாலே, அமிழ்த பானத்தால் தோன்றிய கற்பகம். அமிழ்த பானத்தால் தோன்றிய விருட்சம். அமிழ்த பானத்தை உண்ட மக்களுடைய ஆசியினால் வந்த விருட்சம். கேட்டதெல்லாம் தரும். இதை திருமூலதேவர் “பிரான் அருள் உண்டெனில் உண்டு நற்செல்வம்” என்பார். நல்ல செல்வத்தைப் பெற்றவர்கள் எல்லாம் வல்லவர்கள், நல்ல காரியத்தைச் செய்து கொள்வார்கள். ஆசான் வள்ளுவரும் இதை செய்து கொண்டவர்தான்
அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல்.
- திருக்குறள் - நிலையாமை - குறள் எண் 333. செல்வம் வந்தபோதே நல்ல காரியத்தைச் செய்துகொள். நிலையில்லாத செல்வம் வந்தால், நிலையான காரியத்தை செய்துகொள் என்பார்.
நிலையில்லாத வாழ்க்கையை பெற்றிருக்கிறோம். செல்வமும் அப்படித்தான். செல்வம் வரும், போகும். நீ மட்டும் எப்படி இருப்பாய்? நீ மட்டும் இருக்க முடியுமா?
நெருநல் உளன்ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ் வுலகு.
- திருக்குறள் - நிலையாமை - குறள் எண் 336. நேற்று நல்லபடியாக இருந்த ஒருவன் இன்று செத்துப்போய்விட்டான் என்பது உலகத்து இயல்பு. இப்படி பெரும்பான்மையாக உலகில் பேசப்படுகிறது என்று வள்ளுவப் பெருமான் சொல்லிவிட்டார். அடுத்து
H37)
4 ஞானத்திருவடி) அன்று.அறிவாம் என்னாது அறஞ்செய்க மற்று.அது பொன்றும்கால் பொன்றாத் துணை.
- திருக்குறள் - அறன் வலியுறுத்தல் - குறள் எண் 36. என்பார். வள்ளுவர் எல்லாம் அறிந்தவரில்லையா? இப்ப நாம் இளமையாக இருக்கிறோம். இளமை இருக்கிறது, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்காதே, நேற்று நல்லபடியாக இருந்தான், இன்று செத்துப்போய்விட்டான் என்றார்.
ஆக, அந்த குறளுக்கு விளக்கத்தை பார்ப்போம். நெருநல் - நேற்று நல்லபடியாக இருந்தான், உளன் ஒருவன் - இருக்கக் கூடிய ஒருவன். ஏன் ஆண் பாலைச் சொன்னார் என்றால் சமுதாயத்தில் செயல்படுபவர்களில் ஆண் மக்களைத்தான் அதிகமாகப் பார்க்க முடியும். எனவே, நேற்று நல்லபடியாக இருந்த ஒருவன் இன்று இல்லை என்பது உலக இயல்பாக இருக்கும்போது, நீ என்ன செய்ய வேண்டும்? நல்ல காரியத்தை இப்பொழுதே செய்து கொள்ள வேண்டும் என்பார் ஆசான் வள்ளுவப் பெருமான்.
ஆன் மாவை கடைத்தேற்றிக் கொள்பவர்களுக்காக சொல்லப்பட்ட அறிவுரையாகும். ஆன்ம ஜெயம் பெற்றவர்களுக்கு ஆசான் வள்ளுவப் பெருமான் அள்ளித்தந்த கருத்துகள் இவை.
அன்றறிவாம் - இப்போது நாம் இளமையாக இருக்கிறோம், பிறகு முதுமை வந்த காலத்தில் தர்மம் செய்து கொள்ளலாம் என்று நினைக்காதே என்பதை அன்றறிவாம் என்னாது அறம் செய்க - காலத்திலேயே அறப்பணி செய்துகொள் என்பார். ஏன் செய்ய வேண்டும்? என்று கேட்டால், அது ஆன்மாவுக்கு ஆக்கம் தரும் என்றார். ஆன்மாவுக்கு ஆதாயம் வேண்டும். இதை,
ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.
- திருக்குறள் - புகழ் - குறள் எண் 231. ஊ தியம் என்றால் ஆதாயம் அல்லது லாபம். நிச்சயம் நமக்கு நலிவு வரத்தான் செய்யும், நமக்கு நலிவு வந்தாலும் நாம் செய்த புண்ணியம் நமக்கு இதுவரை துணையாக இருக்கும், பிறவிப்பிணிக்கு மருந்து அறிந்தவர் ஆசான் வள்ளுவப்பெருமான்,
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்.
- திருக்குறள் - நிலையாமை - குறள் எண் 335. “நாச்செற்று" - நா அடங்கத்தான் போகிறது. “விக்குள்” வரத்தான் போகிறது. சிலருக்கு மூலாதாரத்தில் உஷ்ணம் வந்தால் விக்கல் வரும். மூச்சு திணறலினாலும் விக்கல் வரும். )
38 )
14 ஞானத்திருவடிஆகவே, நல்ல காரியத்தை விரைவாக செய்து கொள்ள வேண்டும். நா அடங்கத்தான் போகிறது. அதாவது சாவு வரத்தான் போகிறது. நீ சாகத்தான் போகிறாய், எனவே நல்ல காரியத்தை விரைந்து செய்துகொள் என்றார், ஆசான் வள்ளுவ பெருமான். அவர் ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொண்டவர். நாம் ஜென்மத்தை கடைத்தேற்ற வேண்டும் என்பதற்காக இதையெல்லாம் சொல்லியிருக்கிறார்,
ஆக பொருளாதாரம் உள்ளபோதே அன் ன தா னத்தை செய்து கொள்ளுங்கள் என்று சொன்னதன் நோக்கம், வாய்ப்பு கிடைக்கின்ற போதே, நல்லது செய்துகொள்ள வேண்டும்.
இப்போது வறுமை இருக்கு, என்ன செய்வது? இப்போது வேண்டாம், செல்வம் பெருகும்போது நல்ல காரியத்தை செய்துகொள். சரி இப்போது வறுமை இருக்கிறது, அந்த உண்மை எங்களுக்கும் தெரியும், செல்வம் உனக்கு பெருகும்போது ஏன் செய்யவில்லை என்றார். அப்போதாவது செய்து கொள்ள வேண்டும் அல்லவா? அப்போது உனக்கு அறிவு வேலை செய்யாது.
முன்பு நீ பொல்லாத வறுமைக்குட்பட்டு இருந்தாய், அப்பொழுது செய்யவில்லை, அது நியாயம். இப்ப நாலு காசு இருக்கே அறத்தை செய்துகொள் என்றார். ஆக இதையெல்லாம் சொல்லித்தரணும். மனைவி இருக்கு, மக்கள் இருக்கு, என்னால் எதுவும் செய்ய முடியாது என்பான். இப்படி சொன்னால் சனியன் பிடிக்கப்போகுது என்று அர்த்தம், எது சொன்னாலும் கேட்க மாட்டான். அட, மனைவி மக்கள் இருந்தாலும், செல்வத்தை தலைவன் கொடுக்க ஆரம்பித்துவிட்டான் இல்லையா? இனிமேல் நிறுத்துவானா? மனைவிக்கு சோறு போடு, பிள்ளைகளுக்கு சோறு போடு, நீயும் சாப்பிடு, ஏழைகளுக்கு சோறு போடு. இந்த அறிவு வேண்டும். இந்த அறிவு வருவதற்கு நாங்கள் சொல்லித்தரணும். |
பொல்லாத வறுமையில் இருந்தான், குடிசையில் வாழ்ந்தான். தினம் தினம் உருகி தியானம் செய்கிறான். இதை கடவுள் பார்த்தான், இவன் வறுமையை தீர்த்தான், கடன் சுமையை தீர்த்தான், கடன் சுமையை தீர்த்து செல்வமும் தந்திருக்கிறான், செல்வத்தை எதற்கு தந்திருக்கிறான்? நீ புண் ணியத்தை தேடிக்கொள்ள வேண்டும் என்பதற்காக செல்வத்தை கொடுத்தான்.
ஆக கடவுள் செல்வத்தை கொடுத்ததன் நோக்கமே, புண்ணியத்தை செய்வதற்குதான். இவன் என்ன செய்கிறான்? பழையதை நினைக்கிறான். அப்ப முன்பு கூரை வீட்டிலிருந்து கஷ்டப்பட்டோம், பிறகு வாடகை வீட்டில் இருந்தோம், பிறகு ஒரு ஓட்டு வீடு கட்டுவான், அப்புறம் கான்கிரீட் வீடு கட்ட வேண்டும் என்பான், எல்லாமே தீர்ந்து போச்சு. அதற்குள் ஆயுள் போயிடும். இப்படியெல்லாம் கற்பனை செய்து, கடைசியில் மூச்சை விட்டுவிடுவான்.
-39)
14 ஞானத்திருவடி செல்வம் வந்தது, கடவுள் உனக்கு கொடுத்தான். அந்த செல்வத்தை வைத்து என்ன செய்தான்? நல்ல காரியம் எதுவும் செய்யாமலேயே மூச்சை விட்டுவிட்டான். அதற்கு நாம சொல்லித்தரணும்,
கடவுள் உனக்கு செல்வத்தை கொடுத்ததே புண்ணியம் செய்து கொள்வதற்காகத்தான், பேங்கில் போட்டு கணக்கு பார்ப்பதற்கா? அதற்கெல்லாம் இல்லை, நல்ல காரியத்தை செய்து கொள்ள வேண்டும், அன்னதானம் செய்ய வேண்டும். இதை நாம் சொல்லித்தரணும்.
அன்னதானம் எதற்கு செய்யவேண்டும், ஜென்மத்தை கடைத்தேற்ற துணையாக இருக்கும், இதை மகான் திருவள்ளுவர் சொல்வார்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன் பெற்றான் பொருள்வைப் புழி.
- திருக்குறள் - ஈகை - குறள் எண் 226. வைப்புழி என்றால் இடம், வங்கி, ஏழைகளின் வயிறுதான் வங்கி என்று சொன்னவர் ஆசான் திருவள்ளுவ பெருமான். பொருளை வைக்கக்கூடிய இடம் ஏழைகளின் வயிறு என்று சொல்லிவிட்டார்.
ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும், செல்வத்தை பெற்றவர்கள் ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும். ஏழைகளின் வயிறுதான் சேமிப்பு கிடங்கு என்று சொன்னார். இப்படி சொன்னதன் நோக்கம், வறுமை நீங்கி செல்வம் வந்தபோதே நற்காரியத்தை செய்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்,
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று.
- திருக்குறள் - நிலையாமை - குறள் எண் 332. குழாத் தற்றே என்பதில் அற்றே என்றால் போன்று என்று அர்த்தம். பெருங்கடித்தாடுகின்ற இடத்தில், பெருங்கூட்டம் கூடுவது போல பெருஞ்செல்வம் இருக்கும் என்றார், பெருஞ்செல்வம் போக்கும் அது விளிந்தற்று - அதுபோல உனக்கு வந்த செல்வம் வந்த வழியாகவே போய்க்கொண்டே இருக்கும் என்றார். இதெல்லாம் ஆசான் வள்ளுவ பெருமான் எதற்கு சொல்லியிருக்கிறார் என்றால், அவரவர்கள் வறுமையிலிருந்து விடுபட்டு செல்வம் பெருகும்போது அறப்பணி செய்து கொள்ளுங்கள் என்பதற்காகத்தான்.
பொல்லாத வறுமையில் இருக்கும்போது தேவையில்லை, வறுமை நீங்கி செல்வம் பெருகும்போது அறப்பணிகள் செய்து கொள்ளுங்கள் என்பது ஆசான் வள்ளுவர் வாக்கு.
ஆகவே, நிலையில்லாத வாழ்வை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அதை நன்கு பயன்படுத்தி கொள்ளுங்கள் என்பார் ஆசான் வள்ளுவ பெருமான். அவருடைய
140
15 ஞானத்திருவடி தாள் நற்றாள், (நல்ல திருவடி) தூய்மையான அறிவுள்ளவர் ஆசான் வள்ளுவ பெருமான்.
நாம் இந்த சங்கத்தின் சார்பாக (ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்) தானத்தைப் பற்றியும், தியானத்தைப் பற்றியும் பேசி வருகிறோம். தானம், தியானம் பற்றி பேசுகிறவர்கள் நிச்சயமாக தவறான பாதை காட்டமாட்டார்கள். இதை "சிவயோகி ஞானி செறிந்த அத்தேசம்” என்றார் ஆசான் திருமூலதேவர்.
நாங்கள் சிவயோகிகள், நாங்கள் சிவயோகம் பெறுவதற்கு என்ன செய்தோம்? ராமேஸ்வரம் கடலில் முழ்கினோமா? காலை நான்கு மணி அல்லது ஐந்து மணிக்கு எழுந்துபோய் குளிரில் குளித்துக்கொண்டு இருந்தோமா? காலை நான்கு மணிக்கு போய் குளிப்பான். கார்த்திகை, மார்கழி மாதங்களில் காலை நான்கு மணிக்கு குளிரில் குளித்துப் பார்த்தால்தான் கஷ்டம் தெரியும். அவன் தலையெழுத்து அவன் குளிக்கிறான். நாம் வெந்நீர் வைத்து சுகமாக குளிப்போம். மார்கழி மாதம் நான்கு மணிக்கு எழுந்தால் வெந்நீர் வைத்து குளி. பச்சை தண்ணீரில் குளித்து பழகியிருந்தால் குளித்துக்கொள். போய் முட்டிகிட்டு கிடக்காதே. கைகாலெல்லாம் குளிரில் உதறிகிட்டு கிடப்பான். இதுதான் பக்தி என்றான்.
என்ன பக்தி இது? யாரோ குளிக்கிறான் உனக்கு இது தேவை இல்லை. அதைப்பார்த்து நீ போய் கார்த்திகை மாதத்தில் குளிர்ந்த தண்ணீரில் குளித்துவிட்டு முட்டிகிட்டு கிடக்காதே. குளிக்க வேண்டும் என்று ஆசை இருந்தால், நல்ல வெந்நீர் வைத்து குளி, நல்ல ஆரோக்கியமாக குளி. அதுவும் நல்ல தண்ணீராக பார்த்து குளி.
ஆற்றிலும் குளத்திலும் போய் குளித்து கைகால் உதறி சளி பிடிக்கவும், நோய் வருவதற்குமா குளிக்க வேண்டும்? இப்படி குளிப்பதால் எந்த பயனும் இல்லை. இதற்கு குளிக்கக் கூடாது என்று அர்த்தமல்ல. இதையெல்லாம் எதற்கு சொல்கிறோம் என்றால் இதெல்லாம் ஒரு சாங்கியம். காலையில் 5 மணிக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உடல் ஆரோக்கியத்திற்காக பத்து நிமிடம் தியானம் செய்கிறோம். அதற்காக பச்சைத் தண்ணீரில் குளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை . .
கடவுளை அடைவதற்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் தடைகளும் இல்லை. கால்நடையாக போக வேண்டிய அவசியமில்லை. பழனிக்கு நடந்து போக வேண்டிய அவசியமில்லை. பழனிக்கு ஏனய்யா நடந்து போகணும். சொகுசு பஸ்ஸில் போயிட்டு வாய்யா,
நாங்கள் பழனிக்கு போயிருக்கிறோம். திருப்பதிக்கு போயிருக்கிறோம். திருப்பதியில் ஆசான் கொங்கண மகரிஷி அடக்கம். பழனியில் மகான் போக மகரிஷி அடக்கம். ஆசான் ஞான பண்டிதனை கும்பிட வேண்டும். ஆண்டுக்கு


14. ஞானத்திருவடி ஒருமுறை இப்படி போயிட்டு வரவேண்டும். இப்படி போயிட்டு வருவதால் பெரிய லாபம் இல்லை, குற்றமும் இல்லை. பகுத்தறிவு உள்ளவராக இருக்க வேண்டும். தான தர்மம், அன்ன தானம் செய்ய வேண்டும். பொருள் ஈட்டும்போது நெறிக்குட்பட்டு சேர்க்கனும், பெரியோர்களின் ஆசி பெறவேண்டும். அன்னதானம் செய்வதால் செல்வம் பெருகும்.
ஆசானிடம், அன்ன தானம் செய்யவேண்டும் ஐயா, அடியேனுக்கு செல்வ நிலை பெருகவேண்டும், ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ள வனாக வாழவேண்டும் என்று கேட்கிறான். பொல்லாத வறுமையிலிருந்து விடுபட வேண்டும், கடன் சுமையிலிருந்து விடுபட வேண்டும், எனக்கு நீர்தான் அருள் செய்ய வேண்டும் என்று கேட்கிறான்.
ஆக செல்வநிலை பெருகவேண்டும் என்று கேட்டான், ஏழை எளிய மக்களுக்கு பயன் உள்ளவனாக வாழவேண்டும் என்று கேட்டான். செல்வத்தை அள்ளி அள்ளி கொடுக்கிறான், கேட்பது யாரை கேட்கிறாய்? அழைக்கும் போதே அஞ்சேல் என்பான். “நினைப்பதற்கு முன்பாக நிற்கும் ஐயன்” என்றார்.
இப்படியெல்லாம் ஆசானை கேட்கிறான் “என்னப்பா தினம் தினம் பூஜை செய்கிறேன் தொட்டது துலங்கவில்லை ஐயா, நான் ஐந்து, ஆறு, பத்து வருடம் உருகி தியானம் செய்கிறேனோ இல்லையோ எனக்கு தெரியாது. நாமத்தை சொல்கிறேன் அல்லவா? திருமூலதேவா என்கிறேன் கருவூர் தேவா என் கிறேன், இராமலிங்கசுவாமி என்கிறேன், மாணிக்கவாசகா என்கிறேன். இப்படியெல்லாம் சொல்லி எனக்கு இன்னும் வறுமை தீரவில்லை என்கிறான்.
ஆசான் விட்டுவிடுவானா? கைவிடுவானா? ஆசான் பத்து வருடம் பார்த்துக்கொண்டு இருப்பார். இவன் போன ஜென்மத்தில் ஏழை எளிய மக்களை கசக்கி பிழிந்தவன், இப்போ செல்வம் வேண்டுமென்று, உருகி கேட்கிறான், அறியாமையின் காரணமாக ஏழை எளிய மக்களை கசக்கி பிழிந்து செல்வத்தை சேர்த்தவன். அறியாமை காரணமாக அளவு கடந்து வட்டி வாங்கி, வட்டி மேல் வட்டி போட்டு ஊர் பணத்தை கொள்ளை அடித்தவன் அதனால் அவனுக்கு இப்ப பொல்லாத வறுமை இருக்கு.
நோய் சூழ்ந்து விட்டது, ஆனாலும் இவன் இப்ப நம்மை கும்பிடுகிறான். இவன் யோக்கிதை என்னவென்று கேட்பான். அடேயப்பா! முன் ஜென்மத்தில் இந்த காசு மேல் இருந்த வெறி அந்த காசை எப்படியும் சேர்க்கணும், பெரும் பணக்காரனாக ஆக வேண்டுமென்று சேர்த்தாயல்லவா? எவ்வளவு பேர் வாழ்க்கையைப் பாழ்படுத்தி இருப்பாய்? ஐயாயிரம் ரூபாய் கொடுத்து பத்தாயிரத்துக்கு எழுதி வாங்கி இருப்பாய் அல்லவா? எத்தனை பேர் வாழ்க்கையை பாழ்படுத்தி இருப்பாய்? இது போல் சொத்தை சேர்த்தால் உனது அறிவு வேலை செய்யாது.
-42
4. ஞானத்திருவடி ஏழை எளியவர்களுக்கு பணத்தைக் கொடுப்பான், பிறகு வாய்ப்பு வரும்போது ஆயிரம், இரண்டாயிரத்தை கொடுத்து அவன் பாட்டுக்கு கணக்கை ஏற்றி போட்டுவிடுவான். ஜப்தி நடவடிக்கை எடுப்பான். ஜப்தி செய்து அவன் குடும்பத்தை தெருவில் நிற்க வைத்துவிடுவான். அப்ப அவன் அழுவான். நான் என்ன செய்வேன்? என்று தலையில் அடித்துக் கொள்வான். அப்படி ஏழைகளை ஏமாற்றிய இவன் போய் கடவுளை கேட்கிறான் நான் உன் திருவடியை பற்றினேனே, திருமூலதேவா என்றேன், போகமகாரிஷி என்றேன், நந்தீசா என்றேன், உன்னை நாவார் போற்றி புகழ்ந்தேன் என்றான். ஆசான் பழைய வரவு செலவை பார்த்தார், பழைய வரவு செலவை பார்க்கும் போது அவன் யோக்கிதை தெரிகிறது.
இப்போது கேட்கிறாயடா அன்றைக்கு என்னை கேட்டாயா? நான் பாவம் செய்யாதிருக்க வேண்டுமென்று, இந்த பொருளாதாரத்தில் இருக் கிற பலவீனத்தை உணரவேண்டுமென்று. நீ முன் ஜென்மத்தில் பொருளாதாரத்தின் இயல்பு என்னவென்று என்னை கேட்டிருக்க வேண்டும். கேட்டிருந்தால் நான் சொல்லி இருப்பேன். இது பலஹீனமானது, இந்த பொருள் நிலையில்லாதது என நான் உனக்கு உணர்த்தி இருப்பேன்.
பெற்ற இந்த பொருளை பெரும் வாய்ப்பாக கருதி லட்சாதிபதி ஆகவேண்டும், கோடீஸ்வரனாக வேண்டும் என்று குவித்தாயே எத்தனை பேர் அல்லல் பட்டிருப்பான் என்று உனக்கு தெரியாது. உன்னுடைய அறிவு மாதபட்டதற்கும், இவ்வளவு பொல்லாத வறுமைக்கும், நோய்க்கும் பகுத்தறிவு இல்லாமல் போனதற்கும் உன்னுடைய பேராசைதான் காரணம். பேராசையின் காரணமாகத்தான் உன் அறிவு மழுங்கி போயிற்று. நீ செய்த கொடுமை எங்களுக்கு தெரியும் அல்லவா? இந்த ஜென்மத்தில் வறுமையில் இருந்து விடுபட வேண்டும் என்று கேட்கிறாய், உன் வரவு செலவை நாங்கள் (ஞானிகள்) பார்க்கிறோம், உன் வரவு செலவு யோக்கிதை எங்களுக்கு தெரியும்,
உன் வரவு செலவை பார்த்திருக்கிறேன், நீ இப்ப கண்ணீர் விட்டு பொருள் வேண்டும் என்று கேட்டால் நாங்கள் அள்ளி கொடுத்து விடுவோமா? அதையெல்லாம் ஞானிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். வறுமையில் உழன்று போராடுவான். இந்த ஜென்மமே அப்படித்தான் கிடக்க வேண்டும். இந்த பேராசை காரண மாக எத்தனை பேருடைய வாழ்வை பாழ்படுத்தி இருப்பாய்? எத்தனை பேருடைய வீட்டை ஜப்தி செய்து அவன் குடும்பத்தை எல்லாம் பாழ்படுத்தி இருக்கிறாய். அவனுடைய மனைவி தலைவிரி கோலமாக நின்று அழுதாள் அல்லவா, கொஞ்சமாவது கருணை காட்டினாயா? சிறிதும் கருணை காட்டாத உனக்கு யாரடா அருள் செய்வான்?
4 ஞானத்திருவடி) இப்போது பொருள் வேண்டும் என்றும், அருள் வேண்டும் என்றும் ஆற்றல் வேண் டும் என்றும் கேட்கிறான். என்ன உனக்கு சும்மா அள்ளி கொடுப்போமோ? வரவு செலவு தெரியுமல்லவா எங்களுக்கு? இந்த ஜென்மம் எடுத்திருக்கிறாய், எங்கள் நாமத்தை சொல்வதற்கே நீ புண்ணியம் செய்திருக்கிறாய், இந்த புண்ணியம் ஏதோ தக்க ஆசானிடம் கேட்டதால்தான் இந்த வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. தக்க ஆசான் உபதேசம் செய்திருக்கிறான்.
ஒரு முறை “ஒம் திருமூல தேவா” என்று சொன்னால் ஈரேழு பதினான்கு உலகமும் கிடுகிடுவென நடுங்கக்கூடிய வல்லமை எங்களுக்கு உண்டு. அது மகான் போகமகாரிஷிக்கு உண்டு. மகான் திருமூலதேவருக்கு உண்டு, மகான் கொங்கண மகரிஷிக்கு உண்டு. மகான் சுந்தரானந்தருக்கு உண்டு. ஆக இத்தனை பேரும் இருந்து என்ன செய்வாய்? அவனுக்கு கடன் சுமை இருக்கட்டும் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று ஞானிகள் சொல்லிவிடுவார்கள். அல்லல்படு, துன்பப்படு என்று விட்டு விடுவார்கள்.
அடியேன் நெறிக்குட்பட்டு வாழ வேண்டும் என்று கேட்டாயா? போன ஜென்மத்தில் கேட்பதற்கு உனக்கு அறிவு வந்ததா? போன ஜென்மத்தில் கேட்க உனக்கு வாய்ப்பு இல்லை.
இப்போது கேட்கிறாய் அடியேன் நெறிக்குட்பட்டு வாழவேண்டும், அடி யேன் பொய் பேசாதிருக்க வேண்டும், அடியேன் மனிதாபிமானமுள்ளவனாக இருக்க வேண்டும், அடியேன் ஜீவதயவுள்ளவனாக இருக்க வேண்டும். உன் திருவடியைப் பற்ற வாய்ப்பு தரவேண்டுமென்று இந்த ஜென்மத்தில் கேட்கிறாய்.
இந்த ஜென்மத்தில் கேட்டதனால்தான் முன் ஜென்மத்தை உணருகின்ற அறிவை உனக்கு தந்திருக்கிறேன். இப்படி பாவம் செய்த உனக்கு எந்த சான் றோர் துணை யாவது இருந்ததா? சார்ந்தால் சாது சங்கத்தை சாரவேண்டும், அவன் பொருளாதாரத்தின் இயல்பைப் பற்றி சொல்வான். இந்த பொருளாதாரமே உன் னை பாவியாக்கிவிட்டது. ஒரு பக்கம் காமதேகம் உன் னை பாவியாக்கிவிட்டது. ஒரு பக்கம் பொருள் வெறி உன்னை பாவியாக்கி உள்ளது. அந்த பொருள் வெறி உன்னை என்ன செய்தது? உனக்கு கருணையில்லாத வாழ்க்கையை உண்டு பண்ணியது.
இப்போது பொல்லாத வறுமைக்குட்பட்டு அல்லல்படுகிறாய் என்பதை யாம் அறிவோம். ஆகவே இதையெல்லாம் நீ புரிந்து கொள்ள வேண்டும். எடுத்தவுடன் பொருளாதாரத்தை தந்துவிட மாட்டார்கள். “பிரான் அருள் உண்டெனில் உண்டு நற்செல்வம்” என்றார். எப்ப வரும் என்றார். வினை தீராமல் வருமா? எப்படி ஐயா வினையை தீர்ப்பது? என்றான்.
4. ஞானத்திருவடி) வினையை தீர்ப்பது எப்படி என்றால் வறுமையில் அல்லல்பட வேண்டும், உடல் சோர்வு, பிரச்சனை கள், கடன் சுமை, தடுமாற்றங்கள், தொட்டது துலங்காமை, மனைவி நோய்வாய்ப்படுதல், தடுமாறுதல் போன்றவை எல்லாம் இருக்கும். இதையெல்லாம் அனுபவித்ததற்கு பிறகு தான், சரி வாய்ப்பு. வந்துவிட்டது, எங்கள் திருவடியை பற்றினால் வீண் போகமாட்டான் என்று சொல்வார்கள்,
எங்கள் திருவடியைப் பற்றி இருந்தாலும் பெரும் சுமைக்கு உட்பட்டு கிடக் கின்றாயே மகனே! என்பார்கள். அப்பவும் அந்த "மகன்" என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்துவார்கள்.
பெரும் சுமையில் அல்லல்பட்டு கிடக்கிறாயடா, நாங்கள் என்ன செய்வோம், உன்னை நாங்கள் பார்க்கிறோம். உன்னை சுற்றி இவ்வளவு பாவச் சுமைகள் இருக்கிறது. எல்லாம் தலைவிரி கோலமாய் இருக்கிறது. எத்தனை பெண்கள் உனது பேராசை காரணமாக தலைவிரி கோலமாக ஆனார்கள், எத்தனை குடும்பஸ்தர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். எத்தனை குடும்பஸ்தர்கள் மண்ணை வாரி இறைத்திருப்பார்கள்? அப்படி இருக்கும்போது எப்படி நான் உனக்கு அருள் செய்வேன்?
எனவே பொருளாதாரத்தைப் பற்றி அறியக்கூடிய அறிவை தலைவன் நமக்கு கொடுக்க வேண்டும். நாங்கள் பேசுவது உங்களுக்கு சற்று கசப்பாக இருக்கும். என்னய்யா எங்களுக்கு அருள் செய்ய மாட்டானா என்று கேட்டால், உங்களுக்கும் அருள் செய்வானய்யா. நிலைமை இப்படி இருக்கிறது இதெல்லாம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?
இப்பதானே நீ தலைவன் திருவடியை தொட்டு இருக்கிறாய்? எத்தனை ஜென்மத்தில் நீ கெட்டிருக்கிறாய்? எத்தனை ஜென்மத்தில் நீ பலபேருடைய வாழ்வை பாழ்படுத்தி இருக்கிறாய்? எவ்வளவு உயிர்களை கொன்றிருப்பாய்? உன்னால் எத்தனை உயிர்கள் பாழ்பட்டு போயிருக்கும்? அவை எவ்வளவு அல்லல்பட்டு இருக்கும்? புலால் வெறி, போக வெறி, பொருள் வெறி இப்படியெல்லாம் வெறிபிடித்து நீ அழிந்திருக்கிறாய்? ஏதோ இப்போது தக்க ஆசான் உனக்கு நல்வழி காட்டியிருக்கிறார்.
ஆசான் நல்வழி காட்டியதால் தெளிவான அறிவு கிடைத்திருக்கு, விடமாட்டோம், கைவிடமாட்டோம். அஞ்சேல் மகனே! கை விட மாட்டோம். சிறிது பெருஞ்சுமைக்கு அகப்பட்டிருக்கிறாய். ஆகவே அந்த அல்லலை நீ நீக்கிக் கொள்.
அல்லல்படு, அல்லல்பட்டால் வினை தீரும், வள்ளல் தானே வருவான், பெரியவங்க வந்துடுவாங்க, பெரியவங்க ஆசி பெறுவதற்கு அன்னதானம்
-45
14 ஞானத்திருவாடி செய்யுங்கள், தினம் தியானம் செய்யுங்கள். நான் பெற்ற இந்த பெரும் பேறை பெறுங்கள் என்றார்.
நாங்கள் பொருளாதாரத்தின் இயல்பை அறிந்தவர்கள். நாங்கள் ஏழைகளுக்கு அள்ளி அள்ளி போடுகிறோம். ஏன் எங்களுக்கு வயசாகவில்லையா, அடே! வயசாச்சு, நாலு காசு வேணும் என்று மனசு சொல்லும்.
ஆசான் ஆசியிருக்கு, ஆசான்தான் செல்வத்தை கொடுத்திருக்கிறான். நாலு காசு என்ன? நாலு கோடியை அள்ளித் தந்திருக்கிறான். ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறோம். இன்று கொடுத்த தலைவன் நாளைக்கு தருவான் என்ற நினைப்பும் முதலில் வரவேண்டும். இது தலைவன் ஆசி இல்லையென்றால் வருமா? வராது.
ஆகவே இந்த காலக்கட்டத்தில் தொண்டர்கள் தின மும் ஆசான் ஆசியைப் பெற்றும், முடிந்த அளவு தான தர்மங்கள் செய்தும் ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும். இதைவிட்டால் வேறு வழியேயில்லை.
முன்செய்த வினையின் காரணமாக வறுமையும் பிணியும், பிரச்சனைகளும் மனத்தடுமாற்றமும் இருக்கத்தான் செய்யும், அதற்காக சோர்வடையக் கூடாது. அப்படி சோர்வடைந்தால் மேலும் பிரச்சினைதான் உருவாகும். பிரச்சினை தீராது.
தினம் தினம் தியானம் செய்தும் முடிந்தளவு அன்னதானம் செய்தும் ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் தொட்டது துலங்குவதற்கு உபாயம். இதைத்தவிர வேறு வழியில்லை.
இது நேரம் வரை நான் உங்களுக்கு தானம், தியானம், யோகத்தைப் பற்றி பேசியிருக்கிறேன், ஜென்மத்தை கடைத்தேற்ற தானம் தியானம் துணையாக இருக்குமென்று சொல்லியிருக்கிறேன்,
பக்தி நெறியையும் பொருளாதாரத்தைப் பற்றியும் சொல்லி இருக்கிறேன். கடைசியில் பேசியது சற்று கசப்பாக இருக்கும், முற்றும் உணர்ந்தவர்கள் சொன்ன கருத்து சற்று கசப்பாகத்தான் இருக்கும். அதெல்லாம் பின்பற்றி கடைப்பிடிப்பது நல்லது என்று சொல்லி, இதுநேரம் வரையிலும் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த உங்களுக்கு நன்றி கூறி முடிக்கிறேன். வணக்கம்.
அன்பான வாசகர்களே வணக்கம் உங்கள் ஆண்டு சந்தாவை புதுப்பித்துவிட்டீர்களா!
ஞானத்திருவடி நூலை படித்து, உங்கள் உணர்வுகளை எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்போடு அழைக்கின்றோம்.
- அன்பன் இரா.முத்தவுன், 98424 55661.
தொடர்...
1. ஞானத்திருவடி திருச்சி மாவட்டம், துறையூர், ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள் மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை
11. ஓதுவது ஒழியேல் மகான் ஒளவையார் கற்க வேண்டியவற்றை கற்பதை நிறுத்தக் கூடாது என்கிறார். கல்வி கற்க வேண்டும், நூல்கள் கற்பதை எக்காலத்தும் நிறுத்தக் கூடாது என்கிறார்.
இங்கு கல்வி எனக்கூறுவது இரண்டு வகைப்படும். முதலாவதாக நமக்கு வாழ்வதற்கு தேவையான வாழ்வாதாரமான உணவு, உடை, உறையுள், உலகை அனுசரித்து செல்லுதல் போன்ற இகலோக தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவி செய்யும் கல்வி. அதாவது இகலோக கல்வி மற்றொன்று அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கினைப் பற்றி அறிதலும் அதை அடைவதற்கான முயற்சியையும் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும், பர வாழ்க்கைக்கான பரலோக கல்வியாகும்.
ஆத்திச் சூடியில் எட்டாவது வரியில் ஐயமிட்டு உண் என்கிறார். ஒன்பதாவது வரியில் ஒப்புரவு ஒழுகு என்கிறார். பத்தாவது வரியில் ஓதுவது ஒழியேல் என்கிறார். ஏனெனில் ஐயமிட்டு உண் அதாவது பசித்த ஏழைகளுக்கு பசியாற்றி பின் உண்ணச் சொல்கிறார். அடுத்து தன்னுடன் உள்ள உலகோரை அனுசரித்து நட என் கிறார். இவ்விரண்டு செயல்களையும் ஒருவன் கடைப்பிடிக்க வேண்டுமெனில் அதற்கு கல்வியறிவு அவசியம் தேவை. எனவே அடுத்து ஓதுவது ஒழியேல் என்கிறார்,
உலகியல் வாழ்வில் ஒருவன் வாழ வேண்டுமெனில் அவனுக்கு கண்டிப்பாக ஏட்டுக்கல்வி அவசியமாகும். அப்படி கல்வியறிவு இல்லாவிட்டால் அவனது வாழ்வில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலவித இன்னல்களுக்கு ஆளாக நேரிடும் என்பதை நாம் உணர வேண்டும். -
ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் குடும்பத்தினர் ஏழ்மையின் காரணமாகவும், வேலைப்பளுவின் காரணமாகவும் அவனை கல்விகற்க அனுப்பவில்லை. அதனால் அவன் தனது கிராமத்திலேயே விவசாயம் பார்த்து வந்தான். ஒரு கட்டத்தில் விவசாயத்திற்காக பணம் வேண்டி மற்றொரு பணக்காரரிடம் இருபதாயிரம் ரூபாய் கடன் வாங்கினான். கடன் வாங்கிய போது கடன் கொடுப்பவர், கடன் கொடுத்ததற்கு இரசீதாக கையொப்பம் வாங்கினார். இவனுக்கு படிக்க தெரியாததால் ரூபாய் 20,000/- என்பதற்கு பதிலாக ரூபாய் 2,00,000/- என எழுதி ஒரு பத்திரத்தில் கடன் கொடுத்ததற்கு இரசீதாக கையொப்பம் வாங்கினார்.
H47)
1. ஞானத்திருவடி கடன் பெறும் அந்த ஏழை விவசாயிக்கு கல்வியறிவு இல்லாததால் அதில் என்ன எழுதி இருக்கிறது என்பதை படித்து பார்க்கக்கூட முடியாமல் நம்பிக்கையின் பேரில் கைரேகை வைத்தான். ஒரு கட்டத்தில் கடன் தொகையை திருப்பிச் செலுத்தி பத்திரத்தை கேட்டபோது கடன் கொடுத்தவர் நீ கொடுத்த தொகை வட்டிக்கு கூட போதாது, என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறாய் என்று பொய் சொன்னான்.
விவசாயி ஊர் பெரியவர்களை அழைத்து பிரச்சனையை சொன்னான். ஊர் பெரியவர்கள் விசாரித்து கடன் கொடுத்தவன் பத்திரத்தை வாங்கி பார்த்தார்கள். அவர்கள் அதில் ரூபாய் இரண்டு இலட்சம் வாங்கியுள்ளதற்கு கைரேகை வைத்திருப்பதை பார்த்து அந்த கைரேகை இவனதுதானா எனபார்த்து கடன் கொடுத்தவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினார்கள்.
அந்தோ! பரிதாபம், ஏழை விவசாயி தனது வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்த ஒரே நிலத்தையும் இழந்துவிட்டான். அவன் கல்லாததால் வந்த கேடு இது. அவன் கல்லாத காரணத்தால் அவன் பாதிப்புக்குள்ளானதோடு மட்டுமல்லாமல் அவனை நம்பி வந்த குற்றத்திற்காக அவனது மனைவி, குழந்தைகளையும் நடுத்தெருவில் நிறுத்தி விட்டான். அவர்கள் பட்ட வேதனையை எப்படி கூறுவது.
இன்னும் சிலபேர் கல்வி கற்பதை தேவையில்லை என்று நினைத்து விட்டுவிடுகிறார்கள். தனக்கு பணவசதி உள்ளது ஒரு சாதாரண மனிதனிடம் நாம் போய் ஏன் கல்வி கற்க வேண்டும். கல்வி கற்பது வேலைக்கு செல்வதற்குதானே, நமக்குள்ள வசதிக்கு படித்துதான் வேலைக்கு செல்லவேண்டுமோ, நம்மிடம் உள்ள சொத்தே பல தலைமுறைக்கு போதும் எனக் கூறி கல்விகற்காமல் இருப்பார்கள். அப்படி இருப்பதாலும் கேடுவரும் என்பதை உணர வேண்டும்.
இரு நண்பர்கள் சேர்ந்து கூட்டாக வியாபாரம் ஆரம்பித்து அதை நல்ல முறையில் செய்து வந்தார்கள். இதில் ஒருவன் தேவையான பொருள் இருப்பதால் நமக்கு கல்வி எதற்கு பிறரிடம் சென்று கீழ்பணிந்து கல்வி கற்பதா என எண்ணி கற்காமல் விட்டுவிட்டார். மற்றொருவர் அவ்வாறில்லாமல் வாழ்க்கைக்கு கல்வி அவசியம் என உணர்ந்து கல்வி கற்று தேர்ந்தவரானார்.
இவர்கள் இருவரும் இணைந்து வியாபாரம் செய்யும் பொழுது கல்வி கற்றவரே வெளி விவகாரங்கள் மற்றும் கொடுக்கல் வாங்கல், வரவு செலவு கணக்குகளையும் கவனித்து வந்தார். நட்பிற்கு இலக்கணமாக திகழ்ந்து வந்ததுடன் நல்லமுறையில் வியாபாரமும் செய்து வந்தார்.
இப்படி இருக்கும் காலத்தில் தனக்கும் தனது குடும்பத்தினரும் வெளியூர் சென்று வருவதற்காக வாகனமும், ஒரு நல்ல வீடும் கட்ட வேண்டும் என்று எண்ணி தனது முன்னோர்களது சொத்துக்களைக் கொண்டு வீடுகட்டியும் வாகனம் வாங்கியும் பயன்படுத்தி வரலானார்.
H48)
18ஞானத்திருவடி ஆனால் ஊரில் உள்ள சிலர் அவரது வளர்ச்சியை பொறுக்காமல் பொறாமையின் காரணமாக படிக்காத நண்பரிடம் சென்று உனது நண்பர் நீ கல்வியறிவு அற்றவன் என்பதால் உன்னை ஏமாற்றி சொத்து சேர்க்கிறான். அதை நீ கண்டும் காணாமல் இருக்கிறாய், அவனுடன் சேராதே என இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி பகையை வளர்த்துவிட்டார்கள்.
இவரோ அவர்களது பேச்சை நம்பி நம்பிக்கையானவரும், தூய்மையான வருமான தனது நண்பரை நம்பாது 'நீ எனக்கு துரோகம் செய்கிறாய் என்னை ஏமாற்றுகிறாய், இங்கிருந்து போய்விடு' என கோபமாக கூறியதோடு மட்டுமல்லாமல் அவரை சந்தேகித்து தனது பொருளை களவாடிவிட்டதாக குற்றம் சாட்டினார்.
ஆனால் அந்த நண்பரோ நாம் செய்த வியாபாரத்திற்குண்டான அனைத்து வரவு செலவுகளும் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. தயவு செய்து அதை பரிசீலித்து பின்னர் குற்றம் சொல்லுங்கள். அதைவிடுத்து வீண்பழி சொல்லாதீர்கள் என்றார்.
கல்வி கற்காததால் அவர் காட்டிய கணக்குகளை பார்க்க முடியாமல் தனது பலஹீனத்தை மறைத்து கொண்டு “ஆ! நீ படித்தவன் பொய்கணக்கு காண் பிக் கிறாய்" என கூறி அவரை குற்றம் சாட்டிய தோடு வியாபாரத்திலிருந்து விலகிவிடுமாறும் கூறிவிட்டார். அவரும் மனம் நொந்து தனியே வியாபாரம் செய்து வரலானார்,
போதிய கல்வி இல்லாததாலும், வியாபார அனுபவம் இன்மையாலும் கற்றவர் நட்பை இழந்ததாலும், கல்வி அறிவு பெற்றவர் செய்து வந்த வியாபாரத்தை அவரைப் போல தொடர்ந்து செய்ய முடியாமல் ஏராளமான நஷ்டத்தை சந்தித்ததோடு மேலும் மேலும் கடன்சுமை ஏறி தனது சொத்துக்களை எல்லாம் விற்று இறுதியில் ஏழ்மைக்கு ஆளாகி, கைப்பொரு ளையும் இழந்துவிட்டார். எனவே கல்வி அவசியம்.
கற்க வேண்டியவற்றை கற்காமல் இருப்பதால் வரும் கேடுகளையும் உணரவேண்டும். இப்படி வாழ்விற்கு ஆதாரமாய் விளங்கும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் உலகநாதர் தனது உலக நீதியில் முதற்பாடலாக அமைத்து,
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் வாகாரும் குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!
- உலகநீதி - கவி எண் 1.
14. ஞானத்திருவடி இந்த பாடலில்
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.... என முதல்வரியில் கூறுவதன் மூலம் உணரலாம்.
மன்னராக விளங்கியவரும் ஞானியுமான அதிவீரராம பாண்டியரோ தனது “வெற்றி வேற்கை” எனும் நூலில் கற்பதன் அவசியத்தை உணர்த்த வேண்டி,
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே
- வெற்றி வேற்கை - 35. எனக்கூறி மனிதன் பிச்சை எடுத்துதான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற சூழ்நிலை வந்த போதும் கற்பதை மட்டும் நிறுத்தாமல் கற்க வேண்டும் என்கிறார்.
மகான் வள்ளுவப் பெருமான் கல்வியின் அவசியத்தையும், உணர்த்தும் பொருட்டு தனது திருக்குறளில் கல்வி என்ற அதிகாரத்தில் பத்து குறள்கள் மூலம் விளக்குகிறார்.
கண்உடையர் என்பவர் கற்றோர்; முகத்து இரண்டு புண் உடையர் கல்லா தவர்.
- திருக்குறள் - கல்வி - குறள் எண் 393. கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்றவர் கற்றவரே; கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவர். )
யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு.
- திருக்குறள் - கல்வி - குறள் எண் 397. கற்றவனுக்குத் தன் நாடும் ஊரும்போலவே வேறு எதுவாயினும் நாடாகும்; ஊராகும்; ஆகையால் ஒருவன் சாகும்வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்?
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து.
- திருக்குறள் - கல்வி - குறள் எண் 398. ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லா மல் ஒருவனுக்கு எழுபிறப்பிலும் உதவும் தன்மை உடையதாகும்.
கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு; மாடுஅல்ல மற்றை யவை.
- திருக்குறள் - கல்வி - குறள் எண் 400. ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும்; கல்வி தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.
4. ஞானத்திருவடி இப்படி பல்வேறு சான்றோர்களும், ஞானிகளும் கற்பதன் அவசியத்தை பலவாறாக வலியுறுத்தி கூறுகிறார்கள்.
கல்வி என்பதும் கற்பது என்பதும் இருவகையாக கொள்ளலாம். ஒன்று இக வாழ்விற்கான இகலோக வாழ்வைப் பற்றிய கல்வி, மற்றொன்று ஆன்மாவையும் பரமான்மாவையும் பற்றியும், ஜீவான்மா பரமான்மா தொடர்பு போன்ற பரலோக வாழ்வு அதாவது மரணமில்லா பெருவாழ்வைக் குறித்து கற்பதும், அறிவதுமாகிய பரலோக கல்வியாகும், அதாவது சாகாக் கல்வியாகும்.
உலகியல் கல்வி என்பது பொருளாதாரத்தை மையமாகக் கொண்டதும் உலகியல் நடைமுறைகளைக் கொண்டதுமான பொருள்முதல் வாதத்திலான கல்வியாகும். மரணமில்லா பெருவாழ்வைக் குறித்து கற்கும் கல்வியானது கருத்தை அடிப்படையாகக் கொண்ட கருத்துமுதல்வாதக் கல்வியாகும்
என்றும் அழிவில்லாதவரும், மரணத்தை வென்றவரும், ஞானத்தலைவனுமாகியவரும், ஞானப்பண்டிதரென்றும், முதுபெரும் தலைவனென்றும், முதல் ஞானி என்றும், சுப்ரமணியர் என்றும் சொல்லப்படுகின்ற முதுபெரும் ஞானத்தலைவன் முருகப்பெருமானே சாகாக் கல்வியை தோற்றுவித்தவர். அவரே ஞானத்தைப் பற்றிய அறிவை முதலில் அறிந்து, அதன் பின்னர் அகத்தியருக்கும் அவருக்குப்பின் ஒன்பது கோடி ஞானிகளும் வழிவழியாக தோன்றியதற்கும் அவர்கள் மரணமில்லா பெருவாழ்வை அடைவதற்கும் காரணமாயிருந்தது சாகாக்கல்வியாகும்.
சாகாக் கல்வி என்பது ஏட்டுக் கல்வி அன்று. அது குருபாரம்பரியமாக, வாழையடி வாழையாக குருமுகாந்திரமாக சீடனுக்கு நேரிலும், அந்தரங்கத்திலும், சூட்சுமமாகவும் உணர்த்தப்பட்டு உணர்வால் உணரக்கூடிய அறிவாகும். இதை கற்க உண்மை குரு அதாவது சற்குரு உதவியில்லாமல் முடியாது. சற்குருவும், சொற்குருவும் சீடர்பால் கருணைகொண்டு உபதேசித்து அறியக் கூடிய கல்வியாகும்.
மரணத்தை வெல்லக்கூடிய கல்வியாகிய சாகாக் கல்வியை கற்பது எளிது. எப்படி? முதுபெரும் தலைவனும், சாகா கல்வியைத் தோற்றுவித்தவனுமாகிய ஞானப்பண்டி தன் திருவடியைப் பற்றினால், அவரால் கூறப்பட்ட அந்த கல்வியானது அவரது திருவடியைப் பற்றுபவருக்கு தானே வரும்.
திருவடியைப் பற்ற வேண்டும். எப்படி? ஆசான் திருவடி யே வேதமாகவும், ஆசான் நாமமே மந்திரமாகும், ஆசானே ஈசனாகும், ஆசானே தாய், தந்தை, குரு, தெய்வம் என அனைத்துமாக எண்ணி உள் ளம், உடல், பொருள், ஆவி அனைத்தையும் அவர்பால் அர்ப்பணித்து சரணாகதியாக அவர்பால் எவனொருவன் தன்னை அர்ப்பணித்து பணிந்து இடைவிடாது ஆசான் நாமத்தை பூஜித்தும் போற்றியும் வருகிறானோ அவனால் யாவருக்கும், மூவருக்கும் எட்டாத அந்த பேரின்ப நிலையிலுள்ள பெரும் பேற்றை அளிக்கக்கூடிய பொற்பாதமலர் கமலமென கூறும் திருவடியைப் பற்றலாம்.
4 ஞானத்திருவடி எவ்வளவுதான் ஞானக் கல்வியைப் பற்றி பல முறைகளிலும் சான்றோர் நூல்களையும் கூறி இப்படி மரணமில்லா பெருவாழ்வு என்ற ஒன்று உண்டு என்றும், அதை கற்பதே சாகாக்கல்வி என்பது என்றும் எடுத்துக் கூறினாலும் மனித சமுதாயத்தில் ஒரு சிலருக்கு எப்போதும் சந்தேகம் இருந்து கொண்டுதான் இருக்கும்.
இப்படி ஒன்று உள்ளதா, ஞானம் என்பது உண்மையா? அது உண்டா இல்லையா? இறைவனென்பது உண்மையா? இல்லையா? என்றும் அது இப்படி இது அப்படி என்று தன்னைத்தானே குழப்பிக் கொண்டும், வாழ்நாள் முழுவதும் வீ ண ா ன ஆராய்ச்சிகள் செய்தும் வருவார்கள், ஏன் இப்படி இவர்கள் செய்கிறார்கள் என்றால் அது அவர்கள் பல ஜென்மங்களில் செய்த பாவத்தின் காரணமாக ஞானத்தைப் பற்றி அறியக்கூடிய அறிவு இல்லாமலும் அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் அதை சந்தேகிப்பதுமாக அவரை பாழ்படுத்திவிடும்.
நன்னிலம் தாண்டவ மூர்த்தி சுவாமிகள் அவர்கள் இயற்றிய கைவல்ய நவநீதத்தில் ஒரு பாடலில்,
தடைகளே தெனிலஞ் ஞானஞ் சந்தேக விபரீ தங்கள் படர்செயு மந்த மூன்றும் பலசன்மப் பழக்கத்தாலே யுடனுடன் வரும்வந் தக்கா லுயர்ஞானங் கெடுமி வற்றைத் திடமுடன் கெடுப்பாய் கேட்டல் சிந்தித்த றெளிதலாலே.
- கைவல்ய நவநீதம் - தத்துவ விளக்கப்படலம் - கவி எண் 89. தடைகள் ஏதெனில் அஞ்ஞானம் சந்தேகம் விபரீதங்கள் படர்செய்யும் இந்த மூன்றும் பலசன்மப் பழக்கத்தாலே உடனுடன் வரும் வந்தக்கால் உயர்ஞானம் கெடும்இவற்றைத்
திடமுடன் கெடுப்பாய் கேட்டல் சிந்தித்தல் தெளிதலாலே ஒரு மனிதன் ஜென்மத்தை கடைத்தேற்ற தடைகளாய் இருப்பவை யாவை என்றால், அஞ்ஞானமும், சந்தேகமும், விபரீதங்களுமாம். துன்பஞ்செய்யும் இந்த மூன்று தடைகளும் அனந்த சென்மங்களாய் (கணக்கிலடங்காத பிறவிகள்) பழக்கத்தினால் அடிக்கடி வரும். அஞ்ஞானம் வருமாகில் மேலான ஞானம் மறைபடும்.
இப்படி ஒரு மனிதனுக்கு முன்ஜென்ம பழக்கத்தினால் வரும் சந்தேகத்தை தக்க ஆசான் உதவியால் கேட்டு அறிந்து தெளிந்து போக்கிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இத்துறையில் அணுவளவும் முன்னேற முடியாது.
கற்கவேண்டிய அவசியமான இந்த ஞானக் கல்வியை ஒருவன் கற்றால் அக்கல்வி அவனது பலபிறவிகளுக்கு தொடர்ந்து வரும் என மகான் வள்ளுவர் கூறுகிறார்.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து.
- திருக்குறள் - கல்வி - குறள் எண் 398.
52
4. ஞானத்திருவடி ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் ஒருவனுக்கு ஏழுபிறப்பிலும் உதவும் தன்மை உடையதாகும்.
மகான் திருமூலரோ ஞானக் கல்வியாகிய மரணமில்லா கல்வியைப் பற்றி அறியாதவர்களை மூடர் எனக் கூறுகிறார். மேலும் அவர் தனது திருமந்திரத்தில்
கல்லாத மூடரைக் காணவும் ஆகாது கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன் அன்று கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம் கல்லாத மூடர் கருத்தறி யாரே.
- திருமந்திரம் - கல்லாமை - கவி எண் 317. என்கிறார்,
மகான் அருணகிரிநாதர் சாகாக் கல்வியை ஒருவன் கற்பதோடு அதற்கு காரண மாகிய ஞானத்தலைவனை ஒருபோதும் மறக்கலாகாது என்பதை வலியுறுத்தி தமது கந்தரலங்காரத்தில்
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர் வேல் வேந்தனை செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச் சாந்துணைப் போது மறவாதவர்க்கொரு தாழ்வில்லையே.
- கந்தரலங்காரம் - கவி எண் 72 எனக் கூறுவதன் மூலம் இறைவன் திருவடியை மறக்காமல் இருப்பவர்க்கு ஒரு தாழ்வில்லை என்கிறார்.
மகான் இராமலிங்க சுவாமிகள் தமது அருட்பாவில் சாகாக் கல்வியை பற்றி ஒரு பாடலில் கூறுவது யாதெனில் சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்
தான்என அறிந்த அறிவே தகும்.அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே
தனித்தபூ ரணவல்லபம் வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்
விளையவிளை வித்ததொழிலே | மெய்த்தொழில் தாகும்இந் நான்கையும் ஒருங்கே
வியந்தடைந் துலகம் எல்லாம் மாகாத லுறளலாம் வல்லசித் தாகிநிறை
வானவர் மேஇன்பமாம். மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
மரபென் றுரைத்தகுருவே தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்தெனைத் - தேற்றி,அருள் செய்தசிவமே
H53)
4. ஞானத்திருவடி) சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
தெய்வநட ராஜபதியே.
- திருஅருட்பா - நடராஜபதி மாலை - கவி எண் 1369 எனக் கூறுகிறார்.
இப்படி பலஞானிகள் சாகாக்கல்வியின் அவசியத்தை விளக்கியுள்ளார்கள். இன்னும் அநேகம் விளக்கம் சொல்லலாம். இந்த சாகாக் கல்வியானது ஒருநாள், இரண்டு நாள், ஒரு வருடம், பத்து வருடம் என்ற கணக்கில் அடங்காது பல ஜென்மங்களாக இடைவிடாது சொற்குருவையும் சற்குருவையும் பணிந்து பணிந்து அவர் உபதேசம் பெற்று அவரை இடைவிடாது தொடர்ந்து எடுத்த இலட்சியத்தை அதாவது மரணமில்லா பெருவாழ்வை பெறும் வரை நொடிப்பொழுதும் பிசகாது நடந்து கடைப்பிடித்தும், கேட்டும், நடந்தும் வரவேண்டிய ஒன்றாகும்.
இப்படி நடந்தால்தான் அக்கல்வியை கற்க முடியும். அவ்வாறில்லாமல் அஜாக்கிரதையாக சொற்குரு, சற்குரு சொல் தவறி நடந்தாலோ, விலகினாலோ தவம் கெட்டுவிடும், சாகாக் கல்வி பாழ்பட்டு போய்விடும். அதனாலேயே மகான் ஒளவையார் “ஓதுவது ஒழியேல்” என்கிறார். அதாவது கற்க வேண்டியவற்றை இடைவிடாது கற்க வேண்டும் என்கிறார்.
இது இல்லறத்தானுக்கும் தன் இகவாழ்க்கைக்கு தேவையான கல்வியை கற்பதற்கும் பொருந்தும். துறவு வாழ்க்கை வாழும் தவசிக்கும் பொருந்தும்.
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு, தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள் தலைமையில்
பெளர்ணமி திருவிளக்கு பூஜை நாள் : 08.03.2012 - வியாழக்கிழமை, காலை 10 மணி அளவில் இடம் : ஓங்காரக்குடில், துறையூர். அன்புடையீர் வணக்கம்,
துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் சார்பாக நடைபெறும் (திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டு ஞானிகளின் ஆசிபெற அன்புடன் அழைக்கின்றோம். அது சமயம் ஞானிகளை பூஜித்த அருட்பிரசாதம் (அன்னதானம்) வழங்கப்படும். 10 மூட்டை அரிசி அன்னதானத்திற்குக் கொடுத்து திருவிளக்கு பூஜை செய்பவர்கள் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க அன்பர்கள், காசிபாளையம்.
| M.மோகன்காந்தி, அரியாகவுண்டன்பட்டி, | K.காளிமுத்து, கஞ்சநாயக்கன்பட்டி.
ஓம் அகத்திசாயநம -
ஓம் காகபுசண்டதேவராயரும் )
குருவே துணை - ஏக இறை கருணையால்
ஆசான் ரெங்கராஜ தேசிக சுவாமிகள் நல்லாசியுடன் கோடை விடுமுறையில் ஓர் ஆன்மீக சுற்றுலா
(ADI SHANKARAR
இமய மலையில் 13 - நரள் சுற்றுப்பயணம்
புதரிசிக்கும் இடங்கள்-ர. பாபாஜி குகை
BABAJI CAVE பத்ரி நாத் கோவில்
BADRINATH TEMPLE கோஷி மட்
JOSHI MUTT கேதர்நாத் (4 கிமி குதிரை பயணம்)
KEDARNATH (ஆதி சங்கரர் தன்னை மறைத்த இடம்)
DISAPPEARED PLACE) வியாசர் தகை
VYASAR CAVE (இந்திய சீன எல்லையின் கடைசி தேநீர் கடை) கங்கோத்ரி
GANGOTRI யமுனோத்ரி
YAMUNOTHRI வசிஷ்டர் குகை
VASISHTAR CAVE ரிஷிகேஷ்
RISHIKESH ஹரித்துவார்
HARIDWAR புது டில்லி
NEW DELHI சுற்றுலாவில் பங்கேற்பவர்கள் ஒவ்வொருவர் சார்பாகவும் ஓங்காரகுடிலில்
அன்னதானம் வழங்கப்படும்
0
-
9
- பயண தேதி மே 14.05.2012. முதல் மே 27.05.2012 வரை ஒரு ஊருக்கு ரூ 80,000/-மட்டும்
விமானப் பயணம் கோவில் தரிசனங்கள், பேருந்து பயணம் சைவ உணவு, தனித்தனி படுக்கை வசதி. முன்பணம் ரூ 15,000/- மீதி தொகை ரூ. 15,000/
ஏப்ரல் மாதம் 2012 இறுதிக்குள் செலுத்த வேண்டும் தொடர்பு: ராஜா - 9894673083, 9445547548, நடராஜன் - 9894755784 ஓம் கேத்திசாயநம (2)
- ஓம் காகபுண்ட தேவாய நம
ஒம் அகத்தியர் துணை
மகான் சுப்ரமனாரியர்.
மகான் அகத்தியர்
மகான் இராமலிங்கர்
தானமும் தவமும் தான்செய் வாராகில் வானவர் நாடு வழிதிறந்திடுமே.
- ஒளவைக்குறள். குருவின் அடிபணிந்து கூடுவது அல்லார்க்கு அருவமாய் நிற்குஞ் சிவம்.
- ஒளவைக்குறள்.
குரு அருளே திருவருள் பரமானந்த சதாசிவ சற்குரு குருநாதர், தவத்திரு
- ரெங்கராஜ தேசிக சுவாமிகள்
திருமூலர் சங்க அறப்பணிகள் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமிதோறும் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெறும். மாதந்தோறும் கடைசி ஞாயிறு அன்று சித்தர்கள் வழிபாடும் திருவிளக்கு பூஜையும் நடைபெறும். மாதந்தோறும் 200 ஏழைஎளிய குடும்பத்தினருக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை மாவு, பருப்பு, சமையல் எண்ணெய், பால் மாவு ஆகியவை இலவசமாக வழங்குகிறோம். ஏழைஎளிய மாணவர்களுக்கு அன்னதானமும், இலவச ஆடையும், பள்ளி சென்று வர வாகனவசதியும் செய்கிறோம்.
குரு அருள்வேண்டி...
A.ANANTHAN, MALAYSIA CONTFOR:-PERSATUIANKERAJIKANTHIRUMULARMALAYSIA
(also known as) Reg. No: 1821-03-7 AGATHIAR CHARITY ORGANISATION MALAYSIA | DT 65718, KAMPLING BATLI 1, JALLAN AIR HITAM1, 4:38(00) DENGKIL, SEI.AN((OR, PH: +66) 3 876892997599, tb: www.agathiar.org www.thirulular.korg
Email - info@thirumular.org.info@agathiar.org
ADVT
திருக்கயிலாயம் - மானஸரோவர்
முக்திநாத்14/18நாட்கள் யாத்திரை
மே முதல் செப்டம்பர் வரை
மாதம் ஒரு குழு புறப்படுகிறது. காட்மாண்டிலிருந்து சூப்பர் டீலக்ஸ் வசதியுடன் திருக்கயிலாயம் சென்று தரிசித்து பின் காட்மாண்டு வருவதற்கு 14 நாட்கள் ஆகும். * திருக்கயிலைபயணத்திற்கு சம்பள ஆட்களை அனுப்புவது இல்லை. * 13 ஆண்டுகள் அனுபவமுள்ள நாங்களே உங்களுடன் சேவை செய்ய வருகின்றோம். * கட்டணத்தை குறைத்து வசதிகளை குறைப்பது இல்லை. * இதுவே எங்களது வெற்றிக்கு காரணம். சைவ மாநாடுகளில் திருக்கயிலாய தரிசனகாட்சியை (1மணிநேரம்) LCD புரெஜெக்டர் மூலம் கட்டணமின்றி திரையிட்டு காண்பிக்கிறோம். ஜூன் (15 நாட்கள் அமர்நாத் பனிலிங்கதரிசனம், ஜம்மு, ஸ்ரீநகர் (காஷ்மீர், ஜூலை | வைஷ்ணவிதேவி, அமிர்தசரஸ், குருசேத்திரம், டெல்லி. | பிரதி மாதம் பூரி,கொல்கத்தா, கயா,காசி, அலகாபாத்-10 நாட்கள்.. ஷீரடி ) பிரதி மாதம் நவசோதிர்லிங்கம் - 15 நாட்கள் 4 நாட்கள் | கங்கோத்ரி-யமுனோத்ரி-கேதார்-பத்ரி -12/16 நாட்கள் )
கோ மந்த்ராலயம்)
நவபிருந்தாவனம்) ஆன்மீக இலங்கை-திருக்கேதீஸ்வரம்- (3நாட்கள்) பரத மாதம் திருக்கோணீஸ்வரம்-கதிர்காமம்-6 நாட்கள் ..
மூகாம்பிகை பிரதி மாதம் அந்தமான் டூர்-இருவழி விமானம் 5 நாட்கள் 14 நாட்கள்) பிரதி மாதம் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து,ஐரோப்பா,சீனா,துபாய்,கோவா. தனியாகவும் தாங்கள் விரும்பும் சுற்றுலாக்கள் நடத்தி தருகின்றோம்.) மனோகர் டிராவல்ஸ்
2/176, பெரியண்ண வீதி, ஈரோடு - 638001. போன்:0424-2269940, செல்:94433-80150. e-mail:manohartravvels@gmail.com
கைலாஷ் டிராவல்ஸ் | பெரியமேட், சென்னை -600 003. செல்:97902-66772, 94433-80154, www.manohartravels.com e-mail:kailashtravels.chennai@gmail.com
மே முதல்
ஓம் அகத்தியர் துணை
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
அருள் ஜோ நி முருகன் மகான் அகத்தியர் அருட்பெருஞ்ஜோதி வள் எnravார் குருநாதர் ஞானிகளை வணங்குபவன் ஞானியாவான்
PERTUBUHAN KEBAJIKAN SRI AGATHIARARANGGAR SANMAARKASANGGAM,
| NO 28, JAL.AN 2, TAMAN SEMIARAK, SG CHUA 43000, KAJANG, SELANGOR, MALAYSIA.
REG. NO: 1793-09-SEL PH-03 87391867, Web-agathiar.webs.com, Email - cvraja2004@ yahoo.corn. agthhiarimalaysia (@ yahoo.com அன்னதானம் செய்தால் துன்பங்கள் நீங்கும்
ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமைதோறும் மாலை 7.30 மணியளவில்
ஞானியர்கள் சிறப்பு பூஜையும் வழிபாடும் நடைபெறும். ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி திருவிளக்கு பூஜை நடைபெறும்.
உண்மை ஆன்மீகத்தை அறிந்து கொள்ள ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அருளும் ஞானத்திருவடி மாத இதழ்
வாங்கி படியுங்கள் . . . அன்னதானத்திற்கு பொருளுதவி செய்ய விரும்புவோர் மற்றும்
ஞானத்திருவடி மாதஇதழ் பெற விரும்புவோர் CONT FOR - Mr. RAJASEGAR. KL
- 0192704782 MIT, VILLASAMIY, KEDAH - (119) 5184744 MIT, KARUNA, JB
- 0167937300 MIT. KARTHIK, KL
- (113 36164.4) குரு அருள்வேண்டி... SRI ARANGAR ENTERPRISES, MALAYSIA CONT - ROBERT CHARLES - 013 3681636 AIDN'T'
ஓம் அகத்தியர் துணை
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
அறிவுக்கு அறிவாய் விளங்கும்
அருள்ஜோதி முருகன் முருகா என்று சொன்னால், முன்னின்று அருள்வான் முருகா என்று சொன்னால், முன்வினை தீர்ப்பான்
\\ il,
அன்னதானம் செய்தால் துன்பங்கள் விலகும்
மாதா பிதா குரு தெய்வமாக விளங்கும் எங்களது குருநாதர் தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளின்
அருளாசி வேண்டி...
S.P.பிரியா B.Sc., B.Ed., LIC இன்சூரன்ஸ் ஆலோசகர், சேடபாளையம், நாரணாபுரம் - 641664, பல்லடம் (Tk.j, திருப்பூர் (Dt.) 94861 87657, 8903477657
14 ஞானத்திருவடி
"சிவாய ரெங்கராஜ தேசிகாய நம" அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. -குறள் 226.1
சுந்தரானந்தர் எலக்ட்ரிகல்ஸ்
54-தெற்கு சிவன் கோயில் தெரு, வடபழனி,
சென்னை - 600 026. 0 044-24720499, 23721160.
'அன்னதானம் செய்தால் துன்பங்கள் தீரும்"
குருவருள் வேண்டி .. கணேஷ் ஹார்டுவேர்ஸ்
& அலுமினியம், No.72A - 100 அடி ரோடு, வடபழனி,
சென்னை - 600 026, |_cell : 98400 - 20828. 0 044 - 23651284, 23652568.
14 ஞானத்திருவடி
அகத்தியர் துணை
மகான் அம்பிகானந்தர் டைல்ஸ் & சானிட்டரிவேர்ஸ் பெருமாள் கோவில் தெரு, பிரசன்ன மஹால்
எதிரில்,
JOHNSON IL ES
Regency JOHNSON Parnywane Neycer
குரு அருள் வேண்டி ... ASR.ராஜா
S.திருமுகம் 98435 68696
98431 58696
லட்சுமி கிரில் டிசைன்ஸ்
எல்லாவிதமான மாடர்ன் கிரில் வேலைகளும், மாடர்ன் பர்னிச்சர் வேலைகளும் சிறந்த முறையில் செய்து தரப்படும்.

8ஞானத்திருவடி கவனகர். முழக்கம்
(மாத இதழ் - ரூ. 10/-) கவனகன்
ஆழமான ஆன்மீக விளக்கங்கள் அறிவுபூர்வமான சிந்தனையைத் தூண்டும் கருத்து மலர்கள். விந்தையான பதில்கள் மற்றும் அனைத்துச் சிறப்பம்சங்களும் நிறைந்த மாத இதழ்.
தமிழர்களின் வாழ்க்கைப் பாதையை வெற்றிப்பாதையாக மாற்ற வழிகாட்டும் இதழ் கவனகர் முழக்கம்
ஆசிரியர் :உலகத் தமிழர்களில் ஓர் அதிசய மனிதர், பல்கலை வித்தகர், பதினாறு கவனகர், நினைவு கலைச்செம்மல், மனிதகணிணி
திருக்குறள் இராம.கனகசுப்புரத்தினம்
மேலும் விபரங்களுக்கு ..... 4, இராகத் குடியிருப்பு, 2/746, கசூராத் தோட்டம், இரண்டாம் தெரு, நீலாங்கரை, சென்னை -41. 0 044-24490826.
மற்றும் 66, ராமசாமி வீதி, சாய்பாபா காலனி,
கே.கே. புதூர், கோவை-38. 0 0422-2441136. மெகா டிவியில் தினமும் காலை 7.30 மணிக்கு கவனகர் அய்யா அவர்களின் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி பார்த்து பயன் பெறுங்கள்
-62
5 ஞானத்திருவடி அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல் காற்றினுள் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
ஆற்றலின் ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி காற்றுறு காற்றாய்க் கால்நிலைக் காற்றாய்
ஆற்ற விளங்கும் அருட்பெருஞ்ஜோதி அனலினுள் அனலாய் அனல் நடு அனலாய்
அனல்உற விளங்கும் அருட்பெருஞ்ஜோதி அனல்உறும் அனலாய் அனல்நிலை அனலாய்
அனல்உற வயங்கும் அருட்பெருஞ்ஜோதி புனலினுள் புனலாய்ப் புனலிடைப் புனலாய்
அனை என வயங்கும் அருட்பெருஞ்ஜோதி 350 ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு
குரு அருள் வேண்டி
ANU BUILDERSS Ab Builders & Estates
Plot No.66, 2nd Main Road, V.G.P. Babu Nagar, Medavakkam,
Chennai - 601 302. Phone: 2277 0495,
Cell: 94440 70495, E-mail : anubuilders@yahoo.com
அகத்தியர் துணை நிறுவனர், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள்
அவர்கள் தலைமையில் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளையின்
நித்திய செயல்பாடுகள்
காலை 6.00 ஆசான் அகத்தீசர் ஜோதி வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
தியானம் (நாமஜெபம்) காலை 7.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம். காலை 8.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம் காலை 9.30 சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள் தரிசனம் மதியம் 12.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம் மதியம் 1.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம் மாலை 6.00 அருட்ஜோதி வழிபாடு
தியானம் (நாமஜெபம்) ஆசான் அகத்தீசர் வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம் குறிப்பு: பிரதி வியாழக்கிழமை தோறும் காலை 9.30) மணியளவில் ஞானியர்கள் சிறப்பு பூஜையும், குருநாதர் அவர்களின் தரிசனமும் நடைபெறும். ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளைக்காக வெளியிடுபவர்
S.செந்தில்குமார், நிர்வாக அறங்காவலர், 113-நகர் விரிவாக்கம், துறையூர்-621 010, திருச்சி மாவட்டம். ஆசிரியர் - இரா.மாதவன்.
அச்சிட்டோர் :
இராம.தொல்காப்பியன், வாஞ்சி மறுதோன்றி அச்சகம், கூட்டுறவு நகர், துறையூர்.
ஞானத்திருவடி - மாத இதழ்
சந்தா படிவம்
13 வருட சந்தா ரூ.350/
ப1 வருட சந்தா
ரூ.120/
திரு/திருமதி. : முகவரி
ஊர்
-------
பின்கோடு
வட்டம்
மாவட்டம்
போன்
(அலுவலகம்)
: (வீடு) (செல்)
|
சந்தா செலுத்தும் முறை
ரொக்கம் DD வரைவோலை / MO-மணியார்டர் * வரைவோலையை Sri Agathiar Sanmaarga Charitable Trust என்ற
பெயரில் எடுக்கவும். * வரைவோலையை payable at Trichy (or) Thuraiyur என்று எடுக்கவும்.
தேதி :
செலுத்துபவர் கையொப்பம்
படிவத்தை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
ஞானத்திருவடி - மாத இதழ்
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை ஓங்காரக்குடில், 113-நகர்விரிவாக்கம், துறையூர் - 621 010. திருச்சி மாவட்டம்.
ஓங்காரக்குடில் அலுவலக உபயோகத்திற்கு மட்டும்
-
ரசீது எண் : ......................தேதி : ......................... ரூபாய் : ............... சந்தாதாரர் முகவரி மாற்றம் இருப்பின் கடிதம் மூலம் தெரிவிக்கவும்.
---

Comments